என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother daughter"

    • திட்டக்குடி அருகே: நள்ளிரவில் தாய் - மகளை தாக்கி நகை மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது.
    • சுதாரித்துக் கொண்ட திருடர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரமேஸ்வரியின் கையில் கிழித்து விட்டு வலது காலில் கட்டையால் பலமாக தாக்கினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வடகரை கிராமத்தை சேர்ந்தவர் சேகர் விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி(வயது43). இவர்களது மகள் பவானி(24) மற்றும் 9 மாத குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப் போது இரவு சேகர் மட்டும் வீட்டின் பின்புறம் உள்ள கரும்பு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்று விட்டார். இந்நிலையில் இரவு சுமார் ஒரு மணி அளவில் மூன்று மர்ம நபர்கள் வீட்டில் பின்பக்க கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்றனர். அப்போது தூக்கத்தில் இருந்த பவானி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலி செயினை பறித்தனர். இதனால் பவானியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் படுத்திருந்த பரமேஸ்வரி முழித்துக் கொண்டு அருகில் கிடந்த அருவாமனையை எடுத்து திருடர்களை வெட்ட முயன்றார்.

    சுதாரித்துக் கொண்ட திருடர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரமேஸ்வரியின் கையில் கிழித்து விட்டு வலது காலில் கட்டையால் பலமாக தாக்கினர். தொடர்ந்து பவானியின் முகத்தில் செங்கலால் தாக்கினர். இவர்களின் சத்தத்தால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஓடி வந்து மர்ம நபர்களை துரத்தி பிடிக்க முயற்சித்தனர் அப்போது திருடர்கள் அணிந்திருந்த செருப்பை விட்டு விட்டு அருகில் உள்ள கரும்பு வயலில் குதித்து தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் போலீஸ் டி.எஸ்.பி. அங்கித்ஜெயின் மற்றும் பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருட வந்த மர்ம நபர்கள் கால் சட்டை மற்றும் டீ-ஷர்ட் அணிந்தும் முகத்தில் முகமூடி அணிந்தும் திருட வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் யாரேனும் வந்தது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்

    அமைச்சர் மீது புகார் கூறிய தாய் மற்றும் மகள் மீது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ராயபுரம்:

    பிராட்வே, பிரகாசம் சாலையைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் சிந்து.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் மீது சர்ச்சைக்குரிய புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான வாட்ஸ்-அப் உரையாடலும் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிந்து, அவரது தாய் சாந்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் கொடுத்துள்ள புகாரில், “ஒரு வழக்கு சம்பந்தமாக சாந்தியும், சிந்துவும் என்னை சந்தித்தனர். இதற்கான செலவு பணத்தை தரவில்லை. இதனை கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” என்று தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் சாந்தி, சிந்து மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த புகார் மனு கடந்த செப்டம்பர் மாதம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
    ஆண்டிப்பட்டி அருகே தாய், மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள சுந்தர்ராஜபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 42). இவருக்கும் மணிமேகலை (40) என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஷாலினி (12) என்ற மகள் உள்ளார்.

    கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த முத்துச்சாமி அழகம்மாள் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த அழகம்மாள் மற்றும் முத்துச்சாமி ஆகியோர் மணிமேகலை வீட்டுக்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

    இது குறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் மணிமேகலை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முத்துச்சாமி மற்றும் அழகம்மாளை கைது செய்தனர்.

    ×