search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்டமளிப்பு விழாவில் 1,166 பட்டதாரிகளுக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்க உள்ளார்.
    • பல்கலை. துணைவேந்தருக்கு அரசின் ஒப்புதல் இல்லாத நிலையில், மேலும் ஒரு ஆண்டு பதவியை நீட்டித்து கவர்னர் ஆர்.என்.ரவி அண்மையில் உத்தரவிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா வேப்பேரியில் இன்று நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். துணை தலைமை இயக்குனர் ராகவேந்திர பட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விழாவில் கால்நடைத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். கவர்னர் ஆர்.என்.ரவி 1166 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் மெடல்கள் வழங்கினார்.

    கேரளாவை சேர்ந்த டிரைவர் விஷ்ணுவிற்கு 13 விருதுகளை அவர் வழங்கி பாராட்டினார். விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் வரவேற்றார். பதிவாளர் டென்சிங் ஞானராஜ் உள்பட துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • ராக்கெட் ஏவுதளம் முதன்முதலில் ஆரம்பிக்க குரல் கொடுத்தது கலைஞரும், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும் தான்.
    • தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் அரசியல் பேசியுள்ளார் என்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மீனவர்களுக்கான ஒருவார கால இலவச பயிற்சி தொடக்க விழா இன்று காலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடந்தது.

    விழாவில் தமிழக மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் தி.மு.க. விளம்பரத்தில் சீன தேசிய கொடி இடம்பெற்ற சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அவர், "இந்த விவகாரத்தில் சிறிய தவறு நடந்துவிட்டது. இது தெரியாமல் நடந்த தவறு. அதில் எந்த நோக்கமும் இல்லை. எங்களுக்கு இந்தியாவின் மீது அதிக பற்று இருக்கிறது என்றார்.

    ராக்கெட் ஏவுதளம் முதன்முதலில் ஆரம்பிக்க குரல் கொடுத்தது கலைஞரும், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும் தான்.

    அதன்பிறகு எங்களுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியும் குரல் கொடுத்தனர். அதனால் குலசேகரபட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது.

    ஒரு அரசு விழாவில் திட்டத்தையும் பயனையும், புதிய திட்டங்களையும், தொடங்க இருக்கும் திட்டங்களையும் பற்றி பேசுவார்களே தவிர அரசியல் பற்றி பேச மாட்டார்கள். நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் அரசியல் பேசியுள்ளார் என்றார்.

    மேலும் தி.மு.க. தனித்து நின்றால் டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்ற அண்ணாமலை கேள்விக்கு பதில் அளித்த அனிதா ராதாகிருஷ்ணன், எங்களது கனிமொழி எம்.பி. மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இதற்கு பதில் கூறியுள்ளார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    • சின்ன கோவிலான்குளம் கிராமத்தில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டது.
    • ஆராய்ச்சி மைய கட்டிடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன கோவிலான்குளம் கிராமத்தில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அந்த ஆராய்ச்சி மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி எம்.பி. தனுஷ் குமார், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலை குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வெள்ளாட்டின ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்தார்.

    இதில் கால்நடை மருத்துவர் துறை மண்டல துணை இயக்குனர் ரோஜர், கால்நடை மருத்துவர் மலர்கொடி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கே எஸ் எஸ் மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து தென்காசி வருகை தந்தார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து தென்காசி வருகை தந்தார். அவருக்கு தென்காசி மாவட்ட எல்லையான ஆலங்குளத்தில் அழகு ட்ரைவ்-ன் ஓட்டல் அருகில் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், நகரச்செயலாளர் நெல்சன், காங்கிரஸ் மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன், மாவட்டபிரதிநிதி வாசு, மாறன், இளைஞரணி ரமேஷ், அத்தியூத்து கோமு, தளபதி முருகேசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூர் செயலாளர்கள், தி.மு.க. மாநில, மாவட்ட,ஒன்றிய,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • நம்முடைய இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாகவும், எதிர்கட்சிகளின் கூட்டணி உதிரி கட்சிகளின் கூட்டணியாகவும் உள்ளது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலக த்தில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தவைலர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டம் ஒன்றியம் வாரியாக, மாவட்டம் முழுவதும் என்ன நிகழ்வுகள் நடத்தலாம் என்பது குறித்து நடைபெறுவது மட்டுமின்றி, வரும் 4-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை குறித்தும், என்ன பணிகள் மேற்கொள்ளலாம் என முடிவு செய்வதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. அரசு யார் மீது வழக்கு போடலாம், யாரை மிரட்டி சிறையில் அடைக்கலாம் என்று திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது. முதல்-அமைச்சர் சொன்னதை போல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். போர் களத்திற்கு செல்லும் போது எப்படி ஆயுதத்திற்கு பட்டை தீட்டுவோமோ, அதேபோல் 2024-ல் நடைபெறும் தேர்தல் களத்தை சந்திப்பதற்கு மு.க.ஸ்டாலின் வழியில், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோர் தேர்தல் களத்தை முன்னெடுத்துச் சென்று பணியாற்றி வருகின்றனர்.

