search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரைவு ரெயில்"

    • எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
    • யணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    பெரும்பாவூர்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் இருந்து நேற்று காலை 9.30 மணியளவில் விரைவு ரெயில் (ரெயில் எண்.16329) மதுரை நோக்கி புறப்பட்டது. 6-வது பெட்டியில் மதுரை சின்ன கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 23) என்பவர் பயணம் செய்தார். தொடர்ந்து எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்தது. உடனே கார்த்திக் மீட்கப்பட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சு மூலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த ரெயில் பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, ரெயில்வே ஊழியர்கள், போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை மதுராந்தகத்தில் நிறுத்தம்.
    • ரெயில்கள் புறப்படாமல் இருப்பதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி, ஜோத்பூர் நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி விரைவு ரயில், ராமேஸ்வரம் விரைவு ரயில் மற்றும் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை மதுராந்தகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

    சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் புறப்படாமல் இருப்பதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    • செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.
    • அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பினர்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அலுவலகத்தை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    இதில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.15 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.

    நாளை அங்கிருந்து கார் மூலமாக மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை காலை 10 மணிக்கு திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணிக்கு திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை திரும்புகிறார்.

    ரெயில் நிலையத்தில் முதலமைச்சரை, அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பி வைத்தனர்.

    • பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.
    • தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.

    தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது. விபத்து காரணமாக மற்றொரு தண்டவாளத்தில் விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தண்டவாளத்தை சீரமைத்து, ரெயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
    • வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மற்றும் 22-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை ரெயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

    சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மற்றும் 22-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை ரெயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

    சென்னை சென்ட்ரல்-பாலக்காடுக்கு இன்று முதல் 29-ந் தேதி வரை இயக்கப்படும் பாலக்காடு விரைவு ரெயில் (22651), பாலக்காடு டவுன்-பாலக்காடு சந்திப்பு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

    பாலக்காடு-சென்னை சென்ட்ரலுக்கு இன்று முதல் 30-ந் தேதி வரை புறப்பட வேண்டிய விரைவு ரெயில் (22652), பாலக்காடு சந்திப்பு-பாலக்காடு டவுன் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எதிர்பாராத விதமாக பாரதிதாசன் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • செம்மொழி விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வெள்ளாம்பெரம்பூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் மகன் பாரதிதாசன் (வயது 38 ). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். பின்னர் திருப்பூர் செல்வதற்காக வீட்டில் இருந்து தஞ்சாவூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து செம்மொழி விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினார். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ரெயிலானது தஞ்சை அருகே ஆலக்குடி - பூதலூர் ரெயில் நிலையத்துக்கு இடையே சென்றபோது எதிர்பாராத விதமாக பாரதிதாசன் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த பாரதிதாசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பாரதிதாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிரேத பரிசோதனை முடிந்து பாரதிதாசன் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இது குறித்து பாரதிதாசன் மனைவி அபிராமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரதமர் மோடிக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.கடிதம்
    • திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது:-

    ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு தினந்தோறும் 3 விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. (ரெயில் எண்: 12603/12604, 12759/12760 மற்றும் 17651/17652) பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்களின் வசதிக்காக இதில் ஏதாவது ஒரு விரைவு ரெயி லினை திருச்சிராப் பள்ளி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசின் தீவிர நடவ டிக்கை யின் பயனாக மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான இரட்டை ரெயில் பாதை முடிவடையும் தருவாயில் உள்ளது. ஐதராபாத் முதல் சென்னை வரும் 3 விரைவு ரெயில்களில் ஏதாவது ஒன்றினை கன்னியாகுமரி வரை நீட்டிப்ப தில் தொழில் நுட்ப ரீதியில் எந்தவித தடையும் இல்லை.

    இந்த ரெயிலினை விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பதால் 15 தென் மாவட்டங்கள் பெரிதும் பயன்பெறும். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் அங்கிருந்து கன்னியாகுமரி வந்து புனித நீராடிவிட்டு தங்கள் பகுதிகளுக்கு செல்வார்கள். குறிப்பாக ஐதராபாத் மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெருமளவில் கன்னியாகுமரி வந்து செல்கிறார்கள்.

    இந்த ரெயில் இயக்கப்படுவதன் மூலம் தென்மாவட்ட மக்களும் ஐதராபாத் மற்றும் ஆந்திரா மாநிலத்துக்கு செல்கின்ற பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

    கன்னியாகுமரி யிலிருந்து சென் னைக்கு குறை வான ரெயில்களே இயக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில் இந்த ரெயில் இயக்கப்படு வதன் மூலம் பயணி களின் இட நெருக்க டியை தவிர்க்க முடியும். ஐதராபாத் - சென்னை விரைவு ரெயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படும் போது 50 சதவீத டிக்கட்டுகள் சென் னைக்கும், 50 சதவீத டிக்கட்டுகள் தென் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த ரெயில் இயக்கப்பட்டால் கன்னியா குமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய இடங்க ளுக்கு சென்று பணிபார்க்கும் பணியாளர்கள், கல்வி பயில செல்லும் மாணவர்கள் பெரிதும் பயன டைவார்கள். குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ரெயில் பயணிகள் பயனடை வார்கள்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்துக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்களிலும் சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தடையும்.

    நெல்லை:

    செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்துக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேரடி ரெயில் இல்லை என்ற ரெயில் பயணிகளின் புகாரை நிவர்த்தி செய்யும் வகையில் இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

    இந்த ரெயிலை வாரத்திற்கு 3 முறை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர், ரெயில் ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், வருகிற 1-ந்தேதி முதல் வாரத்திற்கு 3 முறை இந்த ரெயிலை இயக்க தென்னக ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்களிலும் வண்டி எண். 20683 சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறு மார்க்கமாக வண்டி எண். 20684 செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும்.

