search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா"

    • திருச்சி ஜங்ஷனில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர் சிக்கினார்
    • மேலும் கேட்பாரற்று கிடந்த பையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

    திருச்சி,

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சட்ட விரோதமாக கடத்தல் பொருட்கள் மற்றும் சமூக விரோத செயல்பாடுகளை தடுப்பதற்காக ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரெயில்வே ஜங்ஷனில் உள்ள 2-வது நடை மேடை சுரங்க பாதையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.பின்னர் அவர் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்த போது 4 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 80 ஆயிரம். பின்னர் 4 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் நாயக் (26) என்பவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.மேலும் ரெயில் நிலையத்தில் நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது அதில்14 கிலோ எடையுள்ள 4 மூட்டை கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனை கடத்தி வந்த நபர் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. இந்த கஞ்சா பொட்டலங்கள் கவுரா எக்ஸ்பிரஸ் மூலம் ஒடிசா திருச்சிக்கு கடத்தி பெறப்பட்டதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.

    • திருச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது

    திருச்சி.

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி பிரியா (வயது 48) மற்றும் கேசவன் மனைவி முத்துமதி ( 60 ) ஆகிய 2 பெண்களை கைது செய்துள்ளனர்.

    மேலும் திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஸ்ரீரங்கம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை உறையூர் போலீசார் கைது செய்து காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

    இதேபோன்று உறையூர் விக்டோரியா ரோடு பெட்ரோல் பங்க் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஒரு சிறுவன் பிடிபட்டார். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ. ஒரு லட்சம் ஆகும். இது தொடர்பாக உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் ரெயில்வே ஜங்ஷன் போர்டிகோ பகுதியில் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ஒரு வாலிபர் சிக்கினார். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜாகபந்து நாயக் (32) என்பது தெரியவந்தது.

    அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக திருச்சி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவல்லி வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் எடமலைப்பட்டி புதூர் மற்றும் கோட்டை காவல் நிலைய பகுதிகளில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் கஞ்சா வழக்குகளில் 2 பெண்கள், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • அரியலூர் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • மாணவர்களுக்கு கஞ்சா விற்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது

    அரியலூர், 

    அரியலூர், செந்துறை சாலையிலுள்ள ஒரு பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், மாணவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப் படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன் பேரில் அங்கு சென்ற அரியலூர் நகர போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் அங்கு நின்று கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதை உறுதி செய்தனர்.இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர், மெக்கா நகரை சேர்ந்த சம்சுதீன் மகன் ஆசிப்(வயது 19), மதுரை மாவட்டம், பழங்காந்த்தம், பழைய முருகன் டாக்கிஸ் பகுதியைச் சேர்ந்த ரவி பூமிநாதன் மகன் ராஜ்குமார்(வயது 25) என்பது தெரியவந்தது.மேலும் இவர்கள் அரியலூரில் தங்கி துணிக் கடையில் ஒன்றில் வேலைப் பார்த்து வருவதோடு , இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது.

    அவர்களை போலீசார் சோதனையிட்டு, பாக்கெட்டில் இருந்த 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பான்மசாலா ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் இவர்கள், இதையடுத்து அரியலூர் நகர போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.

    • 2 கிலோ கஞ்சாைவ போலீசார் பறிமுதல் செய்தனர்
    • கோவையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது

    மேட்டுப்பாளையம்,

    அன்னூர் அருகே கீழ் கதவுக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது கீழ் கதவுக்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற வாலிபரிடம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவரிடம் 2 கிலோ கஞ்சா சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து பிடிபட்டவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உமேஷ்சந்திரபார்க் (வயது29) என்பதும், கோவையில் விற்பனை செய்வதற்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து உமேஷ்சந்திரபார்க் என்பவரை கஞ்சா விற்றதாக, அன்னூர் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
    • போலீசார் இவர்கள் 5 பேரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் சிலர் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி விற்ற காளப்பட்டி ரைஸ்மில் ரோட்டை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ஜனார்த்த னன் (வயது21), மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சபரீஷ் (19), கோவில்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த லோகேஷ்வரி (23), சரவணம்பட்டி ஜனதா நகரை சேர்ந்த ஆசினா (21), கோவில்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சந்தியா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் இவர்கள் 5 பேரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    கல்லூரி மாணவியான சந்தியா தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கஞ்சா விற்பனை செய்வதற்காக தனியாக லிங்கை உருவாக்கி உள்ளார். இதன் மூலம் அவர் கஞ்சா கிடைக்கும் இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களை கல்லூரி மாணவர்கள் மற்றம் இளைஞர்களுக்கு அனுப்பி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவியை 100-க்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கைது செய்யப்பட்ட லோகேஸ்வரி, ஆசினா ஆகியோர் பட்டப்படிப்பை படித்து முடித்து உள்ளனர்.

    இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து உள்ளனர்.

    கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி உள்பட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1.2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 4 வாலிபர்களும் பேர் தப்பியோட முயன்றனர்.
    • சாராய விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே உள்ள முருங்கப்பாக்கம் ஏரிக்கரையில் 4 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ரோஷனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். ஏரிக்கரைக்கு சென்ற போலீசாரை கண்டவுடன் 4 வாலிபர்களும் பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்த போலீசார், 4 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தினர்.