    மோடியின் மிரட்டலுக்கு 2024-ல் இந்தியா கூட்டணி முற்றுப்புள்ளி வைக்கும். எழுச்சி மாநாடு சம்பந்தமாக 4-ந் தேதி நமது மாவட்டத்திற்கு வரும் அமைச்சர் உதயநிதி, இரு மாவட்டங்களின் சார்பில் 1000 பொற்கிழிகள் கழக முன்னோடிகளுக்கு வழங்குகிறார்.

    அதேபோல், நடைபெறும் கூட்டத்திற்கு தெற்கு மாவட்டத்திலிருந்து சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். வடமாநிலங்களில் பா.ஜனதாவுக்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    நம்முடைய இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாகவும், எதிர்கட்சிகளின் கூட்டணி உதிரி கட்சிகளின் கூட்டணியாக உள்ளது. அண்ணாமலையின் நடைபயணத்தால் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலைஞர் நூற்றாண்டு விழாயையொட்டி தெற்கு மாவட்டத்தில் புதிதாக 100 கொடி கம்பங்கள் அமைப்பது, கலைஞரின் இமாலய சாதனைகளை துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவது, வருகிற 4-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்து இளைஞரணி கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட்செல்வின், மாடசாமி, செந்தூர் மணி, மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் பாலசிங், நவின்குமார், ரமேஷ், முத்து முகம்மது, சுடலை, ரவி, ஜோசப், கோட்டாளம், இசக்கிபாண்டியன், பாலமுருகன், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சரவணக்குமார், இளைய ராஜா, பகுதி செயலாளர் ஆஸ்கர், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ரவி என்ற பொன்பாண்டி, சாரதா பொன்இசக்கி, ஆரோக்கியமேரி, பேரின்பராஜ் லாசரஸ், செல்வகுமார், ரகுராமன், வீரபாகு, ஜான்பாண்டியன், விபிஆர் சுரேஷ், துறைமுகம் ராமசாமி, ராஜேந்திரன், ஜனகர், ஆனந்த், மகாவிஷ்ணு, பேரூர் செயலாளர்கள் இளங்கோ, ராயப்பன், சுப்புராஜ், நவநீத முத்துக்குமார், கண்ணன், கோபிநாத், ராமஜெயம், முத்துவீரபெருமாள், நவநீத பாண்டியன், ஜமீன் சாலமோன், மால்ராஜேஷ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறையினர் தூத்துக்குடி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
    • வழக்கு விசாரணையை செப்டம்பர் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்சஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2020-ம்ஆண்டு சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது.

    இதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறையினர் தூத்துக்குடி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இதன் மீதான விசாரணை கடந்த 20-ந்தேதி நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு ஆகஸ்ட் 23-ந்தேதி நடைபெறும் என அறிவித்தார். அதன்படி இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை வந்தது. அப்போது இருதரப்பினரும் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் இலங்கை அதிபரை வலியுறுத்திட கேட்டுக்கொண்டார்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி மாநில மாநாடு நடத்த உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்க ளது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கும், ஒன்றிய வெளியுறவுத் துறை மந்திரிக்கும் தொடர்ந்து கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார். இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 20-ந்தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திடவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறை வேற்றி அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் இலங்கை அதிபரை வலியுறுத்திட கேட்டுக்கொண்டார்.

    மேலும், வெளியுறவுத் துறை மந்திரியை தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை தடுத்திட கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி மாநில மாநாடு நடத்த உள்ளது.

    இம்மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும் என்று மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களின் அழைப்பினை ஏற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 18-ந்தேதி ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்

    இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • 10 கிலோமீட்டர் தூரம் கால்நடைகளை அழைத்து வந்து மருத்துவ வசதிகளை பெற வேண்டி உள்ளது.
    • காசிதர்மத்தில் அதிகமான ஆடு, மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

    தென்காசி:

    கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமையிலான தி.மு.க.வினர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர் அதில் கூறியிருப்பதாவது:-

    செங்கோட்டை ஒன்றியம் புதூர் பேரூராட்சி, கடைய நல்லூர் ஊராட்சி ஒன்றியம் காசிதர்மத்தில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். புதூர் பேரூராட்சி பகுதியில் உள்ளவர்கள் தங்கள் கால்நடைகளை செங்கோட்டைக்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கால்நடைகளை அழைத்து வந்து மருத்துவ வசதிகளை பெற வேண்டி உள்ளது. மேலும் கேசவபுரம் பகுதியில் அதிகமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே கேசவபுரத்தில் கால்நடை மருத்துவமனை அமைப்பது மிகவும் அவசியமாகிறது. அதேபோல காசிதர்மத்தில் அதிகமான ஆடு, மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

