search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • திருச்சியில் மின்னல் பாய்ந்து செல்போன் வெடித்து சிதறியதில் 3 பெண்கள் காயமடைந்தனர்
    • வயலில் வேலை பார்த்த போது சோகம்

    திருச்சி,

    திருச்சி மருங்காபுரி அடுத்த வகுத்தால்வார்பட்டியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 30).

    சம்பவத்தன்று இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்து லெட்சுமி(40), பெரியம்மாள் (55) ஆகியோர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது. மணிமேகலை வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. இதில் மணிமேகலை படுகாயம் அடைந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காயமடைந்த 3 பேரையும் மணபாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிப்பர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்
    • குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிளிஞ்சடா பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 22). இவரது நண்பர் சுபாஷ் (வயது 21).

    இவர்கள் இருவரும் நேற்று மோட்டார்சைக்கிள் மூலம் கோவை சென்று கொண்டிருந்தபோது குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மரப்பாலம் பகுதியில் எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனையிலும், சுபாஷ் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ராமச்சந்திரனை (வயது 39) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் இன்று அதிகாலை இதே வழித்தடத்தில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த காரில் 5 பேர் பயணம் மேற்கொண்டனர். இதில் குறும்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென குரங்குகள் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கார் தடுப்பு சுவர் மீது மோதி நின்றது. இதில் சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர். 

    • நடந்து சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து திருச்சி சென்ற லாரி அவர் மீது மோதியது.
    • இரவு 1 மணி அளவில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு மருத்து வக் கல்லூரி ஊழியர் லாரி மோதியதில்பலத்த காய மடைந்து சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்தை சேர்ந்த வர் மாணி க்கம் (48).இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவ பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு முண்டியம்பாக்கம் ஒரத்தூர் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து திருச்சி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக முண்டி யம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இரவு 1 மணி அளவில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார். இது தொடர்பாக கொடுத்தபுகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே வாகன விபத்தில் 2 பேர் காயம்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே பழமாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (47). கூலி தொழிலாளி. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூர் பழைய நெல்லு மண்டித்தெருவை சேர்ந்த புருஷோத்தமன் இவர் மீது மோதினார்.

    இதில் இருவரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஒரு மினி லாரியின் மூலம் மணிலா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டி ருந்தனர்.
    • விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டனர்.

    விழுப்புரம்:

    ரெட்டணை அருகே உள்ள பெரமண்டூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் நாக முத்து (வயது60). நாரேறி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் (25). இவர்கள் இருவரும் விவ சாயிகள். இவர்கள் இரு வரும் தங்களுக்கு சொந்த மான நிலத்தில் விளைந்த மானிலா பயிறை விக்கிர வாண்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்ய ஒரு மினி லாரியின் மூலம் மணிலா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு விக்கிர வாண்டி நோக்கி சென்று கொண்டி ருந்தனர்.

    மினி லாரியை நாரேறிகுப் பத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்தார். மினிலாரி பேரணி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு கண்டெய்னர் லாரி மினி லாரியின் பின்னால் மோதியது. இதில் நிலை தடுமாறிய மினி லாரி இடது புற சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் மினி லாரி டிரைவர் லோக நாதன், விவசாயிகள் நாக முத்து, அஜித் ஆகியோர் காய மடைந்தனர். இவர்கள் உடனடியாக முண்டி யம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த விக்கிரவாண்டி போலீசார் சுங்கச்சாவடி விபத்து சேப்டி வேன் வர வழைத்து விபத்துக்குள் ளான வாகனத்தை மீட்டனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • புஷ்பராஜ் வடலூரில் இருந்து கடலூரில் நடைபெறும் திருமணத்திற்கு மோட்டா ர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    வடலூரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 50). இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது வடலூரில் வசித்து வருகிறார்.இன்று காலை புஷ்பரா ஜ்வடலூரில் இருந்து கடலூரில் நடைபெறும் திருமணத்திற்கு மோட்டா ர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சுப்ரமணி யபுரம் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் புஷ்பராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இத்தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த புஷ்பராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நரிக்குடி அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நரிக்குடி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள எழுவணி - ரெட்டைகுளம் கிராமத்திற்கு இடையே 3 கி.மீ., தொலைவிற்கு சாலை புதுப்பிக்கும் பணிக்காக ஜல்லிக்கற்கள் விரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக டிப்பர் லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை எழுவணி அழகு நாச்சியம்மன் கோவில் அருகே நடைபெ றும் சாலைப்பணிக்காக டிப் பர் லாரியில் கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கற்களை ரோட்டில் விரிப்பதற்காக டிப்பர் லாரியின் டிரைவ ரான அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரம் பகுதி யை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் அங்கிருந்த டிரான் ஸ்பார்மரின் மேலே சென்ற உயர் அழுத்த மின் வயரை கவனிக்காமல் டிப்பர் லாரி யின் ஜாக்கியை தூக்கியவா றே லாரியை இயக்கியதாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக டிரான்ஸ் பார் மரின் மேலே சென்று கொண்டிருந்த மின் வயரில் டிப்பர் லாரி உரசியதில் லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்து முன்பக்க டயர்கள் இரண்டும் பயங்கர சத்தத்து டன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் சரவணக்குமார் பலத்த காயமடைந்தார்.இதனையடுத்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் அங்கு நிறுத்தி வைக் கப்பட்டிருந்த காண்ட்ராக்ட ருக்கு சொந்தமான டூவீல ரும் இந்த சம்பவத்தில் திடீ ரென தீப்பிடித்து எரிந்தது.

    இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மீன்களை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது.
    • ஆட்டோவில் பயணம் செய்த 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    பேராவூரணி:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஓலைக்குன்னம் தெற்கு தெருவை சேர்ந்த சேகர் ( வயது 52), காடந்தங்குடி பகுதியை சேர்ந்த தங்கராசு (60), நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த மோகன் ராஜ் மனைவி மல்லிகா (60), மன்னங்காடு பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (55), துவரங்குறிச்சியை சேர்ந்த அசோகன்(48), ஒட்டங்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்,(50) பரவத்துார் பகுதியை சேர்ந்த சக்திவேல்(49) இவர்கள் அனைவரும் மீன் வியாபாரிகள்,

    இவர்கள் ஒன்றாக சேர்ந்து சரக்கு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து மல்லிப்பட்டினம் ,சேதுபாவாசத்திரம், கட்டுமாவடி ,ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுக பகுதிகளில் மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்து, மதுக்கூர், துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சில்லறையாக விற்பனை செய்வார்கள்.

    இந்நிலையில் வழக்கம் போல நேற்றுமுன்தினம் காலை ஜெகதாப்பட்டினத்தில் மீன்களை வாங்கி லோடு ஆட்டோவில் மீன்களை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

    அப்போது சேதுபாவாசத்திரம் அருகே அம்மணிசத்திரத்தில் லோடு ஆட்டோ விபத்தில் சிக்கி சாலையின் வலதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்காட்டை பாலசுப்பிரமணியன் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    உடனடியாக அருகில் உள்ளவர்கள் சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் தங்கராஜ் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். சேகர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு இரவு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிப்பர் லாரி மீது வேன் மோதிய விபத்தில்பள்ளி மாணவர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேர் காயம்

    குன்னம்,  

    விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ஆரோவில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 11 மாணவா்கள், 2 மாணவிகள் என மொத்தம் 13 பேர் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற குராஷ் தற்காப்பு கலை போட்டியில் விளையாட தங்களது ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுடன் ஒரு வேனில் புறப்பட்டு வந்துள்ளனர். இந்த வேன் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை பிரிவு சாலையை தாண்டி வந்து கொண்டிருந்தது. அப்போது டீசல் இல்லாமல் ஜல்லிக்கற்களுடன் சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் வேனின் டிரைவர், மாற்று டிரைவர், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகி நின்ற வேனின் மீது மோதியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைக்கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் பாடாலூர் போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வேனின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், டிரைவர்கள் ஆகியோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இதில் மாணவர்கள் அகத்தியன் (வயது 13), கேசவ் சரண் (14) இன்பராஜன் (14), ரமணன் (14), நிர்மல் (14), டிரைவர் குமார் (40), பயிற்சியாளர்கள் ராமமூர்த்தி (51), மற்றும் அவர்களுடன் வந்திருந்த ஹரி கிருஷ்ணன் (47), பூபதி (20) உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர்.

    பின்னர் காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். மருத்துவமனையில் அகத்தியன், ஹரிகிருஷ்ணன், ராமமூர்த்தி ஆகிய 3 பேரும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 7 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இந்நிலையில் கோவில் கோபுரம் மீது ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் திரு கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இங்கு ராமதாஸ் (வயது 50), துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கோவில் கோபுரம் மீது ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராமதாசை, விருத்தாசலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    குளித்தலை அருகே பைக் மோதி 3 பேர் காயம்

    கரூர்,  

    குளித்தலை அடுத்த, இனுங்கூர் ஊராட்சி காசா காலனியை சேர்ந்தவர் சுகனேஷ் (வயது 31). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது பைக்கில் சொந்த வேலையாக பெட்டவாய்த்தலைக்கு சென்றார். அப்போது பங்களா புதுார் இனுங்கூர் நெடுஞ்சாலையில், இனுங்கூர் நோக்கி வந்த மற்றொரு பைக் நேருக்கு நேர் மோதியது.

    இதில் சுகனேஷ் பலத்த காயமடைந்தார். எதிரே வந்து மோதிய பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த யுவராஜ் (20), பைக் ஓட்டி வந்த அதே ஊரை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    3 பேரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலையின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள், மினி வேன்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.
    • சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மீட்பு பணிகளை விரைவுபடுத்த துரித நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.

    திருமானூர்:

    தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திருமானூரை சேர்ந்தவர் அருண். இவருக்கு விரகாலூர் கிராமத்தில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது.

    இந்த ஆலையில் நாட்டு வெடிகள், திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வாணவெடிகள் மற்றும் தீபாவளி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் இங்கு தீவிரமாக நடந்து வந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    வழக்கம் போல் இன்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் வெடித்து சிதறிய பட்டாசுகளுக்கிடையே தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனா்.

    அந்த பகுதி முழுவதும் கடுமையான புகை மண்டலம் கிளம்பி பட்டாசு ஆலை முழுவதும் கரும்புகை மூட்டமாக மாறியது. வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது போல பட்டாசுகளின் சத்தம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்ததால் சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

    இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

    மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை வீரர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பட்டு வருகிறது. இதில் சிகிச்சை பலனின்றி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை என்ன என்று தற்போது வரை தெரியவில்லை. தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகுதான் துள்ளியமாக தெரியவரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஆலையின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள், மினி வேன்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.

    சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மீட்பு பணிகளை விரைவுபடுத்த துரித நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.

    பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருப்பதால், தீயணைப்புத் துறையினரால் தீயை அணைக்க முடியவில்லை. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இந்த பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டும் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×