என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தாய் மகள்"
- மகளுக்கும் போலீஸ் சீருடையை அணிவித்து பணியாற்ற செய்ய வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவாகும்.
- இருவரும் விரைவில் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்படுவோம் என்று நம்பிக்கை உள்ளது.
திருப்பதி:
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் சென்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. விவசாயி. இவரது மனைவி நாகமணி (37). இவர்களுக்கு திரிலோகினி (21) என்கிற மகள் உள்ளார். நாகமணி தனது குடும்பத்தை நடத்த ஆரம்ப கட்டத்தில் அங்கன்வாடி ஆசிரியராகவும், இதனை தொடர்ந்து, விளையாட்டில் அதிக ஆர்வமுள்ள காரணத்தினால் கணவரின் ஒத்துழைப்போடு இவர் கோகோ, கபடி, வாலிபால் போன்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.
இதனால் மாநில, தேசிய அளவில் விளையாட்டில் 10 பதக்கங்களையும், 5 கோப்பைகளையும் வென்று விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்தார். இதனிடையே கடந்த 2007-ம் ஆண்டு ஊர்க்காவல் படையில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து அவர் கடந்த 2020-ம் ஆண்டு பெண் போலீசாக பணியில் இணைந்தார்.
இவர் தற்போது தெலுங்கானா மாநிலம், முலுகு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தாயைப் போலவே தானும் பெரிய போலீஸ் அதிகாரியாக வேண்டுமென நாகமணியின் மகள் திரிலோகினியும் பட்டமேற்படிப்பை படித்து கொண்டே, போலீஸாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தெலுங்கானாவில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடந்தது.
இதற்கு தாயும், மகளும் ஒன்றாக விண்ணப்பித்தனர். பல நூற்றுக்கணக்கானோருடன் தாயும், மகளும் போட்டி போட்டுக் கொண்டு இதில் பங்கேற்றனர். இதனை அறிந்த பலர் ஆச்சரியப்பட்டனர். இருவரும், உடல் தகுதியில் தேர்வாகிவிட்டனர். நீளம் தாண்டுதல், 800மீ ஓட்டப் பந்தயத்தில் இருவரும் தேர்வாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
அடுத்ததாக எழுத்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதுகுறித்து நாகமணி கூறும் போது, இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும். மகளுடனே போட்டி போடும் நிலை வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
மகளுக்கும் போலீஸ் சீருடையை அணிவித்து பணியாற்ற செய்ய வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவாகும். இருவரும் விரைவில் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்படுவோம் என்று நம்பிக்கை உள்ளது. எவ்வளவு இருந்தாலும் அவள் எனக்கு போட்டியாளர்தான்" என கூறி சிரித்தார்.
இவர்களில் யார் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்கள்? அல்லது இருவருமே சப்-இன்ஸ்பெக்டர் பணிக்குத் தேர்வாகி விடுவார்களா? என அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, போலீசாரும் அவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
- ஹோலி கல்லூரி படிப்பை முடித்த பிறகு விமானப் பணிப்பெண்ணாகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.
- திருமணமாகி குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு சிரமங்களுக்கு மத்தியில் விமான பணியை விரும்பி தொடர்ந்திருக்கிறார்.
ஒரே துறையில் பணியாற்றும் குடும்பத்தினர் எப்போதாவது ஒன்றாக இணைந்து பணிபுரியும் வாய்ப்பு அமைவதுண்டு. அப்படி நடக்கும் நிகழ்வுகள் அபூர்வமான சாதனையாக மாறிவிடுவதுண்டு. அமெரிக்காவில் அப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பைலட்டுகளாக பணிபுரியும் தாய்-மகள் இருவரும் இணைந்து விமானம் ஓட்டி அசத்தி இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் சவுத் வெஸ்ட் ஏர்லைன்சில் இருவரும் பணிபுரிகிறார்கள். தாயார் ஹோலி பெடிட், கேப்டன் அந்தஸ்தில் இருக்கிறார். மகள் கீலி பெட்டிட் முதல் நிலை அதிகாரியாக பணிபுரிகிறார். இருவரும் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்திலுள்ள டென்வரில் இருந்து செயிண்ட் லூயிஸ் நகருக்கு விமானத்தை இயக்கி இருக்கிறார்கள்.
இரு நகரங்களுக்கு இடையே விமான பயண தூரம் சுமார் 2 மணி நேரம். இதன் மூலம் அமெரிக்காவில் விமானம் இயக்கிய முதல் தாய்-மகள் என்ற பெருமையை பெற்றுள்ளார்கள். இருவரும் விமானம் ஓட்டும் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி இருக்கிறது. ''எங்களுக்கும், சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸுக்கும் இது உற்சாகமான நாள்.
மிகவும் சிறப்பான நாளும் கூட. சவுத் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கும் முதல் தாய்-மகள் நாங்கள்தான் என்பது பெருமிதமாக இருக்கிறது. என் கனவும் நனவாகி உள்ளது. நான் இந்த தொழிலை காதலிக்கிறேன். என் பிள்ளைகளில் ஒருவர், என்னை பின்பற்றி இந்த தொழிலில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து விமானம் ஓட்டியது வரலாற்று நிகழ்வாக பதிவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்கிறார் ஹோலி.
ஹோலி கல்லூரி படிப்பை முடித்த பிறகு விமானப் பணிப்பெண்ணாகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். திருமணமாகி குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு சிரமங்களுக்கு மத்தியில் விமான பணியை விரும்பி தொடர்ந்திருக்கிறார். விமானியாக வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
பின்பு விமானி உரிமம் பெற்று பைலட்டாக மாறிவிட்டார். தாயாரை பார்த்து கீலிக்கும் விமானம் ஓட்டும் ஆசை பிறந்திருக்கிறது. தனது 14 வயதில் விமானி ஆக வேண்டும் என்று கனவு காண தொடங்கி இருக்கிறார்.
கடந்த 2017-ம் ஆண்டு பைலட் உரிமம் பெற்று விமான நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியாற்றத் தொடங்கினார். 2018-ம் ஆண்டு விமானியாக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இருப்பினும் இப்போதுதான் தாய்-மகள் இருவரும் ஒன்றாக இணைந்து விமானம் ஓட்டி இருக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்