search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதா-ருக்மணி கோவில் கும்பாபிஷேகம்
    X

    ராதா-ருக்மணி கோவில் கும்பாபிஷேகம்

    • புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூர் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி பஜனை கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊர் கவுண்டர் கே.ஜி. சரவணன், ஊர் தர்மகர்த்தா டி. சிவாஜி கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் ஊர் கவுண்டர்கள் முனிசாமி, சாமிக்கண்ணு, முன்னாள் தர்மகர்த்தா நடராஜன், வார்டு உறுப்பினர் கீதா ராஜசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் இந்த விழாவில் ஜோலார்பேட்டை சுற்று பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புனித தீர்த்தம் பெற்று ராதா -ருக்மணி சமேத வேணுகோபால சுவாமியின் அருளைப் பெற்றனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×