search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே.கே.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை- ஆந்திரா வாலிபர்கள் 2 பேர் கைது
    X

    கே.கே.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை- ஆந்திரா வாலிபர்கள் 2 பேர் கைது

    • அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போரூர்:

    சென்னை கே.கே நகர் பொப்பிலி ராஜா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கணேஷ் உள்பட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து அவரது தந்தை காவலாளியாக வேலை பார்த்து வரும் கே.கே.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×