search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "service change"

    • ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
    • வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மற்றும் 22-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை ரெயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

    சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மற்றும் 22-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை ரெயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

    சென்னை சென்ட்ரல்-பாலக்காடுக்கு இன்று முதல் 29-ந் தேதி வரை இயக்கப்படும் பாலக்காடு விரைவு ரெயில் (22651), பாலக்காடு டவுன்-பாலக்காடு சந்திப்பு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

    பாலக்காடு-சென்னை சென்ட்ரலுக்கு இன்று முதல் 30-ந் தேதி வரை புறப்பட வேண்டிய விரைவு ரெயில் (22652), பாலக்காடு சந்திப்பு-பாலக்காடு டவுன் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    சென்னை:

    பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூருக்கு இரவு 8.50 மணிக்கும், அரக்கோணத்துக்கு இரவு 9.15, 10.10 மணிக்கும், பட்டாபிராமுக்கு இரவு 10.35 மணிக்கும், ஆவடிக்கு இரவு 11.25 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்களும், பட்டாபிராம்-மூர்மார்க்கெட்டுக்கு இரவு 7.35, 9.50 மணிக்கு புறப்படும் ரெயில்களும், அரக்கோணம்-மூர்மார்க்கெட்டுக்கு இரவு 9.25, 9.45 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்களும், திருத்தணி-மூர்மார்க்கெட் இரவு 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும் முழுவதுமாக இன்று ரத்து செய்யப்படுகின்றன.

    * சென்னை கடற்கரை-அரக்கோணம் நள்ளிரவு 1.20 மணிக்கும், மூர்மார்க்கெட்-ஆவடி நள்ளிரவு 12.15 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் அரக்கோணம்-கடற்கரை அதிகாலை 4 மணிக்கும், ஆவடி-மூர்மார்க்கெட் அதிகாலை 4 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * கடற்கரை-திருவள்ளூர் இரவு 7.05 மணிக்கு புறப்படும் ரெயில் ஆவடி-திருவள்ளூர் இடையேயும், மூர்மார்க்கெட்- திருத்தணி இரவு 7 மணிக்கு புறப்படும் ரெயில் திருவள்ளூர்-திருத்தணி இடையேயும், மூர்மார்க்கெட்-பட்டாபிராம் இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரெயில் ஆவடி-பட்டாபிராம் இடையேயும், அரக்கோணம்-மூர்மார்க்கெட் இரவு 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் ஆவடி-மூர்மார்க்கெட் இடையேயும், திருத்தணி-மூர்மார்க்கெட் இரவு 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் திருவள்ளூர்-மூர்மார்க்கெட் இடையேயும், திருவள்ளூர்- மூர்மார்க்கெட் இரவு 9.55 மணிக்கு புறப்படும் ரெயில் ஆவடி-மூர்மார்க்கெட் இடையேயும், பட்டாபிராம்-மூர்மார்க்கெட் இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் ஆவடி-மூர்மார்க்கெட் இடையேயும் இன்று பகுதியாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் நாளை முதல் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை காலை 4.40, 5.30 மணிக்கு புறப்படும் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 5.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    சென்னை-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கும்மிடிப்பூண்டி-சூலூர்ப்பேட்டை காலை 4.40 மணி மின்சார ரெயில் வருகிற 27, 29 மற்றும் 31-ந்தேதியும், காலை 4.20 மணி ரெயில் 28, 30, அடுத்த மாதம் 1, 6, 8, 9-ந்தேதிகளிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இரவு 11.20 மணி ரெயில் 27, 29, 31-ந்தேதி பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையேயும், இரவு 12.15 மணி ரெயில் 27, 29, 31-ந்தேதி எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் அதிகாலை 2.45 மணி ரெயில் 27, 29, 31-ந்தேதி கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையேயும், அதிகாலை 4 மணி ரெயில் 27, 29, 31-ந்தேதி கும்மிடிப்பூண்டி-எண்ணூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    27, 29, 31 ஆகிய தேதிகளில் தாம்பரம்-கும்மிடிப்பூண்டி மாலை 6.50 மணி ரெயில் கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டு காலை 6 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-கடற்கரை இடையேயும், சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 5.45 மணி ரெயில் 27, 28, 29, 30, 31, செப்டம்பர் 1, 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் சூலூர்ப்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையேயும், மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை காலை 9.55 மணி ரெயில் 30, 31, 6, 7-ந்தேதிகளில் கும்மிடிப்பூண்டி-சூலூர்ப்பேட்டை இடையேயும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

    இதனை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #KeralaRain #Keralaflood #KeralaTrain
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:16188) பாலக்காடு-எர்ணாகுளம் இடையேயும், மங்களூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ்(16857) கோவை-மங்களூர் இடையேயும், திருவனந்தபுரம்-சென்னை மெயில்(12624) திருவனந்தபுரம்-பாலக்காடு இடையேயும், மங்களூர்-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ்(12686) மங்களூர்-பாலக்காடு இடையேயும், திருவனந்தபுரம்-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ்(12696) திருவனந்தபுரம்-பாலக்காடு இடையேயும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    ஆலப்புழா-சென்னை(22640) ஆலப்புழா-கோவை இடையே இன்றும், நாளையும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் (22639) கோவை-ஆலப்புழா இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #KeralaRain #Keralaflood
    ×