search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமிதோப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற கொள்ளையர்கள்
    X

    சாமிதோப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற கொள்ளையர்கள்

    • சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவு
    • இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை

    நாகர்கோவில் :

    தென் தாமரைகுளம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு வருவது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

    போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்ப டவில்லை என்பது பொது மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் சாமி தோப்பு பகுதியில் நிறுத்தப்ப ட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நேற்று மர்மநபர்கள் திருடி சென்று ள்ளனர். இதுகுறித்து தெ ன்தாமரைகுளம் போலீ சில் தகவல் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    மேலும் கொள்ளையர்கள் திருடிச் சென்ற பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் 2 பேர் நீண்ட நேரமாக நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தென்தாமரைகுளம் போலீஸ் நிலைய பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் போலீசாரின் இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    போலீசார் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதால்தான் இந்த திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    Next Story
    ×