search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதி"

    • செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாட்டு கைதிகள் வெவ்வேறு அறைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
    • கைதி இஜிபா அகஸ்டின் சிபிக்கி வேறு அறைக்கு மாற்றுவது தொடர்பாக கடும் வாக்குவாதம் செய்தார்.

    செங்குன்றம்:

    புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் ஒரு அறையில் இருந்த வெளிநாட்டு கைதிகள் 4 பேர் செல்போன் பயன்படுத்தி வந்தது அதிகாரிகள் சோதனையில் தெரிந்தது.

    இதையடுத்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாட்டு கைதிகள் வெவ்வேறு அறைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

    நேற்று இரவு நைஜீரியா நாட்டை சேர்ந்த போதைப் பொருள் வழக்கில் தண்டனை பெற்று வரும் இஜிபா அகஸ்டின் சிபிக்கி (41) என்பவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.

    அப்போது அவ்வழியாக சிறை துணை ஜெயிலர் சாந்தகுமார் நடந்து வந்து கொண்டு இருந்தார். அவ ரிடம் கைதி இஜிபா அகஸ்டின் சிபிக்கி வேறு அறைக்கு மாற்றுவது தொடர்பாக கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் அவரை தாக்கி சாப்பாட்டு தட்டை வீசினார். இதில் துணை ஜெயிலர் சாந்தகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் நைஜீரியா நாட்டு கைதி இஜிபா அகஸ்டின் சிபிக்கி மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    புழல் சிறையில் துணை ஜெயிலர் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருடிய நகைகளை எங்கே வைத்துள்ளார் என விசாரணை நடத்துவதற்காக கஸ்டடி எடுத்தனர்.
    • தனிப்படை அமைத்தும் தப்பியோடிய பாலமுருகனை தேடி வருகின்றனர்.

    கொடைரோடு:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவர் மீது திருட்டு மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் இடுக்கி மாவட்டம் மறையூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் திருடிய நகைகளை எங்கே வைத்துள்ளார் என விசாரணை நடத்துவதற்காக கஸ்டடி எடுத்தனர்.

    கடந்த 17ம் தேதி பாலமுருகனை காவலில் எடுத்த போலீசார் திருச்சிக்கு அழைத்து சென்றனர். நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடி அருகே வந்தபோது போலீசாரிடம் பாலமுருகன் டீ சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி அங்கு இறங்கிய போலீசார் பாலமுருகனுக்கு டீக்கடையில் பிரட் மற்றும் டீ வாங்கி கொடுத்தனர். அப்போது திடீரென சிறுநீர் கழிக்கச் செல்வதாக கூறிய பாலமுருகன் கைவிலங்குடன் இருட்டில் தப்பியோடினார்.

    இதுகுறித்து நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொடைரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் தனிப்படை அமைத்தும் தப்பியோடிய பாலமுருகனை தேடி வருகின்றனர்.

    • போலீசார் கார்த்திக்கை நேற்று மதியம் கைது செய்தனர்.
    • ஆஸ்பத்திரியில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கார்த்திக் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒரு செல்போன் மற்றும் ரூ.1,500-ஐ மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றார்.

    இதுகுறித்து கடையின் உரிமையாளர் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில், தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்த பழனிமுருகன் மகன் பரத் என்ற கார்த்திக் (வயது 19) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கார்த்திக்கை நேற்று மதியம் கைது செய்தனர். பின்னர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அவரது கையில் விலங்கு மாட்டி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.

    இருந்தபோதும் ஆஸ்பத்திரியில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கார்த்திக் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிவிட்டார். இதனால் மாநகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு முக்கிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து போலீசார் கார்த்திக்கை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் மேலக்கரையில் உள்ள தனது வீட்டுக்கே சென்று பதுங்கி இருந்தது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

    • செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் செல்வகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
    • தண்டனையை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து விடுதலையாகினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் காவல் நிலைய சரகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு செட்டிம ண்டபம் பைபாஸ் சாலையில் செல்வகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, இந்த கொலைக்கு பழிக்கு பழியாக சரவணன் என்பவரும் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக லாலி மணிகண்டன், பூபதி, மகாமணி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு தஞ்சை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் 3 பேருக்கும், கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் இந்த தண்டனையை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து விடுதலையாகினர்.

