search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே மருத்துவக் கல்லூரி ஊழியர் லாரி மோதி பலி
    X

    விக்கிரவாண்டி அருகே மருத்துவக் கல்லூரி ஊழியர் லாரி மோதி பலி

    • நடந்து சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து திருச்சி சென்ற லாரி அவர் மீது மோதியது.
    • இரவு 1 மணி அளவில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு மருத்து வக் கல்லூரி ஊழியர் லாரி மோதியதில்பலத்த காய மடைந்து சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்தை சேர்ந்த வர் மாணி க்கம் (48).இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவ பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு முண்டியம்பாக்கம் ஒரத்தூர் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து திருச்சி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக முண்டி யம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இரவு 1 மணி அளவில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார். இது தொடர்பாக கொடுத்தபுகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×