search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரியில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் படுகாயம்
    X

    லாரியில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் படுகாயம்

    • நரிக்குடி அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நரிக்குடி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள எழுவணி - ரெட்டைகுளம் கிராமத்திற்கு இடையே 3 கி.மீ., தொலைவிற்கு சாலை புதுப்பிக்கும் பணிக்காக ஜல்லிக்கற்கள் விரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக டிப்பர் லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை எழுவணி அழகு நாச்சியம்மன் கோவில் அருகே நடைபெ றும் சாலைப்பணிக்காக டிப் பர் லாரியில் கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கற்களை ரோட்டில் விரிப்பதற்காக டிப்பர் லாரியின் டிரைவ ரான அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரம் பகுதி யை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் அங்கிருந்த டிரான் ஸ்பார்மரின் மேலே சென்ற உயர் அழுத்த மின் வயரை கவனிக்காமல் டிப்பர் லாரி யின் ஜாக்கியை தூக்கியவா றே லாரியை இயக்கியதாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக டிரான்ஸ் பார் மரின் மேலே சென்று கொண்டிருந்த மின் வயரில் டிப்பர் லாரி உரசியதில் லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்து முன்பக்க டயர்கள் இரண்டும் பயங்கர சத்தத்து டன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் சரவணக்குமார் பலத்த காயமடைந்தார்.இதனையடுத்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் அங்கு நிறுத்தி வைக் கப்பட்டிருந்த காண்ட்ராக்ட ருக்கு சொந்தமான டூவீல ரும் இந்த சம்பவத்தில் திடீ ரென தீப்பிடித்து எரிந்தது.

    இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×