    அரசு இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தஞ்சை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

    அதனைத்தொடர்ந்து, மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த லாலி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த பூபதி மற்றும் மகாமணியை பிடிக்க திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த மகாமணியை கைது செய்து தஞ்சை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மதுரை மத்திய சிறையில் போக்சோ விசாரணை கைதி திடீரென இறந்தார்.
    • சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    விருதுநகர மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கொள்ளக் கொண் டான் நக்கனேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் தாசையா (வயது62). இவர் கடந்த 2019-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் விசா ரணை கைதியாக அடைக்கப் பட்டிருந்தார்.

    கடந்த சில மாதங்களாக தாசையாவுக்கு கிட்னி நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்ற உடல்நிலை மோசமாகவே தாசையா சிறையில் மயங்கி விழுந் தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் சிறை காவலர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தாசையா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறை அதிகாரி மகேஸ்வரி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாசையாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    சேலம்:

    கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாங்கா பிரபு (41). கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கிலும் தொடர்புடைய இவர் உள்பட மூன்று பேரை நேற்று விசாரணைக்கு சேலம் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.

    அப்போது கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் , சேலம் மத்திய சிறையில் பழங்களை வைத்து சாராய ஊறல் தயாரித்ததாக அதிகாரிகள் தன்னை 4 நாட்களுக்கு முன்பு தனி சிறையில் அடைத்தனர்.

    மேலும் பொய்யான தகவலை கூறி சிறைத்துறையினர் அடித்து துன்புறுத்துகிறார்கள். சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் உதவியுடன் தான் கஞ்சா, கைபேசி உள்ளிட்டவை சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டு சிறைவாசிகளால் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஆனால் நேற்று மாலை முதல் பிரபு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலையும் வழக்கம்போல அவருக்கு உணவு வழங்கியும் அவர் சாப்பிட மறுத்து விட்டார் . தொடர்ந்து அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை அவர் சாப்பிடவில்லை.

    மேலும் தன்னை தனி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் சிறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கு இடையே நேற்று சிறைத்துறை டிஐஜி மற்றும் குழுவினர் சேலம் மத்திய சிறையில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த பிப்ரவரி மாதம் தனது அறையில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
    • திடீரென்று காவலர் பிரித்விராஜை போலீஸ் பணியை செய்யவிடாமல் தடுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மத்திய சிறையில் போலீசாரை கைதி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடலூர் அடுத்த கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அவர்கள் செய்த குற்றத்திற்காக அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் சென்னை எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகர் கடந்த ஒரு வருட காலமாக கைதியாக உள்ளார். இவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சிறை உதவி அலுவலர் மணிகண்டனுக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த முன்விரோ தம் காரணமாக எண்ணூர் தனசேகர், மணிகண்டன் குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சிதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிறை காவலர் ஒருவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறி அவரையும் கைது செய்தனர்.

    கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மீண்டும் எண்ணூர் தனசேகர் அறையில் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள வெளிச்சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தனது அறையில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதன் பிறகு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக எண்ணூர் தனசேகரன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். பின்னர் மாலை மீண்டும் சிறை வளாகத்திற்கு எண்ணூர் தனசேகரனை போலீசார் அழைத்து வந்தனர். இதனையடுத்து இன்று காலை கடலூர் மத்திய சிறை அலுவலர் தமிழ்மாறன் உத்தரவின் பேரில் சிறப்பு சோதனை குழுவில் 2-ம் நிலை காவலராக பணிபுரியும் பிரித்விராஜ் (வயது 28) கைதி எண்ணூர் தனசேகர் அடைக்கப்பட்டுள்ள வெளிச்சிறை எண் 1-க்கு சென்று செல்போன் ஏதும் இருக்கிறதா? என்று சோதனை செய்தார்.

