search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
    X

    ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

    • எதிர்பாராத விதமாக பாரதிதாசன் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • செம்மொழி விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வெள்ளாம்பெரம்பூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் மகன் பாரதிதாசன் (வயது 38 ). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். பின்னர் திருப்பூர் செல்வதற்காக வீட்டில் இருந்து தஞ்சாவூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து செம்மொழி விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினார். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ரெயிலானது தஞ்சை அருகே ஆலக்குடி - பூதலூர் ரெயில் நிலையத்துக்கு இடையே சென்றபோது எதிர்பாராத விதமாக பாரதிதாசன் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த பாரதிதாசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பாரதிதாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிரேத பரிசோதனை முடிந்து பாரதிதாசன் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இது குறித்து பாரதிதாசன் மனைவி அபிராமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×