search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் ஜோடி தஞ்சம்"

    • காதல் ஜோடி பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஈரோடு, ஏப். 9-

    கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு ஸ்ரீ ராமபுரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் தினேஷ்குமார் (23). பி.காம் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    திருப்பூர் மாவட்டம் கம்பால குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் கோவர்ஷினி (20). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் தினேஷ்குமாரும், கோவர்ஷினியும் கோபி பஸ் நிலையத்தில் சந்தித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இரு விட்டாருக்கும் தெரிய வந்தது. இதனால் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி இன்று காலை பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் நேரடியாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தினேஷ்குமார், கோவர்ஷினி தஞ்சம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • பிரவீன்( வயது 23). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.
    • மீனாவுக்கும் பிரவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நல்லகுமரன்பாளையத்தை சேர்ந்த ரமேஷ். இவரது மகன் பிரவீன்( வயது 23). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். அப்போது, பரமத்திவேலூர் அருகே நன்செய் இடை யாறு பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் மீனா( 28 ) என்பவர், கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.

    இதில், மீனாவுக்கும் பிரவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 8-ந் தேதி திருவண்ணாமலையில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் நேற்று மாலை வேலகவுண்டன்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர்கள், தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு இருப்பதால், பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறி தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில், காதலன் வயதை விட, காதலியின் வயது அதிகம் என்பதால் பெற்றோர் அவர்களை ஏற்க மறுத்தனர். இருவரும் திருமண வயதில் இருப்பதால் அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும், மேலும் காதல் ஜோடியை எந்த தொந்தரவும் செய்யக்கூடாது எனக் கூறியும் பெற்றோர்களை அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • பூபதி (வயது 23) அதே பகுதியில் உள்ள பஞ்சாயத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • இருவரும் கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் பூபதி (வயது 23) அதே பகுதியில் உள்ள பஞ்சாயத்தில் வேலை பார்த்து வருகிறார். பக்கத்து ஊரான செட்டியாம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள்.இவரது மகள் சிம்மாசினி (21). இவர் ஒரு தனியார் கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்தனர். இருவர்கள் இருவரும் கடந்த 1-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி சேலத்தில் உள்ள ஒரு முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டுநேற்று பாதுகாப்பு கேட்டு வேலகவுண்டம்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமாதானம் பேசிய போலீசார் திருமணம் செய்து கொண்ட இருவரும் மேஜர் என்பதால் சிம்மாஷினியை பூபதியுடன் அனுப்பி வைத்தனர்.

    • பேய்குளம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் தேர்க்கன்குளம் பகுதியை சேர்ந்த சேர்மலட்சுமி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
    • போலீசார் இரு தரப்பினரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணும், கருங்கடல் பகுதியை சேர்ந்த சாத்தராக் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் கடந்த 8-ம் தேதி மாயமாகினர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் சாத்தான்குளம் போலீசார் புகாரை பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில் நேற்று மாலை சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சாத்தராக் மற்றும் முத்துமாரி தம்பதியினர் வந்தனர். அவர்கள் தங்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றதாகவும், தற்போது காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் போலீசாரிடம் கூறினர்.

    இதன் அடிப்படையில் இருவரின் குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்த இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பத்தின் பேரில் இருவரையும் அனுப்பி வைத்தனர்.

    பேய்குளம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் தேர்க்கன்குளம் பகுதியை சேர்ந்த சேர்மலட்சுமி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் கடந்த 8-ம் தேதி தங்களது வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளனர். அது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இந்த இருவரும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். உடனே போலீசார் இரு தரப்பினரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருவரும் மேஜர் என்பதால் சாத்தான்குளம் போலீசார் அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    • பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்
    • கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியைச் சேர்ந்தவர் சாருமதி (வயது 20). அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (21) இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.

    சாருமதியின் பெற்றோருக்கு இது தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த 20-ந்தேதி வீட்டில் இருந்து சாருமதி வெளியேறினார்.

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

    அதை தொடர்ந்து சாருமதி ராணிப்பேட்டை எஸ்.பி. ஆபீசில் பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளித்தார். 

