search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tirupathur"

    திருப்பத்தூரில் 2 மாத குழந்தைக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்ததையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் கூலித்தொழிலாளி இவரது மனைவி லாவண்யா.

    இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு லாவண்யாவுக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக 2 மாத குழந்தை மயங்கிய நிலையிலும், அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டும் அவதிப்பட்டு வந்தது. இதனால், பெற்றோர் குழந்தையை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை டாக்டர் செந்தில்குமார் பரிசோதித்தார்.

    அப்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை உடனடியாக வார்டில் அனுமதித்து சுவாச கருவிகள் பொருத்தினர். பின்னர், குழந்தைக்கு இன்சுலின் செலுத்தி படிப்படியாக சர்க்கரையின் அளவை குறைத்தனர்.

    பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை, நிமோனியா, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் தாக்கும். ஆனால், இந்த குழந்தைக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 787 ஆக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பின்னர் குழந்தைக்கு இன்சுலின் செலுத்தி படிப்படியாக சர்க்கரையின் அளவு 300 ஆக குறைக்கப்பட்டது.

    தற்போது குழந்தையின் சர்க்கரை அளவை குறைத்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளோம்.

    கருவுற்றிருக்கும் போது உடல் உறுப்புகளில் பாதிப்பு இருக்கிறதா? என்றுதான் நாங்கள் கண்டறிய முடியும். ஆனால், இந்த குழந்தையின் கணையம் செயல்பாட்டினை கண்டறியவில்லை. இப்போது அதற்கும் வசதி வாய்ப்புகள் வந்திருக்கிறது.

    கருவில் இருக்கும் போதே குழந்தையின் உடல் நலனை தெரிந்து கொள்ள முடியும். இக்குழந்தையின் பிரச்சனைக்கு ஜீன் பிரச்சனையாக இருக்கலாம். வம்சா வழியாக இதுபோன்ற நோய்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குழந்தையின் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தற்போது குழந்தைக்கு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    திருப்பத்தூரில் மது குடித்து வந்ததை மனைவி கண்டித்ததால் ஸ்டேசனரி கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 46). இவர் அதே பகுதியில் ஸ்டேசனரி கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஆர்த்தி (18), லட்சுமி (17) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    சுப்பிரமணியன் அடிக்கடி மது அருந்தியதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்றும் சுப்பிரமணியன் மது குடித்து வந்ததால் கலைச்செல்வி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது

    இதையடுத்து கலைச்செல்வி தனது மகள்கள், மகனுடன் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்கு தூங்கச்சென்றார்.

    அதன் பிறகு மன வேதனையில் இருந்த சுப்பிரமணியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அவரது மகள் வந்து பார்த்த போது தந்தை தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×