என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மோதி 3 பேர் காயம்
குளித்தலை அருகே பைக் மோதி 3 பேர் காயம்
கரூர்,
குளித்தலை அடுத்த, இனுங்கூர் ஊராட்சி காசா காலனியை சேர்ந்தவர் சுகனேஷ் (வயது 31). கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது பைக்கில் சொந்த வேலையாக பெட்டவாய்த்தலைக்கு சென்றார். அப்போது பங்களா புதுார் இனுங்கூர் நெடுஞ்சாலையில், இனுங்கூர் நோக்கி வந்த மற்றொரு பைக் நேருக்கு நேர் மோதியது.
இதில் சுகனேஷ் பலத்த காயமடைந்தார். எதிரே வந்து மோதிய பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த யுவராஜ் (20), பைக் ஓட்டி வந்த அதே ஊரை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
3 பேரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






