என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் விவசாயிகளிடம் ஆர்.டி.ஓ. வில்சன்ராஜசேகர் குறைகளை கேட்டறிந்த காட்சி.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
- ஏரியில் இருந்து வரும் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
- ஜமாபந்தியில் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை,
அரூர்,
அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமை வகித்தார். இதில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், கே.ஈச்சம்பாடி வலதுபுற கால்வாயை துார்வார வேண்டும். அரூர் பெரிய ஏரியில் இருந்து வரும் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதே போல், குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் காணவில்லை. ஜமாபந்தியில் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, நிலம் அளவீடு செய்யக்கோரி விவசாயிகள் பணம் கட்டி ஓராண்டுக்கு மேலாகியும் அளவீடு செய்யப்படவில்லை. ஆனால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பணம் கட்டிய ஒரு சில நாட்களில் நிலம் அளவீடு செய்யப்படுகிறது என புகார் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.






