என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஐதராபாத் - சென்னைக்கு தினந்தோறும் இயக்கப்படும் விரைவு ரெயிலினை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்
- பிரதமர் மோடிக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.கடிதம்
- திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.
நாகர்கோவில் :
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது:-
ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு தினந்தோறும் 3 விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. (ரெயில் எண்: 12603/12604, 12759/12760 மற்றும் 17651/17652) பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்களின் வசதிக்காக இதில் ஏதாவது ஒரு விரைவு ரெயி லினை திருச்சிராப் பள்ளி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசின் தீவிர நடவ டிக்கை யின் பயனாக மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான இரட்டை ரெயில் பாதை முடிவடையும் தருவாயில் உள்ளது. ஐதராபாத் முதல் சென்னை வரும் 3 விரைவு ரெயில்களில் ஏதாவது ஒன்றினை கன்னியாகுமரி வரை நீட்டிப்ப தில் தொழில் நுட்ப ரீதியில் எந்தவித தடையும் இல்லை.
இந்த ரெயிலினை விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பதால் 15 தென் மாவட்டங்கள் பெரிதும் பயன்பெறும். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் அங்கிருந்து கன்னியாகுமரி வந்து புனித நீராடிவிட்டு தங்கள் பகுதிகளுக்கு செல்வார்கள். குறிப்பாக ஐதராபாத் மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெருமளவில் கன்னியாகுமரி வந்து செல்கிறார்கள்.
இந்த ரெயில் இயக்கப்படுவதன் மூலம் தென்மாவட்ட மக்களும் ஐதராபாத் மற்றும் ஆந்திரா மாநிலத்துக்கு செல்கின்ற பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
கன்னியாகுமரி யிலிருந்து சென் னைக்கு குறை வான ரெயில்களே இயக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில் இந்த ரெயில் இயக்கப்படு வதன் மூலம் பயணி களின் இட நெருக்க டியை தவிர்க்க முடியும். ஐதராபாத் - சென்னை விரைவு ரெயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படும் போது 50 சதவீத டிக்கட்டுகள் சென் னைக்கும், 50 சதவீத டிக்கட்டுகள் தென் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த ரெயில் இயக்கப்பட்டால் கன்னியா குமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய இடங்க ளுக்கு சென்று பணிபார்க்கும் பணியாளர்கள், கல்வி பயில செல்லும் மாணவர்கள் பெரிதும் பயன டைவார்கள். குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ரெயில் பயணிகள் பயனடை வார்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்