search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குதிரை ரேக்ளா போட்டி"

    • டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க.சார்பில் குதிரை ரேக்ளா பந்தயம் நாளை தொடங்குகிறது.
    • கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு வடக்கு மாவட்டம் தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை யொட்டி டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க., டி.என்.பாளையம் ஒன்றிய தொண்டரனி சார்பில் மாபெரும் குதிரை ரேக்ளா பந்தயம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு கலைஞர் சிலை அருகே தொடங்குகிறது.

    விழாவுக்கு டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் தலைமை தாங்குகிறார். ஒன்றிய அவைத்தலைவர் கருப்புச்சாமி வரவேற்கிறார்.

    ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் கார்த்திகேயன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் துரைசாமி, மரகதம் பால கிருஷ்ணன் ஆசிர்வாதம் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் மணி வர்மன், கே.எஸ்.திருமுருகன், கதிர் என்கிற கருப்புச்சாமி, பேரூர் செயலாளர்கள் வாணிப்புத்தூர் சேகர் என்கிற பழனிச்சாமி, பெரிய கொடிவேரி ஆறுமுகம், காசிபாளையம் எம்.எம்.பழனிச்சாமி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள் வாணிப்புத்தூர் சிவராஜ், பெரிய கொடிவேரி தமிழ்மகன் சிவா, காசிபாளையம் தமிழ்செல்வி வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    போட்டியை தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், துணை பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி உள்பட பலர் கலந்து ெகாள்கின்றனர்.

    ×