search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்க்கும் கூட்டம்"

    • பிற்பகல் 2 மணி வரை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார்தலைமையில் நடைபெற உள்ளது.
    • விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கி ல்வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22- ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார்தலைமையில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண்விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்ந டை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கி யாளர்கள் மற்றும் பிறசார்பு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
    • 20-ந்தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது

    திருப்பூா்

    திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நாளை 20-ந்தேதி நடைபெறவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்தக் கூட்டத்துக்கு திருப்பூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமை வகித்து மின்நுகா்வோரிடமிருந்து குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்யவுள்ளாா்.கூட்டத்தில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • அதில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனு மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன், தலைமை நடந்தது.

    இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவா ரணம், மாற்றுத்திறனாளி கள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்ப டைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

    முன்னதாக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும், 12 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டும னைப்பட்டாக்களை யும் கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர் அனிதா, கலெக்ட ரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூ்டடம் நாளை நடக்கிறது.
    • இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

    மதுரை

    மதுரை வருவாய் கோட்டாட்சியரின் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை (13-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    மேற்படி சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான பவ்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்று கோல், காதொலி கருவி போன்ற உதவி உபகர ணங்கள், பலி பாஸ், மாதாந்திர உதவித் தொவை மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு உதவிகள் பெறும் பொருட்டு விண்ணப்பங்கள் அளித்திடலாம்.

    மேற்கண்டவாறு நடை பெறும் மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மதுரை வரு வாய் கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை மேற்கு வட்டம், மதுரை வடக்கு வட்டம் மற்றும் வாடிப்பட்டி வருவாய் வட்டங்களைச் சார்ந்த மாற்றுத்திறனாளி கள் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை (UD ID-Card) நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகிய வற்றுடன் மதுரை வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கி பயனடை யுமாறு தெரிவிக்கப்படு கிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (1-ந் தேதி) காலை 11 மணி அளவில் எழும்பூர் மலையப்பன் தெருவில் உள்ள செயற்பொறியாளர் கோட்ட அலுவலகம், ஆவடி என்.எம். ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் கோட்ட அலுவலகம், பெரம்பூர் எம்.இ.எஸ். ரோட்டில் உள்ள கி.வோ. செம்பியம் துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி நடக்கிறது.
    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம். அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கையில் ரூ.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • பொது மக்களிடம் இருந்து 327 மனுக்கள் பெறப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து 327 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் தொழில் முனைவோர் கடனுதவியும், 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பண்ணைசாரா கடனுதவி, 3 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 44 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ. 25 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினர்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ. 22 ஆயிரத்து 860 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்கள், அறிவுசார் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான நூல்கள், 1 மாற்றுத்திறனாளிக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் நியமனச் சான்று என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 64 ஆயிரத்து 800 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச் சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது
    • மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் இந்தக் கூட்டம் நடை பெறுகிறது.

    நாகர்கோவில், ஆக.22-

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் இந்தக் கூட்டம் நடை பெறுகிறது.

    கூட்டத்தில், ஜூலை மாத குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரால் நேரில் பெறப்படும். கோரிக்கை மனுக்கள் பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள மாற்றுத்திற னாளிகள் நல அலு வலகத்தில் செய்யப்பட்டி ருக்கும். கலெக்டரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏரியில் இருந்து வரும் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
    • ஜமாபந்தியில் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை,

    அரூர்,

    அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமை வகித்தார். இதில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், கே.ஈச்சம்பாடி வலதுபுற கால்வாயை துார்வார வேண்டும். அரூர் பெரிய ஏரியில் இருந்து வரும் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதே போல், குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் காணவில்லை. ஜமாபந்தியில் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, நிலம் அளவீடு செய்யக்கோரி விவசாயிகள் பணம் கட்டி ஓராண்டுக்கு மேலாகியும் அளவீடு செய்யப்படவில்லை. ஆனால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பணம் கட்டிய ஒரு சில நாட்களில் நிலம் அளவீடு செய்யப்படுகிறது என புகார் தெரிவித்தனர்.

    இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • விசைப்படகு மீனவர்களும் கடந்த காலங்களை போல் ஒற்றுமையாக இருந்து தொழில் செய்திட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் மூலம் மீனவர்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மீனவர்களிடம் 56 மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டதுடன் மீனவர்களிடம் கோரிக்கை கள் குறித்து கேட்டறிந்தார்.

    இக்கூட்டத்தில் மீனவர் கள் பிரதானமாக முன் வைத்த கோரிக்கையான மீனவர்களின் படகுகள் பாதிக்கப்பட்டு அதற்கான இழப்பீடு அரசு வழங்கி வந்த நிலையில் விடுபட்ட சிலருக்கு வழங்காமல் உள்ளதை விரைந்து அரசிடமிருந்து பெற்று தர வேண்டுதல் மற்றும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருபவர்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கொள்முதல் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டியும், மேலும் கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் நரம்பு வலைகளை தடுத்து நூல் வலைகளை பயன் படுத்த வேண்டி கேட்டு கொண்டார்கள்.

    பின்னர் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியதா வது:- மீனவர்களின் கோரிக்கைக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்பட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மீனவர் களுக்கு தங்கள் பொருளுக் குரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும். மேலும் மீனவர்கள் கோரிக்கையான வீட்டு மனை பட்டா தகுதி உடைய நபர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மீனவர்கள் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான இழப்பீடு தொகை உரிய காலத்தில் வழங்கிட மீன்வளத்துறை கண்காணிக்கப்பட்டு வரு கிறது.

    பொதுவாக அரசின் திட்டங்களை முழுமையாக உங்களுக்கு கொண்டு வந்து சேர்த்திட வேண்டும் என் பது தான் அலுவலர்களின் நோக்கம். அதிக நீளம் கொண்ட கடல் பகுதியான நமது மாவட்டத்தில் மீனவர்களின் நலனில் மாவட்ட நிர் வாகம் எப்பொழுதும் அக் கறையுடன் இருக்கும். அதே போல் நாட்டுப் படகு மீனவர்களும், விசைப்படகு மீன வர்களும் கடந்த காலங்களை போல் ஒற்றுமையாக இருந்து தொழில் செய்திட வேண்டு என்று அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மீன்வளத் துறை துணை இயக்குநர் பிரபாவதி, மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கோபி நாத், ஜெயக்குமார், அப்துல் காதர் ஜெய்லானி, சிவக் குமார் மற்றும் அரசு அலுவ லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது.
    • விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது.

    கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.
    • மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    தாராபுரம்:

    தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தாராபுரம் மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை)காலை 11 மணிக்கு பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் தாராபுரத்தை சுற்றியுள்ள மின் நுகர்வோர், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×