    இந்த பகுதியில் வளர்க்கப்படுகிற ஆடு, மாடுகளுக்கு நோய் வந்தால் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடையநல்லூருக்கு செல்ல வேண்டி இருக்கிறது. அல்லது அச்சம் புதூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே புதூர் பேரூராட்சி கேசவபுரத்திலும், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் காசிதர்மத்திலும், கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவினை பெற்றுக் கொண்ட கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியின் போது செங்கோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரும், (செ)புதூர் பேரூராட்சி தலைவருமான ரவிசங்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமி துரை, முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் காசி தர்மம்துரை, தொழிலதிபர் மாரித்துரை, ராமானுஜம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையம் அருகில் ரூ.5 கோடி மதிப்பில் வண்ண மீன் காட்சியகம் மற்றும் சில்லறை விற்பனையகம் அமைக்கப்படுகிறது.
    • வண்ண மீன் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்தியாவில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது.

    நெல்லை:

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையம் அருகில் ரூ.5 கோடி மதிப்பில் வண்ண மீன் காட்சியகம் மற்றும் சில்லறை விற்பனை யகம் அமைக்கப்படுகிறது.

    அடிக்கல் நாட்டு விழா

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடை பெற்றது. சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த னர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர், மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் சரவ ணக்குமார், உதவி இயக்குனர் புஷ்ரா சற்குணம், உதவி செயற் பொறியாளர் குரு பாக்கியம், இளநிலை பொறியாளர் அருண்குமார் கவுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    ரூ.5 கோடியில்

    பல்வேறு வகையான வண்ண மீன்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி மீன்வளர்ப்பு மற்றும் பொழுது போக்கு அம்சமாக வும், தொழில் ரீதியான வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் இந்த வண்ண மீன் காட்சியகம் மற்றும் சில்லறை விற்பனை கூடம் அமைக்கப்படுகிறது.

    சுமார் 5 ஆயிரம் சதுரடியில் 2 தளங்களுடன் கொண்ட 100-க்கும் மேற்பட்ட மீன் தொட்டி களில் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு உள்ள மீன் காட்சியகத்தில் சுறா, திருக்கை உள்ளிட்ட 40-க்கும் அதிகமான கடல் மீன்களும், ஆஸ்கர், டிஸ்கஸ் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நன்னீர் வண்ண மீன்களும் காட்சிப்படுத்தப் படும்.

    வெளிநாட்டு தொழில்நுட்பம்

    இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவி கள் விழிப்புணர்வுக்காகவும், அலங்கார மீன்கள் சார்ந்த கல்வி அறிவு பெறவும், பொழுது போக்கிற்காகவும் செயல்படுத்த இருக்கிறோம். இது வெளிநாட்டு தொழில் நுட்பங்களை கொண்டு நவீன சுத்திகரிப்பு உபகர ணங்களை பயன்படுத்தி இயக்கப்படும் முதல் அரசு வண்ண மீன் காட்சியகம் ஆகும்.

    மேலும் தனியாக இயங்க கூடிய அவசர மற்றும் மீன் உயிரி காக்கும் கூடமும் இதில் அடங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கால்நடை கல்லூரி

    பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்க ளிடம் கூறும் போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மீன்வள கல்லூரியும், தென்காசி மாவட்டத்தில் அரசு கால்நடை கல்லூரியும் கேட்டு கோரிக்கை வருகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.

    ரூ.52 கோடியில் கூடுதாழை, கூட்டப்பனை யில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வண்ண மீன் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்தியாவில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது.

    2-ம் இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி யான கொளத்தூர் உள்ளது. விரைவில் இதனை முதலிடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் படும்.

    தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் கடலில் அடிக்கடி மோதி கொள்ளும் சம்பவங்களை தடுக்க ரோந்து படகு கேட்டு கோரிக்கை வந்துள்ளது. விரைவில் கடலோர காவல் படையினருக்கு ரோந்து படகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    'ஓ.பன்னீர்செல்வம் காலாவதியானவர்'

    விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம், தி.மு.க.வின் 'பி' டீமாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளதாக அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் கூறி வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், ஓ.பன்னீர் செல்வம் காலாவதியானவர் என்று கூறி சென்றார்.

    • இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்.
    • பல்வேறு திட்டங்களை வரும் காலங்களில் தி.மு.க. அரசு செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது.