    அப்போது கைதி எண்ணூர் தனசேகர், காவலர் பிரித்விராஜிடம் நான் இருக்கும் அறையை யாரும் சோதனை செய்யக் கூடாது. அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் எனக் கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். பின்னர் திடீரென்று காவலர் பிரித்விராஜை போலீஸ் பணியை செய்யவிடாமல் தடுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த காவலர்கள் பிரித்திவிராஜை மீட்டு உடனடியாக சிறை வளாகத்தில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் எண்ணூர் தனசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது.
    • 10 பெரிய அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற 10 பெண் கைதிகள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    10 பெரிய அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு கொலை மிரட்டல் இருப்பதால் ஜெயிலில் பாதுகாப்பு மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதற்கு மற்ற கைதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளேடு வைத்திருந்ததாக சந்தேகம் ஏற்பட்ட ஒரு கைதி வேறொரு அறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு மற்ற கைதிகள் எதிர்ப்பு தெரிவித்து வார்டன்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தனர். அப்போது சிறையில் இருந்த பொருட்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த உயர் போலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கைதிகளை சமரசம் செய்தனர். மேலும் ரகளை செய்த கைதிகள் மதுரை மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர். இதற்காக கைதிகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட போது ஒரு கைதி தலையால் வேன் கண்ணாடியில் மோதினார். இதில் கண்ணாடி உடைந்து அந்த நபருக்கும் காயம் ஏற்பட்டது.

    மேற்கண்ட சம்பவங்களால் விருதுநகர் மாவட்ட ஜெயில் போர்க்களமானது.இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக ஜெயில் போலீஸ் சூப்பி ரண்டு ரமா பிரபா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார்.

    இதன் அடிப்படையில் ஜெயிலில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், 3 பேரையும் தாக்கியதாகவும் வடிவேல் முருகன், கண்ணன், மலைக்கண்ணன், முத்துப்பாண்டி, முத்தழகு, முத்துகிருஷ்ணன், ராமர், பாலாஜி, பார்த்தி, ஜோதி மணி, செந்தில்குமார், பால குமார், கார்த்திக் பாண்டி உள்பட 23 கைதிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தகவல் அறிந்த ஜெயில் போலீஸ் சூப்பிரண்டு ரமா பிரபா மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
    • வேனில் ஏறிய ஒரு கைதி திடீரென தலையால் கண்ணாடியில் மோதி ரகளை செய்தார்.

    விருதுநகர்:

    விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 10 பெண் கைதிகள் உள்பட 255 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    10 அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல்கள் இருப்பதால் ஜெயிலில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இவர்கள் சிறை அறையில் இருந்து வெளியே வரும்போது மற்ற அறையில் இருக்கும் கைதிகள் வெளி வருவதற்கு அனுமதியில்லை. பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கைதானவர்கள் தங்களது அன்றாட வேலைகளை முடித்து சிறை அறைக்கு சென்றபின் மற்ற கைதிகள் சிறை வளாகத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் குறிப்பிட்ட கைதிகளுக்கு உணவு, தங்குமிடம் போன்றவற்றில் பாரபட்சம் காட்டுவதாக புகார்கள் எழுந்தது.

    இந்நிலையில் சிறையில் 5-வது அறையில் அடைக்கப்பட்டிருந்த வடிவேல் முருகன் என்ற கைதி பிளேடு வைத்திருப்பதாக ஜெயில் வார்டன்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த கைதியிடம் சோதனையிட்டபோது எதுவும் சிக்கவில்லை. அதன் பின் கைதி வடிவேல் முருகன் நேற்று 3-வது அறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு அவருடன் தங்கியிருந்த கைதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜெயில் வார்டன்களிடம் வாக்கு வாதம், ரகளையில் ஈடுபட்ட னர். மேலும் அவர்கள் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயில் போலீஸ் சூப்பிரண்டு ரமா பிரபா மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட 27 கைதிகளை மதுரை ஜெயிலுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று காலை முதற்கட்டமாக 13 கைதிகள் மதுரை ஜெயிலுக்கு கொண்டு செல்ல போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர். வேனில் ஏறிய ஒரு கைதி திடீரென தலையால் கண்ணாடியில் மோதி ரகளை செய்தார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டதுடன் வேன் கண்ணாடியும் உடைந்தது.

