search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே மினி லாரி மீது கண்டெய்னர் லாரி மோதல்:டிரைவர் உட்பட 3 பேர் காயம்
    X

    விபத்துக்குள்ளான மினி லாரியை படத்தில் காணலாம்.

    விக்கிரவாண்டி அருகே மினி லாரி மீது கண்டெய்னர் லாரி மோதல்:டிரைவர் உட்பட 3 பேர் காயம்

    • ஒரு மினி லாரியின் மூலம் மணிலா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டி ருந்தனர்.
    • விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டனர்.

    விழுப்புரம்:

    ரெட்டணை அருகே உள்ள பெரமண்டூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் நாக முத்து (வயது60). நாரேறி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் (25). இவர்கள் இருவரும் விவ சாயிகள். இவர்கள் இரு வரும் தங்களுக்கு சொந்த மான நிலத்தில் விளைந்த மானிலா பயிறை விக்கிர வாண்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்ய ஒரு மினி லாரியின் மூலம் மணிலா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு விக்கிர வாண்டி நோக்கி சென்று கொண்டி ருந்தனர்.

    மினி லாரியை நாரேறிகுப் பத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்தார். மினிலாரி பேரணி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு கண்டெய்னர் லாரி மினி லாரியின் பின்னால் மோதியது. இதில் நிலை தடுமாறிய மினி லாரி இடது புற சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் மினி லாரி டிரைவர் லோக நாதன், விவசாயிகள் நாக முத்து, அஜித் ஆகியோர் காய மடைந்தனர். இவர்கள் உடனடியாக முண்டி யம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த விக்கிரவாண்டி போலீசார் சுங்கச்சாவடி விபத்து சேப்டி வேன் வர வழைத்து விபத்துக்குள் ளான வாகனத்தை மீட்டனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×