search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணியில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் பஸ் முன்பு படுத்து தொழிலாளி ரகளை
    X

    ஆரணியில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் பஸ் முன்பு படுத்து தொழிலாளி ரகளை

    • பயணிகள் இதுகுறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் குடிபோதையில் இருந்த பழனிக்கு பஸ் கட்டணத்திற்கான பணத்தை வழங்கினர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் செஞ்சி பகுதியில் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    பழனி நேற்று இரவு தனது சொந்த ஊரான வந்தவாசிக்கு செல்ல, செஞ்சி பஸ் நிலையத்திற்கு வந்தர். மதுபோதையில் விழுப்புரத்திலிருந்து ஆரணி வழியாக வேலூர் செல்லும் பஸ்சில் ஏறி ஆரணி பழைய பஸ் நிலையம் வந்தடைந்தார்.

    தன்னிடம் இருந்த பணத்தை மர்மநபர்கள் யாரோ கொள்ளையடித்து விட்டதாகவும், எனவே சொந்த ஊருக்கு செல்ல பணம் இல்லை எனக்கூறி, பஸ் நிலையத்தில் அரசு பஸ் டயர் சக்கரத்தின் முன்பு படுத்து கொண்டு சாகப்போவதாக கூறி ரகளையில் ஈடுபட்டார்.

    அங்கிருந்த பயணிகள் இதுகுறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் குடிபோதையில் இருந்த பழனிக்கு பஸ் கட்டணத்திற்கான பணத்தை வழங்கினர். அவரை சொந்த கிராமத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி வழி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×