search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

    • வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது
    • மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் இந்தக் கூட்டம் நடை பெறுகிறது.

    நாகர்கோவில், ஆக.22-

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் இந்தக் கூட்டம் நடை பெறுகிறது.

    கூட்டத்தில், ஜூலை மாத குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரால் நேரில் பெறப்படும். கோரிக்கை மனுக்கள் பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள மாற்றுத்திற னாளிகள் நல அலு வலகத்தில் செய்யப்பட்டி ருக்கும். கலெக்டரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×