search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி எம்.பி."

    • டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க.சார்பில் குதிரை ரேக்ளா பந்தயம் நாளை தொடங்குகிறது.
    • கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு வடக்கு மாவட்டம் தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை யொட்டி டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க., டி.என்.பாளையம் ஒன்றிய தொண்டரனி சார்பில் மாபெரும் குதிரை ரேக்ளா பந்தயம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு கலைஞர் சிலை அருகே தொடங்குகிறது.

    விழாவுக்கு டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் தலைமை தாங்குகிறார். ஒன்றிய அவைத்தலைவர் கருப்புச்சாமி வரவேற்கிறார்.

    ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் கார்த்திகேயன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் துரைசாமி, மரகதம் பால கிருஷ்ணன் ஆசிர்வாதம் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் மணி வர்மன், கே.எஸ்.திருமுருகன், கதிர் என்கிற கருப்புச்சாமி, பேரூர் செயலாளர்கள் வாணிப்புத்தூர் சேகர் என்கிற பழனிச்சாமி, பெரிய கொடிவேரி ஆறுமுகம், காசிபாளையம் எம்.எம்.பழனிச்சாமி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள் வாணிப்புத்தூர் சிவராஜ், பெரிய கொடிவேரி தமிழ்மகன் சிவா, காசிபாளையம் தமிழ்செல்வி வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    போட்டியை தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், துணை பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி உள்பட பலர் கலந்து ெகாள்கின்றனர்.

    • மதநல்லிணக்க சமூக ஒற்றுமை மாநாடு நிறைவரங்க நிகழ்ச்சிக்கு சுப. வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.
    • பா.ஜனதா எம்.பிக்கள் பலர் குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை இளைஞர் அணி திராவிட நட்புகழகம் சார்பில் மதநல்லிணக்க சமூக ஒற்றுமை மாநாடு நிறைவரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் தலைமை தாங்கினார். பாபு, எட்வின், மாறன், முத்தையா, குமரன், இளங்கோவன், கருப்பையா, மணிவண்ணன், ஜெகநாதன், கணேசன், சரவணன், ஆனந்த், விஷ்னு, செல்லப்பா, மாரியப்பன், சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திராவிட நட்புக்கழக தென்மண்டல அமைப்பாளர் தனிஸ்லாஸ் வரவேற்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, பேசியதாவது:-

    பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் வருவதில்லை. எதிர்கட்சிகளின் கருத்துக்களை கேட்பதும் இல்லை. நாம் மெஜாரிட்டியாக இருக்கிறோம் என்று பல மசோதாக்களை அறிமு கப்படுத்தும் போது அது சம்பந்தமாக பேசுவதற்குள் தீர்மானத்தை நிறைவேற்றி முடித்து விடுகின்றனர்.

    முத்தலாக் சட்டம் கொண்டு வந்து இஸ்ஸாமியர் உரிமையை பறிக்கின்றனர். இப்படி கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என அவர்களது உரிமைகளையும் பல வகையில் பறித்து, தான் சொல்லுவதைதான் கேட்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

    பா.ஜனதா எம்.பிக்கள் பலர் குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தான் இருக்கின்றனர். நாம் ஏதாவது கேள்வியை கேட்டால் வேறு பதில்களை கூறி திசைதிருப்புகின்றனர். இந்த நாட்டை நாம் காப்பாற்றியாக வேண்டும்.

    இதே ஆட்சி மறுபடியும் திரும்பி வந்தால் நம்முடைய எதிர்காலம் சமூகநீதி, மதநல்லிணக்கம் பறி போகிவிடும். தமிழகத்தில் உள்ள கலாச்சாரங்கள் சமூக ஒற்றுமை, மதநல்லிணக்கத்தை இந்தியா முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டும். அதை மீண்டும் மீண்டும் உறக்க சொல்ல வேண்டும். வரும் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தல் நமக்கு முக்கியம்.

