search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையர்கள்"

    • கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சொகுசு வாழ்க்கை நடத்தினர்.
    • பெண்களை குறிவைத்து தாக்கி நகைகளை ஒரு கும்பல் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக வாகனங்களில் செல்லும் பெண்களை குறிவைத்து தாக்கி நகைகளை ஒரு கும்பல் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் காப்பிகாடு பகுதியை சேர்ந்த டயானா என்ற பெண்ணிடம், 16½ பவுன் தங்க சங்கிலியை கடந்த 4-ந் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக மார்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த சாலையோரம் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் டயானாவிடம் நகை பறித்ததாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த செய்யது அலிகான் (வயது 24), அப்துல் ராசிக்(29) ஆகியோரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பல் தலைவனாக சேக்ஜாமான் மைதீன் என்பவர் செயல்பட்டதும் இந்தக் கும்பல் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள சேக்ஜாமான் மைதீனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள், அதில் கிடைக்கும் பணத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று சொகுசாக வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவு
    • இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை

    நாகர்கோவில் :

    தென் தாமரைகுளம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு வருவது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

    போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்ப டவில்லை என்பது பொது மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் சாமி தோப்பு பகுதியில் நிறுத்தப்ப ட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நேற்று மர்மநபர்கள் திருடி சென்று ள்ளனர். இதுகுறித்து தெ ன்தாமரைகுளம் போலீ சில் தகவல் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    மேலும் கொள்ளையர்கள் திருடிச் சென்ற பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் 2 பேர் நீண்ட நேரமாக நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தென்தாமரைகுளம் போலீஸ் நிலைய பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் போலீசாரின் இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    போலீசார் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதால்தான் இந்த திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    • சி.சி.டி.வி. கொள்ளையர்கள் உருவம் சிக்கியது
    • கொள்ளையர்களை பிடிக்க 2 தனி படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது

    கன்னியாகுமரி :

    தெங்கம்புதூர் சாஸ்தான் கோவில்விளை பகுதியை சேர்ந்தவர் தானு. இவரது மகன் சரவண முருகன் (வயது 61). இவர் நெல்லை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்பொழுது சரவண முருகன் தியாகராஜநகர் பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு மே மாதம் தானு இறந்துவிட்டார். இதையடுத்து சொந்த ஊரான தெங்கம்புதூர் சாத்தான்கோவில்விளையில் கல்லறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை பார்ப்பதற்காக சரவண முருகன் ஊருக்கு வந்திருந்தார்.

    இங்குள்ள வீட்டில் சரவண முருகன் இருந்தார். அப்போது வீட்டின் பின் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அவரது பேக்கில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் அவரது பர்சில் இருந்த 4,500 பணத்தையும், ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை திருடி சென்றனர். மேலும் வீட்டில் இருந்த குத்துவிளக்கையும் எடுத்துச்சென்று விட்டனர்.

    குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பேக்கில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பதை பார்த்து சரவணமுருகன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சரவண முருகன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் 3 பேர் சரவண முருகன் வீட்டிற்குள் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 2 தனி படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பணம் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரையில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கோரிப்பாளை யம் ஜம்புராபுரம் தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி ரேகா (வயது 37). இவர் இரவு கணவர் லெனினுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அவர்கள் விளாங்குடி பகுதி யில் சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அவர்கள் ரேகா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த ரேகா கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    மதுரை கருப்பாயூரணி, மீனாட்சி நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சசிரேகா (46). இவர் நேற்று இரவு மோட் டார் சைக்கிளில் கோமதி புரத்துக்கு சென்றார். அந்த வழியாக மோட்டார் சைக்கி ளில் வந்த 2 மர்ம நபர்கள் சசிரேகா அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இது பற்றி சசிரேகா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த 2 நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? என்பது ெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் தப்பியவர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
    • 4 பவுன் நகையை பறித்து விட்டு அந்த வாலிபர் ஓட்டம் எடுத்தார்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் படுவாக்க ரையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71). இவர் செம்பொன் விளையில் நாட்டு மருத்துவ வைத்தியசாலை நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை இவர் நோயாளி ஒருவருக்கு மருந்து எண்ணை கொடுத்து விட்டு உள் அறையில் கையை கழுவிக்கொண்டிருந்தார். அப்போது வைத்திய சாலைக்குள் நுழைந்த ஒரு வாலிபர், ஜார்ஜை பின்னால் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் அவர் நிலைகுலைந்த நேரத்தில் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு அந்த வாலிபர் ஓட்டம் எடுத்தார்.

    இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஜார்ஜ், பின்னர் சுதாரித்துக் கொண்டு திருடன்...திருடன்.. என கூச்சலிட்ட படியே விரட்டினார். அப்போது சாலையில் 2 பேர் மோட்டார் சைக்கிளுடன் தயாராக இருந்துள்ளனர். நகை பறித்த வாலிபர் அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி யதும், 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    கொள்ளையர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், குளச்சல் ரோடு நோக்கி சென்றது. இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசில் ஜார்ஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வைத்திய சாலைக்குள் புகுந்து வைத்தி யரிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று மாலையில் குழந்தைகளை அழைப்பதற்காக சுனிதா மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • 3 பேரும் முககவசம் அணிந்து பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவு

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே கொற்றிக்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38), லாரி டிரைவர்.

    இவரது மனைவி சுனிதா (36) இவர்களுக்கு ஒரு மகளும் ஒருமகனும் உள்ளனர்.மகள்ஏற்ற கோடு பகுதி யில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு மகன் மூன்றாம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் குழந்தைகளை பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சுனிதா அழைத்து செல்வது வழக்கம். நேற்று மாலையில் குழந்தைகளை அழைப்பதற்காக சுனிதா மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மூவாற்றுமுகம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் சுனிதாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தனர்.இதையடுத்து சுனிதா அவர்களுடன் போராடினார். உடனே அந்த நபர்கள் சுனிதாவை சரமாரியாக தாக்கினார்கள்.இதில் அவர் கீழே தவறி விழுந்தார். இதற்குள் அந்த வாலிபர்கள் நகையுடன் தப்பி ஓடிவிட்டனர்.

    படுகாயம் அடைந்த சுனிதாவை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது பற்றி திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த னர். அப்போது கொள்ளை யர்கள் 3 பேரும் முககவசம் அணிந்து பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கொள்ளையடிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது.

    மேலும் மாவட்டம் முழு வதும் கொள்ளையர்கள் குறித்த விவரங்கள் தெரி விக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள நகைக்கடையில் வாலிபர் ஒருவர் நகையை விற்பனை செய்வதற்காக வந்தார். நகை கடைக்காரர் நகை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். உடனே இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்தனர்.

    பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் திருவட்டார் பகுதியில் நடந்த செயின் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் இரண்டு வாலிபர்களையும் போலீ சார் பிடித்தனர்.பிடிபட்ட மூன்று பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்டவர்களில் ஒருவர் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மற்ற இருவரும் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மாவட்டத்தில் வேறு சில பகுதிகளிலும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அவர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கலக்கி கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இவர்களை பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. மேலும், கொள்குளை சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுப்பெற்றது  இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலிஸ் சூப்பரண்டு கரிகால் பாரிசங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.  கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்கள் வேளாங்கண்ணி பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் போலீசார் வேளாங்கண்ணிக்கு விரைந்து சென்றனர். அங்கு 2 வாலிபர்களை போலீசார் பிடித்து அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்  கடலூர் சிங்காரத்தோப்பு சேர்ந்த விக்னேஷ் (வயது 23), கடலூர் முதுநகர் சேர்ந்த பிரகாஷ் (வயது 22) என்பது தெரியவந்தது. இவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவிலில் சி.சி.டி.வி. கேமராவை சேதப்படுத்தி உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது. பண்ருட்டி, நெல்லிக்குப்பம், விருதாச்சலம், புதுச்சேரி மாநிலம் முள்ளோடை, காரைக்கால், நாகப்பட்டினம், பழனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் 2 வாலிபர்களும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது                                 .

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே 2 வாலிபர்கள் கோவில் பூட்டை உடைத்து திருடுவதற்கு வந்தபோது, அங்கு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்ததால் பயத்தில் அதிகாலை 3 மணி அளவில் சாலை ஓரத்தில் இளம் பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது இவர்கள் திருடுவதற்கு குறிக்கீடாக இருப்பதால் சாலை ஓரத்தில் இருந்த இளம்பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று சாலையில் இறக்கி விட்டு, மீண்டும் கோவிலுக்கு வந்து திருடி சென்ற சுவாரசிய சம்பவம் தெரியவந்துள்ளது. எங்கெங்கு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கலக்கி கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் மாமனாரின் வீட்டில் விருத்தாச்சலத்தில் தங்கியுள்ளார்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியில் வாகீசம்பிள்ளை நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் கிருஷ்ணராஜ். இவர் நெய்வேலி டவுன்ஷிப்பில் கார் உதிரி பாகங்கள் விற்பனை கடை சொந்தமாக வைத்துள்ளார்கிருஷ்ணராஜ் மனைவிக்கு குழந்தை பிறந்து 4 மாதம் ஆன நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் மாமனாரின் வீட்டில் விருத்தாச்சலத்தில் தங்கியுள்ளார்நேற்று காலை வேலு அவரது மனைவியும் தனது சொந்த ஊரான ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையில் உள்ள விவசாய விளை நிலங்களை பார்ப்பதற்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

    இதையடுத்து மாலை 4:30 மணிக்கு திரும்பி அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்து போது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 5பவுன் நகை, 14,000பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து வடலூர் போலீ ஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

    தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

    • தாய்-மகள் கொலை வழக்கு விசாரணை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • கொள்ளையர்கள் வீட்டை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த 11-ந் தேதி கொள்ளையர்கள் வீடு புகுந்து தாய்-மகளை கொடூரமாக கொலை செய்து, திருமணத்திற்காக வைத்திருந்த 60 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்துச் சென்றனர்.

