என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
- மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூ்டடம் நாளை நடக்கிறது.
- இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
மதுரை
மதுரை வருவாய் கோட்டாட்சியரின் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை (13-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
மேற்படி சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான பவ்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்று கோல், காதொலி கருவி போன்ற உதவி உபகர ணங்கள், பலி பாஸ், மாதாந்திர உதவித் தொவை மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு உதவிகள் பெறும் பொருட்டு விண்ணப்பங்கள் அளித்திடலாம்.
மேற்கண்டவாறு நடை பெறும் மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மதுரை வரு வாய் கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை மேற்கு வட்டம், மதுரை வடக்கு வட்டம் மற்றும் வாடிப்பட்டி வருவாய் வட்டங்களைச் சார்ந்த மாற்றுத்திறனாளி கள் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை (UD ID-Card) நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகிய வற்றுடன் மதுரை வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கி பயனடை யுமாறு தெரிவிக்கப்படு கிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






