search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிபோதை"

    • அப்புன் இவர் நண்பர்களுடன் மதுகுடித்த போது தகராறு ஏற்பட்டது.
    • பெரியகாவனத்தை சேர்ந்த நண்பரான ஜெயக்குமாரை கைது செய்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளத்தில் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அப்புன் இவர் நண்பர்களுடன் மதுகுடித்த போது தகராறு ஏற்பட்டது.

    இந்த மோதலில் அப்புனுவுக்கு வெட்டு விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    இது தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியகாவனத்தை சேர்ந்த நண்பரான ஜெயக்குமாரை கைது செய்தனர்.

    • தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது
    • சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கலெக்டர் அலுவல கத்திற்கு மனு கொடுக்க வருபவர்களை போலீசார் பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள். நேற்று இரவு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர், தனது காதல் மனைவியை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பும் குடிபோதையில் வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்டார். அப்போது போலீசாருக்கும் அந்த வாலிபருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மது போதைக்கு அடிமையான அவர் தினமும் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • குடிபோதை தகராறில் தவறுதலாக தந்தையை மகனே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராயபுரம்:

    வண்ணாரப்பேட்டை, பீட்டர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து (வயது60).ஆட்டோ டிரைவர். இவரது மகன் குமார். பெயிண்டர். இவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார். குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. மது போதைக்கு அடிமையான அவர் தினமும் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இதே போல் நேற்று இரவும் குமார் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் வந்தார். அப்போது அவ்வழியே சாலையில் குறுக்கே சென்ற பூனை மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. இதில் அந்த பூனை இறந்து போனது.

    இதனை கண்ட பக்கத்து வீட்டில் வசித்து வரும் வேலன் என்பவர் மோட்டார் சைக்கிளில் மெதுவாக வரும்படி குமாரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்த குமாரின் தந்தை வீரமுத்துவும் அங்கு வந்தார். அவர் மகனை கண்டித்து அங்கிருந்து செல்லும்படி அறிவுரை கூறினார். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் மதுபோதையில் இருந்த குமார் தொடர்ந்து வேலனிடம் மோதலில் ஈடுபட்டார். திடீரென குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேலனை வெட்ட முயன்றார். அந்த நேரத்தில் வீரமுத்து குறுக்கே வந்ததால் தவறுதலாக அவரது கழுத்தில் வெட்டு விழுந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சிறிது நேரத்தில் வீரமுத்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் குமார் கீழே விழுந்த போது அவரது அருகில் கிடந்த கல் மீது விழுந்தார். இதில் அவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வீரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குமாரை மீட்டு அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிபோதை தகராறில் தவறுதலாக தந்தையை மகனே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டின் முன்பு நின்று கொண்டு விஜயராகவன் என்னை ஆபாச வார்த்தையால் வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டினார்.
    • போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 47). என்ஜினீயரான இவர், சென்னையில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அவரது ஓழுங்கினத்தால் அந்நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கியது. அதன் பின்னர் ஊருக்கு வந்து விட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள். 2 பேரும் கருத்து வேறுபாட்டால் விஜயராகவனை பிரிந்து சென்றனர்.

    பின்னர் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று மதியம் அவரது வீட்டின் அருேக கழுத்து மற்றும் வயிற்று பகுதி அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் விஜயராகவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    இதில் கொலை குறித்து உடனடியாக துப்பு துலங்கியது.

    விஜயராகவனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சோமசுந்தரம் (60) என்பவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர், விஜயராகவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

    அதில் நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம். அடிக்கடி இரண்டு பேரும் சேர்ந்து மது அருந்துவோம். வழக்கம் போல் நேற்று மதியம் என் வீட்டின் அருகில் அமர்ந்து இருவரும் மது அருந்தினோம். அப்போது எங்களுக்குள் திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றோம். இந்நிலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டு விஜயராகவன் என்னை ஆபாச வார்த்தையால் வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டினார். நான் அவரை எச்சரித்தேன். ஆனால் அவர் ஆபாச அர்ச்சனையை அவர் விட வில்லை. இதில் பொறுமை இழந்த நான்

    கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பிச் சென்றேன். இதில் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளார். போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பயணிகள் இதுகுறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் குடிபோதையில் இருந்த பழனிக்கு பஸ் கட்டணத்திற்கான பணத்தை வழங்கினர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் செஞ்சி பகுதியில் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    பழனி நேற்று இரவு தனது சொந்த ஊரான வந்தவாசிக்கு செல்ல, செஞ்சி பஸ் நிலையத்திற்கு வந்தர். மதுபோதையில் விழுப்புரத்திலிருந்து ஆரணி வழியாக வேலூர் செல்லும் பஸ்சில் ஏறி ஆரணி பழைய பஸ் நிலையம் வந்தடைந்தார்.

