search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரோவில் அருகே கஞ்சா வைத்திருந்த புதுவை வாலிபர்கள் கைது
    X

    ஆரோவில் அருகே கஞ்சா வைத்திருந்த புதுவை வாலிபர்கள் கைது

    • 4 வாலிபர்கள் பேசிக் கொண்டிருந்தனர்
    • போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்த னர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத் தில், புதுவை மாநிலத்தை யொட்டியுள்ள வானூர், கோட்டக்குப்பம், ஆரோ வில், குயிலாபாளையம் போன்ற பகுதிகளில் வெளி நாட்டினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கஞ்சா விற்பனை நடந்து வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் ஆரோவில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது ஆரோ வில் பகுதியில் உள்ள சவுக்கு தோப்பு அருகே 2 மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 4 வாலிபர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, முன்னுக் குப்பின் முரணான தகவலை கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து 4 வாலிபர்களையும் ஆரோ வில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்த னர். புதுவை மாநிலம் எல்லைப் பிள்ளைச்சாவ டியை சேர்ந்த தீபக் (வயது 25), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஆல்பர்ட் (29), நேரு நகரை சேர்ந்த வெங்கடேசன் (30), சக்தி நகரை சேர்ந்த மணிகண்டன் (32) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3/4 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள், 4 செல்போன்க ளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×