search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை என்ஜினீயர் கொலை: குடிபோதையில் ஆபாசமாக திட்டியதால் குத்தி கொன்றேன்- கைதான நண்பர் வாக்கு மூலம்
    X

    சென்னை என்ஜினீயர் கொலை: குடிபோதையில் ஆபாசமாக திட்டியதால் குத்தி கொன்றேன்- கைதான நண்பர் வாக்கு மூலம்

    • வீட்டின் முன்பு நின்று கொண்டு விஜயராகவன் என்னை ஆபாச வார்த்தையால் வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டினார்.
    • போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 47). என்ஜினீயரான இவர், சென்னையில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அவரது ஓழுங்கினத்தால் அந்நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கியது. அதன் பின்னர் ஊருக்கு வந்து விட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள். 2 பேரும் கருத்து வேறுபாட்டால் விஜயராகவனை பிரிந்து சென்றனர்.

    பின்னர் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று மதியம் அவரது வீட்டின் அருேக கழுத்து மற்றும் வயிற்று பகுதி அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் விஜயராகவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    இதில் கொலை குறித்து உடனடியாக துப்பு துலங்கியது.

    விஜயராகவனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சோமசுந்தரம் (60) என்பவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர், விஜயராகவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

    அதில் நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம். அடிக்கடி இரண்டு பேரும் சேர்ந்து மது அருந்துவோம். வழக்கம் போல் நேற்று மதியம் என் வீட்டின் அருகில் அமர்ந்து இருவரும் மது அருந்தினோம். அப்போது எங்களுக்குள் திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றோம். இந்நிலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டு விஜயராகவன் என்னை ஆபாச வார்த்தையால் வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டினார். நான் அவரை எச்சரித்தேன். ஆனால் அவர் ஆபாச அர்ச்சனையை அவர் விட வில்லை. இதில் பொறுமை இழந்த நான்

    கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பிச் சென்றேன். இதில் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளார். போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×