என் மலர்
செய்திகள்

அமைச்சர் மீது புகார் கூறிய பெண்-தாய் மீது வழக்கு
அமைச்சர் மீது புகார் கூறிய தாய் மற்றும் மகள் மீது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரம்:
பிராட்வே, பிரகாசம் சாலையைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் சிந்து.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் மீது சர்ச்சைக்குரிய புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான வாட்ஸ்-அப் உரையாடலும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிந்து, அவரது தாய் சாந்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் கொடுத்துள்ள புகாரில், “ஒரு வழக்கு சம்பந்தமாக சாந்தியும், சிந்துவும் என்னை சந்தித்தனர். இதற்கான செலவு பணத்தை தரவில்லை. இதனை கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” என்று தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் சாந்தி, சிந்து மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு கடந்த செப்டம்பர் மாதம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
பிராட்வே, பிரகாசம் சாலையைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் சிந்து.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் மீது சர்ச்சைக்குரிய புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான வாட்ஸ்-அப் உரையாடலும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிந்து, அவரது தாய் சாந்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் கொடுத்துள்ள புகாரில், “ஒரு வழக்கு சம்பந்தமாக சாந்தியும், சிந்துவும் என்னை சந்தித்தனர். இதற்கான செலவு பணத்தை தரவில்லை. இதனை கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” என்று தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் சாந்தி, சிந்து மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு கடந்த செப்டம்பர் மாதம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
Next Story