search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்த 4 வாலிபர்கள் கைது
    X

    திண்டிவனம் அருகே ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்த 4 வாலிபர்கள் கைது

    • 4 வாலிபர்களும் பேர் தப்பியோட முயன்றனர்.
    • சாராய விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே உள்ள முருங்கப்பாக்கம் ஏரிக்கரையில் 4 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ரோஷனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். ஏரிக்கரைக்கு சென்ற போலீசாரை கண்டவுடன் 4 வாலிபர்களும் பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்த போலீசார், 4 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தினர்.

    இதில். திண்டிவனம் முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன், வெங்கடேஷ், ஹரிதாஸ், மாணிக்கம் என்பதும், இவர்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து கஞ்சா மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து 4 வாலிபர்கள் மீதும் வழக்கு ப்பதிவு செய்த போலீசார், இவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்குகி றார்கள், யார் யாருக்கு விநியோகம் செய்தார்கள் என்பது குறித்து விசாணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×