    • ஜஜினாவும், சக்திவேலும் திருமணம் செய்து கொண்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
    • இதனையடுத்து போலீசார் இரு குடும்பத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரபுவுடன் ஜஜினாவை அனுப்பி வைத்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகள் ஜஜினா (23). இவர் அதே பகுதியை சேர்ந்த மலைச்சாமி என்ப வர் மகன் பிரபு என்கிற சக்திவேல் என்பவரை கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஜஜினாவும், சக்திவேலும் திருமணம் செய்து கொண்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதனையடுத்து போலீசார் இரு குடும்பத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரபுவுடன் ஜஜினாவை அனுப்பி வைத்தனர்.

    • 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.
    • காரமடை அருகே உள்ள தோளம்பாளையத்தில் உள்ள கோவிலில் வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வடுகபாளைத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் திருப்பூர் மங்கலம் அருகே உள்ள பள்ளப்பாளையத்தை சேர்ந்த சத்யா (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதுஎன முடிவு செய்து மணமகனை தேடி வந்தனர்.

    இது குறித்து இளம்பெண் தனது காதலனிடம் தெரிவித்தார். 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் காரமடை அருகே உள்ள தோளம்பாளையத்தில் உள்ள கோவிலில் வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்தனர்.

    திருமணம் செய்து கொண்ட 2 பேரும் பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் பாதுகாப்பு கேட்டு அன்னூர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • உடையார்பாளையம் தெற்கு காலனித் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் இளந்தமிழன் (25). ஆட்டோ டிரைவர்.
    • இவர் தஞ்சாவூர் மாவட்டம் கொடியாத்தம் கெளத்தூர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரியை (20) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் தெற்கு காலனித் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் இளந்தமிழன் (25). ஆட்டோ டிரைவர்.

    இவர் தஞ்சாவூர் மாவட்டம் கொடியாத்தம் கெளத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் மகேஸ்வரியை (20) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர்களிடம் பெண் கேட்டதாகவும், அவர்கள் பெண் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து காதல் ஜோடி உடையார்பாளையம் தெற்கு தெரு மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

    பின்னர் புதுமணத் தம்பதிகள் இருவரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி புதுமணத் தம்பதிகளிடம் விசாரணை செய்து இரு தரப்பு பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலறிந்த பெண்ணின் பெற்றோர்கள் மகேஸ்வரியை அழைத்துள்ளனர். அவர் வர மறுத்து இளந்தமிழனோடுதான் செல்வேன் என்று கூறியுள்ளார். இதனால் பெண்ணின் பெற்றோர்கள் திரும்பி சென்று விட்டனர். இதையடுத்து இளந்தமிழனின் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் கூறி காதல் ஜோடியான புதுமண தம்பதிகளை அவர்களோடு அனுப்பி வைத்தனர்.

    • முத்துவுக்கும் பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது.
    • காதல் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது .

    கள்ளக்குறிச்சி: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா கீழ் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்து (வயது 22). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வேலை பார்க்கும் அதே பகுதியில் பிரியா (19) வசித்து வருகிறார். அப்போது முத்துவுக்கும் பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது . இதனால் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தனர் காதல் ேஜாடி கடந்த 11-ந் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பவானி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளனர். ஆனால் பெற்றோரால் நமக்கு ஆபத்து வரலாம் என எண்ணி சின்னசேலம் போலீஸ் இன்று தஞ்சம் அடைந்தனர். அப்எபோது 2 பேரும் மேஜர் என்பதால் பெற்றோர்களை அழைத்து இவர்களது திருமணமட சட்டப்படி செல்லும்.இவர்களுக்கு நீங்கள் ஏதாவது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

    • காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
    • அவர்களது பெற்றோரி டம் எழுதி வாங்கிக் கொண்டு காதல் தம்பதியை போலீசார் வழியனுப்பி வைத்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 26). பி.காம் சி.ஏ. முடித்து விட்டு பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (19) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு வரவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் திருமணம் செய்து கொண்ட அவர்கள் தாங்கள் சேர்ந்து வாழ பாதுகாப்பு வழங்க வேண்டும் என வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் இருவரது பெற்றோரையும் வரவழை த்து பேச்சுவார்த்தை நடத்தினார். பெண் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்கள் சேர்ந்து வாழ எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என அவர்களது பெற்றோரி டம் எழுதி வாங்கிக் கொண்டு காதல் தம்பதியை போலீசார் வழியனுப்பி வைத்தனர்.

    ×