    தன்னிடம் இருந்த பணத்தை மர்மநபர்கள் யாரோ கொள்ளையடித்து விட்டதாகவும், எனவே சொந்த ஊருக்கு செல்ல பணம் இல்லை எனக்கூறி, பஸ் நிலையத்தில் அரசு பஸ் டயர் சக்கரத்தின் முன்பு படுத்து கொண்டு சாகப்போவதாக கூறி ரகளையில் ஈடுபட்டார்.

    அங்கிருந்த பயணிகள் இதுகுறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் குடிபோதையில் இருந்த பழனிக்கு பஸ் கட்டணத்திற்கான பணத்தை வழங்கினர். அவரை சொந்த கிராமத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி வழி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் ரோட்டில் தனியார் நூற்பாலைக்கு சொந்தமான விடுதி உள்ளது.
    • வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் மற்ற தொழிலாளர்களுடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தனியார் நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு விடுதிகளில் தங்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அங்கேயே 3 வேளை உணவும் தயாரித்து வழங்கப்படுகிறது.

    வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் ரோட்டில் தனியார் நூற்பாலைக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் மற்ற தொழிலாளர்களுடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து விடுதி வார்டன் வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போதையில் இருந்த 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கேயே அவர்களை தூங்க வைத்து காலையில் எழுப்பி காபி கொடுத்து போதையை தெளியவைத்தனர். பின்னர் இரவில் அவர்கள் செய்த சேட்டைகளை எடுத்துக் கூறி அதற்கு தண்டனையாக போலீஸ் நிலையம், கருவூலம், இ-சேவைமையம் ஆகிய பகுதிகளுக்கு வரும் வாகனங்களை சுத்தப்படுத்தி அந்த வளாகங்களையும் 3 நாட்களுக்கு தூய்மை படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் இதேபோன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    • குடி போதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் தீபன் (35). பெயிண்டிங் தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் பவானி சாகர் அரசு தொடக்கப்பள்ளிக்கு தனது மகனை பார்க்க வந்தார்.

    அப்போது அவர் குடி போதையில் இருந்தார். இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவரை பள்ளிக்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதையடுத்து அவர் ஆசிரியர்களை ஆபாசமாக பேசி னார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பவானி சாகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பள்ளியில் ஆசிரியரிடம் தகராறு செய்த தீபனை வெளியே செல்லுமாறு கூறினர். ஆனால் தீபன் வெளியே செல்ல மறுத்து தகராறு செய்தார்.

    இதை தொடர்ந்து குடி போதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரை மோட்டார் சைக்கிளுடன் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் தீபன் திடீரென தனக்கு தானே பாட்டிலால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் கிழித்துக் கொண்டார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று வந்தார்.

    போலீசாரை குடி போதையில் தீபன் ஆபாசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தீபன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதை தொடர்ந்து தீபன் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு போன் செய்து தகாத வார்த்தையால் பேசி, 'காலை என்ன செய்கிறேன் பார்' என கொலை மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோ பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இது குறித்து பள்ளி தலைைம ஆசிரியர் பவானி சாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலைமறைவான தீபனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • ஒரு கட்டத்தில் குடிபோதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.
    • போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட தீபன் தனக்கு தானே பாட்டிலால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் சிறிது கிழித்துக் கொண்டார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் தீபன் (35). பெயிண்டிங் தொழிலாளி. இவர் நேற்று மாலை 4.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பவானி சாகர் அரசு தொடக்கப்பள்ளிக்கு தனது முதல் மனைவிக்கு பிறந்த 3-ம் வகுப்பு படிக்கும் மகனை பார்க்கச் சென்றார்.

    அப்போது குடி போதையில் இருந்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர். அப்போது ஆசிரியர்களை ஆபாசமாக பேசி திட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பவானி சாகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு போலீஸ்காரர்கள் சண்முகம், செல்லமுத்து ஆகியோர் சென்றனர். அவர்கள் பள்ளியில் ஆசிரியரிடம் தகராறு செய்த தீபனை வெளியே செல்லுமாறு கூறினர். ஆனால் தீபன் வெளியே செல்ல மறுத்து போலீசார் மற்றும் மற்ற குழந்தைகளின் பெற்றோருடனும் தகராறு செய்தார்.

