search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் பள்ளி அருகே கஞ்சா விற்பனை
    X

    அரியலூர் பள்ளி அருகே கஞ்சா விற்பனை

    • அரியலூர் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • மாணவர்களுக்கு கஞ்சா விற்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது

    அரியலூர்,

    அரியலூர், செந்துறை சாலையிலுள்ள ஒரு பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், மாணவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப் படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன் பேரில் அங்கு சென்ற அரியலூர் நகர போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் அங்கு நின்று கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதை உறுதி செய்தனர்.இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர், மெக்கா நகரை சேர்ந்த சம்சுதீன் மகன் ஆசிப்(வயது 19), மதுரை மாவட்டம், பழங்காந்த்தம், பழைய முருகன் டாக்கிஸ் பகுதியைச் சேர்ந்த ரவி பூமிநாதன் மகன் ராஜ்குமார்(வயது 25) என்பது தெரியவந்தது.மேலும் இவர்கள் அரியலூரில் தங்கி துணிக் கடையில் ஒன்றில் வேலைப் பார்த்து வருவதோடு , இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது.

    அவர்களை போலீசார் சோதனையிட்டு, பாக்கெட்டில் இருந்த 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பான்மசாலா ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் இவர்கள், இதையடுத்து அரியலூர் நகர போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.

    Next Story
    ×