    மற்ற மாநிலங்களில் இல்லாத பல பண்பாடுகள், வளர்ச்சிகள் என அனைத்திலும் முன்னேற்றமடைந்த தமிழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் நம்முடைய பணிகள் அமைய வேண்டும்.

    இவ்வறு அவர் பேசினார்.

    அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், வடமாநிலங்களில் இன்று வரை பெண்கள் எல்லா இடத்திலும் சமமாக அமர்ந்து இருக்க முடியாத நிலை உள்ளது. அதே போல் ஜாதி வேறுபாடு உள்ளன.

    தமிழகத்தில் பெரியார் சொத்தில் சம உரிமை கொண்டுவந்து பல உரிமைகளை பெற்றுக்கொடுத்து உள்ளார். அனைத்து தரப்பினரும் அர்ச்சகராகலாம் என்ற உரிமையை தி.மு.க. கொடுத்துள்ளது. இதுபோன்று எல்லா துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் 10 ஆண்டுக்குள் அரசியல் கட்சியை ஆரம்பித்தவர்களுக்கு தி.மு.க.வரலாறு தெரியாமல் பேசி வருகின்றனர் என்றார்.

    மாநாட்டில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, திராவிட இயக்க தமிழர் பேரவை நிர்வாகிகள் உமா, சிங்கராயர், உமாபதி, செல்வராசு, ரவீசந்திரன், தமிழ்நாடு முஸ்ஸீம் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் ஹாஜா கனி, சாமிதோப்பு மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் உள்பட பலர் சிறப்புரையாற்றினார்கள்.

    மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், கஸ்தூரி தங்கம், மோகன்தாஸ் சாமுவேல், மாநகர அணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், ஜெயசீலி, மரியகீதா, ரெக்ஸின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் சந்தானம் நன்றி கூறினார்.

    • தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பா குளத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • தூர்வாரும் பணி தொடக்க விழாவிற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசனத்தில் தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பா குளம் கடலில் பாதி கடம்பா என விவசாயிகள் கூறும் அளவிற்கு பெரிய குளமான கடம்பா குளத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    தூர்வாரும் பணி

    இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போய் உள்ள நிலையில் கடைமடை பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும் என கடந்த 20 வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    மேலும் கடம்பாகுளம் பாசன கால்வாய் தூர்ந்து போய் அதன் முழு கொள்ளளவை எட்ட முடியாமல் சிறு மழைக்கு கூட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியது.

    இதனை அடுத்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கடம்பாகுளம் பாசன விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான உபரிநீர் கால்வாய் தூர் வாரும் பணியின் சீரமைப்பு பணிகள் திட்ட தொடக்க விழா நேற்று கடம்பா குளத்தில் நடைபெற்றது விழாவிற்கு மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று கடம்பா குளம் உபரி நீர் கால்வாய் ரூ.34 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடம்பா குளம், கால்வாய் குளம், தென்கரை குளம், வெள்ளூர் குளங்களின் கரைகளை பலப்படுத்துதல், கால்வாய் முன்புறம் கரை அமைத்தல், நீர் வரத்து கால்வாய் பலப்படுத்துதல், மடைகளை சீரமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் என பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

    இத் திட்டத்தை தந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் நன்றினை தெரிவித்து கொள்கிறோம். அதேபோல் துறையூர் அங்கமங்கலம் சாலையை கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.84 லட்சம் மதிப்பில் சீரமைத்து தரப்படும். இப்பணிகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். கடம்பா குளம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் கடம்பாகுளம் உபரி நீர் வடிகால் ஓடையில் வெள்ளநீர் சீராக செல்லும்.