    இதில். திண்டிவனம் முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன், வெங்கடேஷ், ஹரிதாஸ், மாணிக்கம் என்பதும், இவர்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து கஞ்சா மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து 4 வாலிபர்கள் மீதும் வழக்கு ப்பதிவு செய்த போலீசார், இவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்குகி றார்கள், யார் யாருக்கு விநியோகம் செய்தார்கள் என்பது குறித்து விசாணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பாபநாசம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பாபநாசம் போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றின் அருகே கஞ்சா விற்பனை நடை பெறுவதாக பாபநாசம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிய 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தமகேந்திரன் (வயது 25), கதிர்வேல் (22), ஜம்புகேஸ்வரர் (22), விருதாச்சலத்தை சேர்ந்த முஹம்மது சல்மான் (19) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    • அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போரூர்:

    சென்னை கே.கே நகர் பொப்பிலி ராஜா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கணேஷ் உள்பட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து அவரது தந்தை காவலாளியாக வேலை பார்த்து வரும் கே.கே.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • 4 வாலிபர்கள் பேசிக் கொண்டிருந்தனர்
    • போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்த னர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டத் தில், புதுவை மாநிலத்தை யொட்டியுள்ள வானூர், கோட்டக்குப்பம், ஆரோ வில், குயிலாபாளையம் போன்ற பகுதிகளில் வெளி நாட்டினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கஞ்சா விற்பனை நடந்து வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் ஆரோவில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது ஆரோ வில் பகுதியில் உள்ள சவுக்கு தோப்பு அருகே 2 மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 4 வாலிபர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, முன்னுக் குப்பின் முரணான தகவலை கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து 4 வாலிபர்களையும் ஆரோ வில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்த னர். புதுவை மாநிலம் எல்லைப் பிள்ளைச்சாவ டியை சேர்ந்த தீபக் (வயது 25), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஆல்பர்ட் (29), நேரு நகரை சேர்ந்த வெங்கடேசன் (30), சக்தி நகரை சேர்ந்த மணிகண்டன் (32) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3/4 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள், 4 செல்போன்க ளை பறிமுதல் செய்தனர்.

    • 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    • சோதனையில் அவர்களிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    மதுரை

    கஞ்சா, மது, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட போதை வஸ்துக்களால் இளம் வயதினர் மிகவும் சீரழிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும் போதை பழக்கத்தில் ஆளாகின்றனர்.

    இதனால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, குடும்பத்தில் தகராறு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை நிகழ்கிறது. கஞ்சா கடத்தல் தடுப்பு சம்பந்தமாக மதுரை மாவட்ட சூப்பிரண்டு சிவபிரசாத் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

    கஞ்சா கடத்தியவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்தும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தும் மாவட்டம் முழு வதும் அதிரடி நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று இருந்த 2 பேரை பிடித்து விசாரித்த னர். முன்னுக்கு பின் முர ணாக தகவல் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.

    சோதனையில் அவர்க ளிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் கஞ்சா கடத்தியது மேக்கிழார் பட்டி சரவணன் (வயது 27), மேலபுதூர் சரவணன்(வயது 22) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சிறைக்காவலர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ஒரு மரத்தின் கீழ் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் செல்போன் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது.

    செங்குன்றம்:

    நெற்குன்றத்தை சேர்ந்தவர் செல்வா என்கிற வெள்ளைசெல்வா. கடந்த 2 மாதத்துக்கு முன்பு கஞ்சா கடத்தல் வழக்கில் இவரை கோயம்பேடு போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்நிலையில் சிறையில் உள்ள செல்வாவை சந்திக்க அவரது தங்கை மீனாலட்சுமி வந்தார். அவர் அண்ணனுக்கு கொடுப்பதற்காக ஜீன்ஸ்பேண்ட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்திருந்தார்.

    அப்போது ஜீன்ஸ்பேண்ட்டை பரிசோதித்த போது அதில் உள்ள பாக்கெட்டில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அண்ணன் செல்வாவுக்கு கொடுக்க கஞ்சாவை மறைத்து எடுத்து வந்ததாக மீனாலட்சுமி தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    புழல் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள பகுதியில் நேற்று இரவு சிறைக்காவலர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு மரத்தின் கீழ் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் செல்போன் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த செல்போனை பயன்படுத்திய கைதி யார்? ஜெயிலுக்குள் செல்போன் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • கஞ்சா புழக்கத்தை தடுக்க பள்ளிகள் அருகே போலீசார் ரோந்து தீவிரமாக நடந்து வருகிறது.
    • கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பாண்டியன்நகர் போலீசார் அவரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களிடம் கஞ்சா புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பள்ளிகளின் அருகே கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த வாரத்தில் பள்ளிகளின் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சேத்தூரில் உள்ள ஒரு பள்ளியின் அருகில் வாலிபர் ஒருவர் சந்தேகத்தி ற்கிடமாக நின்றிருந்தார். போலீசார் அவரிடம் சோதனை செய்தபோது 60 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் சேத்தூர் மந்தை தெருவை சேர்ந்த சிவ கணேசன் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். விருதுநகர் ஆவுடையாபுரம் பள்ளி அருகில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும் படி நின்றிருந்த வாலிபர்க ளிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் 100 கிராம் கஞ்சா பொட்ட லங்கள் இருந்தது. விசார ணையில் அவர்கள் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த தமிழ ரசன்(33), துலுக்கப்பட்டியை சேர்ந்த குணசேகரன்(32) என்பது தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்து வச்சகாரப்பட்டி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த மூதாட்டியை சோதனை செய்தபோது 150 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம் பட்டி தேவர் சந்து பகுதியை சேர்ந்த இந்திரா(60) என்பது தெரியவந்தது. டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.

    விருதுநகர் கருப்பசாமி கோவில் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சின்னபேராலியை சேர்ந்த வினோத் குருநாதன் (23), 30 கிராம் கஞ்சாவுடன் சிக்கினார். கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பாண்டியன்நகர் போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×