என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே  மோட்டார் சைக்கிள் மோதி வெளிநாட்டில் இருந்து வந்தவர் பலி
    X

    கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வெளிநாட்டில் இருந்து வந்தவர் பலி

    • புஷ்பராஜ் வடலூரில் இருந்து கடலூரில் நடைபெறும் திருமணத்திற்கு மோட்டா ர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    வடலூரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 50). இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது வடலூரில் வசித்து வருகிறார்.இன்று காலை புஷ்பரா ஜ்வடலூரில் இருந்து கடலூரில் நடைபெறும் திருமணத்திற்கு மோட்டா ர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சுப்ரமணி யபுரம் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் புஷ்பராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இத்தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த புஷ்பராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×