    இதன் மூலம் விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் உட்புகுவது தடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஸ்ரீவைகுண்டம், கால்வாய், வெள்ளூர், ஆதிச்சநல்லூர், புதுக்குடி மற்றும் ஏரல் தாலுகாவில் உள்ள ஆதிநாதபுரம், செம்பூர், வெள்ளமடம், நாசரேத், புரையூர், அங்கமங்கலம், குரும்பூர், குருகாட்டூர், கல்லாம்பாறை, ராஜபதி, தென்திருப்பேரை மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள சுகந்தலை, மேலாத்தூர், ஆத்தூர் கஸ்பா ஆகிய கிராமங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் என கூறினார்

    மண்சாலை

    மேலும் விவசாயிகள் மணத்தி- ராஜபதி சாலையினை தங்களுடைய நிலத்தின் வழியாக மண் சாலையாக அமைத்துள்ளார்கள். அந்த சாலையினை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படும். கடம்பா குளம் உபரி நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மீண்டும் பெருமைமிகு குளமாக மாற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    20ஆண்டு கோரிக்கை

    மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

    விவசாயிகளின் 20 ஆண்டுகால கோரிக்கையான கடம்பா குளம் உபரிநீர் கால்வாய் தூர் வாரும் பணிகள் நேற்று ெதாடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடம்பாகுளம் தண்ணீர் நிரம்பினால் இப்பகுதி இரு போகம் விளைச்சல் நடைபெறும்.

    மேலும் புறையூர் பாலம் சரி செய்யும் திட்டங்களும் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் அமைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தை நிறைவேற்ற காரணமாக இருந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, ஆவின் தலைவர் சுரேஷ் குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பத்மா, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர்,

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், கூட்டுறவு வங்கி தலைவர் உமரிசங்கர், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார், பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், துணை தலைவர் அமிர்த வள்ளி, பேரூராட்சி உறுப்பினர் ஆனந்த், மற்றும் உறுப்பினர்கள், நகர செயலாளர் முத்து வீர பெருமாள், ஆழ்வை மத்திய ஒன்றிய தி.மு.க. அவை தலைவர் மகரபூசணம், நட்டார், பால்சித்தர், ஆழ்வை ஒன்றிய விவசாய சங்க தலைவர் பூலான், ஆழ்வை நகர தி.மு.க. செயலாளர் கோபிநாத், மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், நயினார், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    இதனை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். இதில்100 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி போல் பேட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் அறுசுவையுடன் கூடிய மதிய உணவை வழங்கி பிறந்தநாள் விழாவை மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.

    முன்னதாக கனிமொழி எம்.பி.யின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் பகுதியில் பிரமாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வ ராஜ்,விண்மீன் டிரஸ்ட் பாலா, பகுதி செயலா ளர்கள் சுரேஷ், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா, மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், ஜான்சிராணி, விஜயலட்சுமி துரை வானி மார்ஷல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்தரன், பாலன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் மற்றும் நிர்வாகிகள் செல்வக்குமார், அருண், பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பிறந்த நாள் விழா ஆழ்வார்திருநகரியில் கொண்டாடப்பட்டது.
    • பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. ஆழ்வை பேரூர் தி.மு.க. செயலாளர் கோபிநாத், பேரூராட்சி துணைத் தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் பேரூர் செயலாளர் முத்துராமலிங்கம், கவுன்சிலர்கள் ராஜலட்சுமி, ஹஜராபேகம், மந்திரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கனிமொழியின் பிறந்தநாள் விழா சித்தம்பலம் பிரிவில் கொண்டாடப்பட்டது.
    • தி.மு.க. கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     பல்லடம் :

    பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் பிறந்தநாள் விழா சித்தம்பலம் பிரிவில் கொண்டாடப்பட்டது.

    ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் தி.மு.க. கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. நிர்வாகிகள் சாமிநாதன், சசிகுமார் இளைஞர் அணி ராஜேஸ்வரன், பாலகுமார், குப்புசாமி, பிரகாஷ், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கனிமொழி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    • செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தார்.
    • திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புதியவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    வளர்ந்து வரும் நகரமான திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்வதற்கு ஒரு ெரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் பல ஊர்கள் சுற்றி பல மணி நேர பயணத்திற்கு பின்பு சென்னை செல்கிறது.இதனால் கூடுதலாக திருச்செந்தூரில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி வழியாக புதியதாக விரைவு ரெயில் ஒன்று இயக்க வேண்டும்.அதுவும் நேர்வழியில் இயக்க வேண்டும் குறிப்பிட்ட வழித்தடத்தில் நின்று குறிப்பிட்ட நேரத்தில் சென்னை செல்ல வேண்டும். அப்படி புதிய ரெயில் இயக்கும்போது திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த 2 தொகுதியில்உள்ள ஏராளமான மக்கள் சென்னையில் தொழில் செய்வதால் கோவில் கொடை விழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் சென்று வர வசதியாக இருக்கும். அதனால் புதிய ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்று கொண்ட கனிமொழி எம்.பி. இதுசம்பந்தமாக அதிகாரியுடன் கலந்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் கட்டுக்கோட்பாக இருந்து தேர்தலில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசினார்.
    • ஆண், பெண் வித்தியாசம் வந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரையும் உடன் பிறப்புகள் என்று அழைத்தவர் கருணாநிதி என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஒன்றிய, நகர, பேரூர் கழக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் தி.மு.க.வின் துணை பொதுச்செய லாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கனவு பலிக்காது

    அப்போது கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

    தமிழகத்தில் இரண்டு, மூன்றாக பிரிந்து போனவர்கள் மற்றும் டெல்லியில் உள்ளவர்கள் எல்லோரும் தி.மு.க.வை எந்த வகையிலாவது வீழ்த்தி விடலாம் என நினைத்து வருகிறார்கள். அந்த கனவு பலிக்காது.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கட்டுக்கோட்பாக இருந்து தேர்தலில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என பேசினார்.

    கனிமொழி எம்.பி.

    இதனை அடுத்து கனிமொழி எம்பி பேசியதாவது:-

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். தி.மு.க.வை வீழ்த்த யாராலும் முடியாது. தி.மு.க.வை எதிர்த்து வெற்றி பெற யாராலும் இயலாது.

    நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள், பிரிவினை கள், பிரச்சினைகள், சச்சரவுகள் வந்துவிடக் கூடாது. அதனை புரிந்து கொண்டு தேர்தல் பணியில் நாம் செயல்பட வேண்டும்.

    நமது குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். ஆண், பெண் வித்தியாசம் வந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரையும் தன் உடன் பிறப்புகள் என்று அழைத்தவர் கருணாநிதி.

    தமிழ்நாட்டை பாதுகாப் பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தி.மு.க. ஆகும். திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க. திராவிட இயக்கமாக இல்லை. தமிழ்நாட்டை காப்பாற்றக் கூடிய கடமை தி.மு.க.வில் உள்ள அனைவருக்கும் உள்ளது. தமிழ்நாட்டை காக்க நாம் அத்தனை பேரும் ஒற்றுமையாக நின்று தேர்தலை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் காமராஜர் அரங்கில் ஒன்றிய அவைத் தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய துணை செயலர்கள் சீனிவாசன், அழகுராஜ், சின்னத்தாய், ஒன்றிய பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய செயலர் பீக்கிலிபட்டி முருகேசன் வரவேற்றார். இதில் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது:-

    தி.மு.க. சமூகத்துக்கான அடிப்படை கருத்துக்களை தாங்கி நிற்கக் கூடிய இயக்கமாகவும் அந்த இயக்கத்தின் கருத்துக்களை மேம்படுத்தக் கூடிய கட்சியாக இயங்கி கொண்டிருக்கிறது. அனைவருக்கும் இந்த சமூகத்தில் சமமான ஓர் இடம் உண்டு. அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு சமமாக கிடைக்க வேண்டும். இதற்கு எதிரே இருக்கக் கூடிய அனைத்தையும் கேள்வி கேட்பது தான் தி.மு.க. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய உலகத்தை, நாட்டை உருவாக்க வேண்டும். இது தி.மு.க.கொள்கை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை.

