search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomorrow in Erode"

    • மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மின்சாரம் சார்ந்த குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு ஈ.வி.என். சாலையில் உள்ள ஈரோடு நகரியம் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    கூட்டம் ஈரோடு மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே இந்த கூட்டத்தில் ஈரோடு நகர் முழுவதும் சேர்ந்த மற்றும் கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம்,

    சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என மின் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க.சார்பில் குதிரை ரேக்ளா பந்தயம் நாளை தொடங்குகிறது.
    • கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு வடக்கு மாவட்டம் தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை யொட்டி டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க., டி.என்.பாளையம் ஒன்றிய தொண்டரனி சார்பில் மாபெரும் குதிரை ரேக்ளா பந்தயம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு கலைஞர் சிலை அருகே தொடங்குகிறது.

    விழாவுக்கு டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் தலைமை தாங்குகிறார். ஒன்றிய அவைத்தலைவர் கருப்புச்சாமி வரவேற்கிறார்.

    ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் கார்த்திகேயன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் துரைசாமி, மரகதம் பால கிருஷ்ணன் ஆசிர்வாதம் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் மணி வர்மன், கே.எஸ்.திருமுருகன், கதிர் என்கிற கருப்புச்சாமி, பேரூர் செயலாளர்கள் வாணிப்புத்தூர் சேகர் என்கிற பழனிச்சாமி, பெரிய கொடிவேரி ஆறுமுகம், காசிபாளையம் எம்.எம்.பழனிச்சாமி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள் வாணிப்புத்தூர் சிவராஜ், பெரிய கொடிவேரி தமிழ்மகன் சிவா, காசிபாளையம் தமிழ்செல்வி வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    போட்டியை தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், துணை பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி உள்பட பலர் கலந்து ெகாள்கின்றனர்.

    • ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரெயில்வே மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இதனால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரெயில்வே மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டேல் வீதி, சிதம்பரம்காலனி, 80 அடி ரோடு, காந்திஜிரோடு, பெரியார்நகர் வீட்டுவசதி வாரியம், எஸ்.கே.சி.ரோடு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மரப்பாலம், வளையக்கார வீதி, பாலசுப்ராயலு வீதி.

    நேதாஜிரோடு, கள்ளு க்கடைமேடு, முனி சிபல்சத்தி ரம், ஜீவானந்தம்ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின்சார வினியோகம் இருக்காது.

    இதேபோல் ஈரோடு சூரியம்பாளையம் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் நசியனூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தட்டான்குட்டை, ஓடக்காடு, செல்லப்பம்பாளையம், லட்சுமிபுரம், கே.ஆர்.பி.நகர், சித்தோடு, வசுவபட்டி, நடுப்பாளையம், டெலிபோன்நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    ஈரோடு சூரியம்பாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் மாணிக்க ம்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்ப தால் அம்பேத்கர் நகர், நரிப்பள்ளம், மரவ பாளையம், அம்மன்நகர், ஆசிரியர் காலனி, செந்தமிழ்நகர், சாமிநகர், எல்லப்பாளையம், பெரிய சேமூர், சின்னசேமூர், வேலன்நகர், எம்.ஜி.ஆர்.நகர், சூளை, ஈ.பி.பி.நகர், அருள்வள்ளன் நகர், தென்றல் நகர், கள்ளன்கரடு, சீனாகாடு, பொன்னிநகர், மாமரத்துபாளையம், சொட்டையம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×