என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி கஞ்சா விற்ற கல்லூரி மாணவி
- போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
- போலீசார் இவர்கள் 5 பேரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
கோவை:
கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் சிலர் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி விற்ற காளப்பட்டி ரைஸ்மில் ரோட்டை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ஜனார்த்த னன் (வயது21), மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சபரீஷ் (19), கோவில்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த லோகேஷ்வரி (23), சரவணம்பட்டி ஜனதா நகரை சேர்ந்த ஆசினா (21), கோவில்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சந்தியா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் இவர்கள் 5 பேரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
கல்லூரி மாணவியான சந்தியா தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கஞ்சா விற்பனை செய்வதற்காக தனியாக லிங்கை உருவாக்கி உள்ளார். இதன் மூலம் அவர் கஞ்சா கிடைக்கும் இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களை கல்லூரி மாணவர்கள் மற்றம் இளைஞர்களுக்கு அனுப்பி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவியை 100-க்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கைது செய்யப்பட்ட லோகேஸ்வரி, ஆசினா ஆகியோர் பட்டப்படிப்பை படித்து முடித்து உள்ளனர்.
இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி உள்பட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1.2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்