    இந்த சம்பவத்தில் கொலையுண்ட வேலுமதியின் மகன் மூவரசு என்பவரையும் கொள்ளையர்கள் வெட்டி னர். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

    தாய்-மகள் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலக்குவதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை கொள்ைளயர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

    டி.ஐ.ஜி. துரை ஆலோசனையின்பேரில் விசாரணை அதிகாரியாக தேவகோட்டை டி.எஸ்.பி. கணேஷ் குமார் நியமிக்கப் பட்டார்.

    தேவகோட்டை பகுதி களில் இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவுகள் உடைக்கப்பட்டு விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டும், பொருட்கள் இல்லை என்றால், கொள்ளையர்கள் வீட்டை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வந்தது.

    இந்த நிலையில் வீட்டில் கொள்ளையடிக்க சென்ற மர்ம நபர்கள் தாய்-மகளை வெட்டி கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இரட்டை கொலை நடந்து 19 நாட்கள் ஆகியும் துப்பு துலங்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே காரைக்குடியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை அகற்றியதால் காரைக்குடி தாசில்தார் மற்றும் தேவகோட்டை டி.எஸ்.பி. கணேஷ்குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

    இரட்டைக் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட கணேஷ்குமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் இரட்டை கொலை வழக்கு விசாரணை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இரட்டை கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களை உடனடியாக கைது செய்யாவிட்டால் கிராம மக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

    • ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினார்கள்.

    மதுரை

    மதுரை மாநகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து ரவுடிகள் கொள்ளை யடிப்பதற்காக, ஆயுதங்க ளுடன் ஊடுருவி இருப்பதாக மாநகர போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இன்று அதிகாலை கீரைத்துறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் 2 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினார்கள்.

    இருந்தபோதிலும் தனிப்படை போலீசார் 2 பேரையும் பிடித்தனர். அப்போது அவர்கள் அரிவாள், உருட்டுக்கட்டை, மிளகாய் பொடி மற்றும் கயிறு ஆகியவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் பிடிபட்ட 2 பேரையும், போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிந்தாமணி கண்ணன் காலனி, சோலைமாரி மகன் திருக்குமார் என்ற கோழி குமார் (வயது 19), மேலதோப்பு, தாயுமானவசாமி நகர், நிறைகுளத்தான் மகன் சதீஷ்குமார் (22) என்பது தெரியவந்தது. கோழிகுமார் மீது கீரைத்துறை போலீசில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சதீஷ்குமார் மதுரை மட்டுமின்றி, ராமநாதபுரம் மாவட்டத்திலும் மேலத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களிலும் தொடர்புடையவன். அவன் மீது கோவிலாங்குளம் போலீஸ் சரகம் உள்பட மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மேலும் பிடிபட்ட 2 பேரும் மதுரை மாநகரில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.

    • பெண்ணிடம் நகை பறித்த போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொள்ளையர்கள் சிக்கினர்.
    • 2 மாதங்களுக்கு பிறகு மதுரைக்கு திரும்பிய தகவல் போலீசுக்கு கிடைத்தது.

    மதுரை

    மதுரை திருப்பாலை, பொன்விழா நகரை சேர்ந்தவர் அகி லாண்டேசுவரி (வயது 39). இவரது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சம்பவத்தன்று அகிலா ண்டேசுவரி ஓட்டலில் சாப்பாடு வாங்கிவிட்டு வீடு திரும்பி ெகாண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பின் தொடர்ந்து அகிலாண்டேசுவரி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இந்த வழக்கில் தொடர்பு டைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிய வந்தது. அவர்கள் மதுரையில் இருந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் இருவரும் 2 மாதங்களுக்கு பிறகு மதுரைக்கு திரும்பிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த மூன்றுமாவடி மகாலட்சுமி நகர் உப்பிலி மாடசாமி என்ற மருது(25), வளர்நகர், அம்பலகாரன்பட்டி செல்வம் மகன் நவநீதன் (23) ஆகியோரை ேபாலீசார் கைது செய்தனர்.

    இரவு நேரத்தில்2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து தூக்கி சென்றது சி.சி. டி.வி காட்சியில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருவேட்டக்குடி கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு போனது. இதனை அடுத்து இது குறித்து கோவில் நிர்வாகம், கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இரவு நேரத்தில்2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து தூக்கி செல்லும் சி.சி. டி.வி காட்சி தற்போது சமூக வலைத்தளங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து, மேலும் சி.சி. டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    ×