    அவருக்கு ஆதரவாக மற்ற கைதிகளும் கோஷமிட்டனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் 13 கைதிகள் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக ஜெயிலில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஜெயிலில் கைதிகளின் ரகளை போலீசாரிடம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

    • பஸ் நிலையம் அருகே சென்றபோது திடீரென குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.
    • சாலையின் தடுப்பு கல்லை தாண்டி குதித்து ஓடினார்.

     பல்லடம் :

    பல்லடத்தில் நேற்று முன்தினம் மாலை போலீசார் ஒரு குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு பல்லடம் பஸ் நிலையம் செல்வதற்காக அவரை அழைத்துக்கொண்டு கோவை - திருச்சி மெயின் ரோட்டில் நால்ரோடு பகுதியில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    பஸ் நிலையம் அருகே சென்றபோது திடீரென அந்த குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். போலீசார் துரத்தி பிடிக்க முயன்ற போது சாலையின் தடுப்பு கல்லை தாண்டி குதித்து ஓடினார். அப்போது எதிரே வந்த சிறிய சரக்கு வேனில் மோதி கீழே விழுந்தார்.இதையடுத்து அவரை அமுக்கிப் பிடித்த போலீசார் அவர்களது பாணியில் "கவனித்து" அவரை மீண்டும் பல்லடம் பஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்பொழுது பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலத்தின் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4-வது இடத்தை பிடித்தது.
    • அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத வெற்றி ஆகும்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 15,794 மாணவர்களில் 15,228 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18,533 மாணவிகளில் 18,265 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மொத்தமாக கோவை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 493 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.42 சதவீதமும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.55 என மொத்தமாக 97.57 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதன் மூலம் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 96.21 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று கோவை மாவட்டம் 4-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது வெளியான தேர்வு முடிவில் 97.57 சதவீதம் பெற்று மீண்டும் 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

    கோவையில் உள்ள மத்திய ஜெயில் கைதிகளில் 12 பேர் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத வெற்றி ஆகும்.

    • திருப்பூர் மாநகர பகுதியில் 8 சட்ட ஒழுங்குபோலீஸ் நிலையங்கள், 2அனைத்து மகளிர் நிலையங்கள், 2போக்குவரத்து போலீஸ் நிலையங்கள்செயல்பட்டு வருகின்றன.
    • குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரப்பகுதியில்உள்ள போலீஸ் நிலையங்களில் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு ஆய்வு மேற்கொண்டார்.திருப்பூர் மாநகர பகுதியில் 8 சட்ட ஒழுங்குபோலீஸ் நிலையங்கள், 2அனைத்து மகளிர் நிலையங்கள், 2போக்குவரத்து போலீஸ் நிலையங்கள்செயல்பட்டு வருகின்றன. இதில் அனுப்பர்பாளையம், கொங்கு நகர், கே.வி.ஆர். நகர், நல்லூர் என 4 சரகமாக பிரிக்கப்பட்டு 4 உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெளி மாநில,மாவட்ட மக்கள் அதிகம் தங்கி பணியாற்றும்திருப்பூர் மாவட்டத்தில்கொலை, கொள்ளை,ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள்அடிக்கடி நடைபெறுகிறது.

    இந்நிலையில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, அனுப்பர்பாளையம்,வடக்கு, தெற்கு, நல்லூர்போலீஸ் நிலையங்களில் திடீரென ஆய்வுமேற்கொண்டார். அப்போது அங்கிருந்தபொதுமக்களிடம் தங்கள்கோரிக்கைகள் குறித்துகேட்டறிந்தார். மேலும், போலீசாரிடம் போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். அேதபோல் நீண்ட நேரம்போலீஸ் நிலையங்களில் யாரையும் உக்கார வைக்காமல் ெபாதுமக்களின் குறைகளை கேட்க வேண்டும். குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். லாக்கப் மரணம் நிகழாமல் பார்த்துக்ெகாள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். 

    ×