search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் நூதன தண்டனை"

    • வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் ரோட்டில் தனியார் நூற்பாலைக்கு சொந்தமான விடுதி உள்ளது.
    • வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் மற்ற தொழிலாளர்களுடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தனியார் நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு விடுதிகளில் தங்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அங்கேயே 3 வேளை உணவும் தயாரித்து வழங்கப்படுகிறது.

    வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் ரோட்டில் தனியார் நூற்பாலைக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் மற்ற தொழிலாளர்களுடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து விடுதி வார்டன் வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போதையில் இருந்த 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கேயே அவர்களை தூங்க வைத்து காலையில் எழுப்பி காபி கொடுத்து போதையை தெளியவைத்தனர். பின்னர் இரவில் அவர்கள் செய்த சேட்டைகளை எடுத்துக் கூறி அதற்கு தண்டனையாக போலீஸ் நிலையம், கருவூலம், இ-சேவைமையம் ஆகிய பகுதிகளுக்கு வரும் வாகனங்களை சுத்தப்படுத்தி அந்த வளாகங்களையும் 3 நாட்களுக்கு தூய்மை படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் இதேபோன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    ×