    ஒரு கட்டத்தில் குடிபோதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டினார். மேலும் ஒருமையில் பேசி "சட்டையை கழற்றி விட்டு என்னுடன் சண்டைக்கு வா" என்றும் ஆபாசமாக பேசினார். இதனால் பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளுடன் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட தீபன் திடீரென தனக்கு தானே பாட்டிலால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் சிறிது கிழித்துக் கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று இரவே தீபன் வீடு திரும்பினார்.

    போலீசாரை குடி போதையில் தீபன் ஆபாசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • வடசேரி பஸ்நிலையத்தில் இருந்து காட்டுப்புதூருக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது.
    • போக்குவரத்து நிர்வாகம், துறை ரீதியாக விசாரணை நடத்தி டிரைவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையத்தில் இருந்து காட்டுப்புதூருக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் அசம்பு ரோட்டில் சென்ற போது, திடீரென தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.

    கடைசி நேர பஸ் என்பதால் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் டிரைவரிடம் பஸ்சை நிறுத்துங்கள்... என கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து அவர் பஸ்சை நடுவழியில் நிறுத்தினார். அப்போது தான் டிரைவர் போதையில் இருப்பது தெரியவர பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பஸ்சை விட்டு இறங்கினர்.

    இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, பஸ் டிரைவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பஸ் டிரைவர் மது அருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் போக்குவரத்து நிர்வாகம், துறை ரீதியாக விசாரணை நடத்தி டிரைவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    • வாக்குவாதம் முற்றி அருணாசலம் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கிருஷ்ணனை மிரட்டினார்.
    • கிருஷ்ணன் உத்திரமேரூர் போலீஸில் புகார் செய்தார்.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் ஒன்றியம் நாஞ்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (வயது 43). இவர் குடித்துவிட்டால் தெருவில் வருவோர் போவோரை மிகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டி பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவரது வீட்டின் அருகே உள்ள கிருஷ்ணன் (33) என்பவர் ஏன் இப்படி குடித்துவிட்டு வருவோர் போவோரை ஆபாசமாக திட்டிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டதாக தெரிகிறது. இதில் வாக்குவாதம் முற்றி அருணாசலம் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கிருஷ்ணனை மிரட்டினார்.

    இது பற்றி கிருஷ்ணன் உத்திரமேரூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து அருணாசலத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.

    • பஸ் பாப்பாரப்பட்டிக்கு வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி உஸ்தலஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 51). இவர் அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் அரசு பஸ்சை பழையபேட்டை பகுதியில் இருந்து 5ரோடு பகுதிக்கு சென்றார். அப்போது பஸ் பாப்பாரப்பட்டிக்கு வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். இதனை தட்டி கேட்ட கிருஷ்ணமூர்த்தியை ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து அரசு பஸ்சின் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.

    இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அதேபகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்கிற சுக்கு என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.

    • ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒரு பெண் சுடிதார் அணிந்து மொபட்டில் வந்தார்.
    • ஒரு ஆட்டோவில் அந்தப் பெண்ணை பொதுமக்கள், போலீசார் குண்டுக்கட்டாக ஏற்றி சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒரு பெண் சுடிதார் அணிந்து மொபட்டில் வந்தார். பின்னர் அவர் காந்திஜி ரோட்டில் மொபட்டை நிறுத்தி விட்டு நடுரோட்டில் அமர்ந்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    காந்திஜி ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரோடு என்பதால் அந்தப் பெண் நடுரோட்டில் அமர்ந்து கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

    ஆனால் அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்லாமல் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பொது மக்களும் கூடி விட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பெண் தானாக அங்கிருந்து நடந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு பஸ் முன்பு அந்தப் பெண் ரகளையில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்களும், போலீசார் உடன் இணைந்து அங்கிருந்து அவரை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து செல்லாமல் புலம்பிக் கொண்டே இருந்தார்.

    இதையடுத்து ஒரு ஆட்டோவில் அந்தப் பெண்ணை பொதுமக்கள், போலீசார் குண்டுக்கட்டாக ஏற்றி சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அங்கலட்சுமி என்பதும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    பின்னர் அவருக்கு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் போலீசார் இனி இவ்வாறு பொது இடங்களில் நடந்து கொள்ளக் கூடாது என அங்கலட்சுமியை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே பரபரப்பான சூழ்நிலை நிலவயது.

    ×