    ஆறுமுகநேரி, மே. 9-

    தி.மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் முகம்மது அப்துல் காதர் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் முகம்மது மொய்தீன், நகர் மன்ற தலைவர் முத்து முகம்மது, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முகம்மது அலி ஜின்னா, சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுகு ரெங்கநாதன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடைதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவராக திகழும் நமது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக விளங்குகிறார். வருகின்ற காலத்தில் பாரதீய ஜனதாவை மத்திய அரசிலிருந்து வீழ்த்தும் நோக்கத்தில் அவர் செயல்பட்டு வருகிறார்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற காலத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. அப்போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கினார். மகளிருக்காக இலவச பஸ், அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவிகள் கல்லூரிக்கு செல்லும்போது மாதந்தோறும் ரூ.ஆயிரம், முதியோர், மாற்றுத்திறனாளி களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க ரூ.800 கோடி செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இப்படியாக மேலும் பல்வேறு திட்டங்களை வரும் காலங்களில் தி.மு.க. அரசு செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது.அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வின் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், வக்கீல் கிருபாகரன், வக்கீல் விஜி கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட பிரதிநிதிகள் லேண்ட் மம்மி, பன்னீர் செல்வன், மாவட்ட சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பாளர்கள் ஜலீல், ஹாஜி முராசாகிப், நகராட்சி துணை தலைவர் சுல்தான் லெப்பை, நகர துணை செயலாளர்கள் கதிரவன், முகம்மது நௌபல், ராம ஜெயம், நகர பொருளாளர் தாஜ்ஜுதீன், மகளிரணி அமைப்பாளர்கள் பூங்கொடி, மல்லிகா, நகர மாணவரணி அமைப்பாளர் முகம்மது முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் குதிரைமொழி ஊராட்சி சோலை குடியிருப்பில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சாமிநாதன், உடன்குடி யூனியன் ஆணையாளர் பழனிசாமி, ஊராட்சி தலைவர் சிவசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக மீன்வளம். மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைசெயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி பேரூராட்சி தலைவரும், உடன்குடி நகர தி.மு.க. செயலாளருமான சந்தையடி மால்ராஜேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதிகள் மனப்பாடு ஜெயபிரகாஷ், மெஞ்ஞானபுரம் ராஜபிரபு, முபாரக், ஒன்றிய பொருளாளர் விஜயன், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் மோகன், குதிரைமொழி ஊராட்சி செயலாளர் சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடக்க விழாவிற்கு மால் ராஜேஷ் தலைமை வகித்தார்.
    • மெஞ்ஞானபுரம் பஜாரில் இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    உடன்குடி:

    முதல்-அமைச்சரும், தி.மு.க., தலைவருமான மு.க.ஸ்டாலின் கோடை காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்க வேண்டும் என அறிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் உடன்குடி பேரூர் தி.மு.க., செயலாளரும், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவருமான மால் ராஜேஷ் ஏற்பாட்டில் உடன்குடி மெயின் பஜாரில் நீர், மோர் பந்தல் தொடக்க விழாவிற்கு மால் ராஜேஷ் தலைமை வகித்தார்.

    பேரூராட்சி கவுன் சிலர்கள் ஜாண்பாஸ்கர், சரஸ்வதி பங்காளன், பஷீர், பிரதீப் கண்ணன், ஆபீத், மும்தாஜ், சபனா, அன்பு ராணி ஆகியோர் முன்னி லை வகித்தனர். நீர், மோர் பந்தலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்து பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர் வழங்கினார்.

    இதில் மூக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணா ச்சலம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாநில மகளிர் பிரச்சார குழு செயலாளர் ஜெஸி பொன் ராணி, உடன்குடி பேரூர் வார்டு செயலாளர்கள் அன்வர் சலீம், சித்திரை செல்வன், சலீம், பஷீர், முருகேசன், பாலசிங், ஆனந்த், ஆட்டோ கணேசன், சாம்நேஸ், ராஜேந்திரன், முத்துப் பாண்டி, கணேஷ், நாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் ஹீபர் மோசஸ் ஸ்மைல்சன், முபாரக் மற்றும் பேரூர் நிர்வாகிகள் அப்துல் ரசாக், தங்கம், திரவியம், மேகநாதன், பிரவீனா, ஹரி, ராஜ்குமார், இஸ்மாயில் இசக்கிமுத்து, கணேசன், நிர்மல்சிங், இசக்கிப்பாண்டி, ஸ்டெல்லா, செண்பகவள்ளி, கிளாட்வின், பைசுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மெஞ்ஞானபுரம்

    உடன்குடி மேற்கு ஒன்றியம் மெஞ்ஞானபுரம் பஜாரில் கோடைகால இலவச நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இலவச நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழரசம், நீர், மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெசி பொன்ராணி, மாவட்ட பிரதிநிதிராஜா பிரபு, கிளை செயலாளர்கள் ஜெரால்டு, ஜெயக்குமார், சுடலைக்கண், மாணவர் அணி முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் செய்திருந்தார்.

    ×