    இந்த ரெயில்கள் விழுப்புரம், திருப்பாதிரி புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இதில் 2 இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 5 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

    • திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பது பாராட்டுக்குரியதாகும்.
    • நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் தென்கிழக்கு முனையாகவும் பணப்பயிர்கள் செழித்தோங்கும் வேளாண்மைப் பகுதியாகவும் மற்றும் கடல் சார் பகுதியாகவும் விளங்குகின்ற வேதாரண்யம் அகத்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வருகின்ற 8-ந் தேதி ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    20 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் இந்த ரெயில் சேவையால் பலரும் பயன்பெறுவர்.

    புகழ் பெற்ற வேதாரண்யம், அகத்தியன் பள்ளி, திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பது பாராட்டுக்குரியதாகும். இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள்.

    கன்னியாகுமரி போன்று வேதாரண்யமும் இந்திய நாட்டின் கடைசி எல்லையாக குறிப்பாக தென்கிழக்கு முனையாக, எல்லைப்பகுதியாக சிறப்பிடம் பெற்று இருப்பதால் வட இந்தியாவை யும் தென்னிந்தியாவையும் இணைக்கக்கூடிய வகையில் வேதாரண்யம் அகத்தியன்பள்ளியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயிலை இயக்குவதற்கும், வேதாரணியம் உப்பு சத்தியாகிரகத்தின் நினைவாக தியாகி சர்தார் வேதரத்தனம் பெயரில் வாரம் இருமுறை வேதாரண்யத்தில் இருந்து புதுடெல்லிக்கு திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை வழியாக வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு விரைவு ரயிலை இயக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உடன்குடியில் அனல் மின் நிலையம் திறப்பதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    • 16106 ,16105 ஆகிய ரெயில்கள் எப்பொழுதும் அதிக பயணிகளுடன் ஒடிக்கொண்டி ருக்கிறது.

    நாசரேத்:

    நாசரேத் நகர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் அசுபதி சந்திரன் தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் ஒரு முக்கியமான கோவில் நகரம். இங்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    மேலும் அதன் அருகில் உள்ள ஊர்களான உடன்குடியில் அனல் மின் நிலையம் திறப்பதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    மேலும் குலசேகரன்பட்டி னமும் ஒரு புண்ணிய நகரமாகும். அவ்வூரிலும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்குரிய வேலைகளும் இந்திய அரசாங்கத்தால் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    இந்த வேலைகளுக்காக பல தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வரை வந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்கின்றனர்.

    மேலும் நெல்லை- திருச்செந்தூருக்கு இடைப்பட்ட நாசரேத் ஊர் ஒரு கல்வி நகரமாகும். இவ்வூரில் பல பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி கல்லுாரிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை சிறப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.

    பலதரப்பட்ட மக்களும் வந்து செல்வதற்கு வசதியாக வண்டி எண் 16106 ,16105 ஆகிய ரெயில்கள் திருச்செந்தூர்-சென்னை, சென்னை-திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் எப்பொழுதும் அதிக பயணிகளுடன் ஒடிக்கொண்டி ருக்கிறது. இதில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளதால் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும் கார்டு லைன் வழியாக பகல் நேர விரைவு ரெயில் இயக்கிட வேண்டும்.

    திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும் கார்டு லைன் வழியாக பகல் நேர விரைவு ரெயில் இயக்கி தந்தால் இந்த பகுதி மக்கள் மிகவும் பயன் அடைவார்கள்.

    மேலும் இந்த பகுதிக்கு தொழில் வளர்ச்சியும் கிடைக்கும். மேலும் இங்குள்ள மக்கள் நலன் கருதி வண்டி எண் 16845 ஈரோட்டில் இருந்து நெல்லை, வண்டிஎண் 16846 நெல்லையில் இருந்து ஈரோடு வரை ரெயில் களை மேற்சொன்ன காரணங்களுக்காக திருச்செந்தூர் வரை நீட்டித்து தருமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தார்.
    • திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புதியவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    வளர்ந்து வரும் நகரமான திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்வதற்கு ஒரு ெரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் பல ஊர்கள் சுற்றி பல மணி நேர பயணத்திற்கு பின்பு சென்னை செல்கிறது.இதனால் கூடுதலாக திருச்செந்தூரில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி வழியாக புதியதாக விரைவு ரெயில் ஒன்று இயக்க வேண்டும்.அதுவும் நேர்வழியில் இயக்க வேண்டும் குறிப்பிட்ட வழித்தடத்தில் நின்று குறிப்பிட்ட நேரத்தில் சென்னை செல்ல வேண்டும். அப்படி புதிய ரெயில் இயக்கும்போது திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த 2 தொகுதியில்உள்ள ஏராளமான மக்கள் சென்னையில் தொழில் செய்வதால் கோவில் கொடை விழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் சென்று வர வசதியாக இருக்கும். அதனால் புதிய ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்று கொண்ட கனிமொழி எம்.பி. இதுசம்பந்தமாக அதிகாரியுடன் கலந்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

    • விரைவு ரெயிலை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    நெல்லை:

    தெற்குரெயில்வே மஸ்தூர் யூனியன் மதுரை கோட்ட நெல்லை கிளை சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்தியசங்க துணைத்தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். எஸ்.ஆர். எம். யூ. நெல்லை கிளை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரராஜா சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோவை-சீரடி சுற்றுலா விரைவு ரெயிலை தனியாருக்கு விற்பனை செய்ததை திரும்பபெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    ×