    இதற்கு நேர் எதிராக இருக்கக் கூடிய கொள்கை பா.ஜ.க.வின் கொள்கை. திராவிட இயக்கத்திற்கு எதிர் கருத்துக்களை கொண்டுள்ளது தான் பா.ஜ.க. திராவிட இயக்கத்தில் இருந்து வந்திருக்கிறோம் என சொல்லக்கூடிய அ.தி.மு.க., சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் உள்ள ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என கூறுகிறது.

    இப்படிப்பட்ட மோசமான நிலையில் அ.தி.மு.க. தன்னை வைத்துக் கொண்டுள்ளது. பா.ஜ.க.தமிழகத்தில் காலூன்ற முடியாது. தமிழகத்தில் உள்ள மக்கள் மத நம்பிக்கை உள்ள வர்களாக இருப்பார்கள். எது நம்முடைய முன்னேற்றத்திற்கு பயன்படும், எது எதிராக கொண்டு போய் சேர்க்கும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டுள்ளவர்கள். அதனால் பா.ஜ.க. கூறுவதை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.

    தி.மு.க. ஆட்சி அமைந்த பின், பெண்கள், விவசாயிகள், பள்ளி மாணவர்களுக்கு புதுமை திட்டம், மகளிருக்கு நகர பேருந்தில் இலவச பயணம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    இந்த திட்டங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்களை வருகின்ற மக்களவை தேர்தலில் வாக்குகளாக மாற்ற வேண்டும். கடந்த முறை ஒரு இடத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை முழுமையாக வெற்றி பெற வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் சந்திரசேகர், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், கட்சியின் மாவட்ட துணை செயலர் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினர் ராமர், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள் சண்முகராஜ் (விவசாய தொழிலாளரணி), ரமேஷ் (பொறியாளரணி), சந்தானம் (விவசாய அணி), மத்திய ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் பிரேமா துரைமுருகன், மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பகுத்தறிவு, சுயமரியாதைகளை சில கும்பல் சிதைத்து கொண்டிருக்கிறது என கனிமொழி எம்.பி. பேசினார்.
    • ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒண்டிவீரன் 251 வது நினைவு நாள் தமிழர் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடந்தது. ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கினார். இதில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழர்களின் வாழ்வு, விடுதலை, பண்பாடு போன்றவை இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் வடக்கில் இருந்து எழுதப்பட்ட வரலாறு காரணம் ஆகும். இவற்றில் தென்னிந்தியாவில் உள்ள தியாகிகள் மற்றும் பண்பாடு, கலாச்சாரம் போன்றவை இடம்பெற வில்லை. இவைகளை உடனடியாக இடம்பெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

    தமிழர்களின் தொன்மை, வாழ்வு, பண்பாடு, கலாசாரம் போன்றவைகளை அவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. மத்தியில் ஆலோசனை கேட்கும் அளவிற்கு நம்மிடம் பண்பாடு உள்ளது. அனைவருக்கும் வழிகாட்டி தமிழகம் தான். நாட்டின் சரித்திரத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது.

    நமது தியாகம், வரலாறு, பண்பாடு போன்றவைகள் புறக்கணிக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டுள்ளது. அதை நாம் மீட்டெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழகத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை போன்றவைகளை சில கும்பல் சிதைத்து கொண்டிருக்கிறது.

    எந்த காலத்திலும் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தி.மு.க. மற்றும் திராவிட கருத்துக்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வளவு ஒற்றுமையுடன் இருந்தால் வடக்கில் இருந்து யாரும் இங்கே கால் வைக்க முடியாது. இந்த உணர்வுடன் பழக வேண்டும். தமிழர்கள் வலிமையுடன் இருக்க நினைக்கும் ஆட்சி தி.மு.க.. இதற்கு நீங்கள் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சாத்தூர் ரகுநாதன், மணப்பாறை அப்துல் சமது, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார் முன்னாள் எம்.பி. லிங்கம், ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, ஒன்றிய செயலாளர்கள் சரவணமுருகன், ஞான்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×