என் மலர்
நீங்கள் தேடியது "Driver suspended"
- பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார்.
- கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோத்தக்கோட்டையில் அரசு பஸ் உரிய இடத்தில் நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார்.
பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார். மாணவி அதில் ஏறிய வீடியோ வைரலானது.
கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி பஸ் பின்னாலேயே ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பஸ் ஓட்டுநர் - நடத்துநரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
- வடசேரி பஸ்நிலையத்தில் இருந்து காட்டுப்புதூருக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது.
- போக்குவரத்து நிர்வாகம், துறை ரீதியாக விசாரணை நடத்தி டிரைவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையத்தில் இருந்து காட்டுப்புதூருக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் அசம்பு ரோட்டில் சென்ற போது, திடீரென தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.
கடைசி நேர பஸ் என்பதால் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் டிரைவரிடம் பஸ்சை நிறுத்துங்கள்... என கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து அவர் பஸ்சை நடுவழியில் நிறுத்தினார். அப்போது தான் டிரைவர் போதையில் இருப்பது தெரியவர பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பஸ்சை விட்டு இறங்கினர்.
இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, பஸ் டிரைவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பஸ் டிரைவர் மது அருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் போக்குவரத்து நிர்வாகம், துறை ரீதியாக விசாரணை நடத்தி டிரைவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.
- தாதன்குளத்தில் நின்று செல்ல வேண்டிய இந்த ரெயில் நிற்காமல் சென்றது.
- சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
செய்துங்கநல்லூர்:
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை 7.50 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் ரெயில் நிலையம் வழியாக திருச்செந்தூர் நோக்கி பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
ஆனால் தாதன்குளத்தில் நின்று செல்ல வேண்டிய இந்த ரெயில் நிற்காமல் சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை பின்னோக்கி கொண்டு சென்றார். இதனால் ரெயில் மீண்டும் தாதன்குளம் ரெயில் நிலையத்துக்கு சென்றது. இதை அங்கிருந்த பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.
ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் இருந்து சென்ற பாலக்காடு ரெயில் கச்சானாவிளை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற காரணத்தினால் மீண்டும் பின்னோக்கி வந்தது. இந்த காட்சிகளில் அடிப்படையில் அந்த ரெயில் மதுரை செல்லும் போது உடனடியாக என்ஜின் டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று தாதன்குளம் ரெயில் நிலையத்தில் பின்னோக்கி வந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பின்னோக்கி இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலின் என்ஜின் டிரைவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டுள்ளார்.






