search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒத்திகை"

    • நெல்லை மாவட்டத்தில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • குடியரசு தின விழாவின் போது வ.உ.சி. மைதானம் திருவிழா போல் காட்சியளிக்கும்.

    நெல்லை:

    நாடு முழுவதும் குடியரசு தினவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அங்கு கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். அன்றைய தினம் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி, பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட விடுதலை போராட்ட தியாகிகளை கவுரவித்து நலத்திட்ட உதவிகள், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு சான்றி தழ்கள் உள்ளிட்டவைகளை கலெக்டர் விஷ்ணு வழங்கி, அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.

    பரப்பளவு சுருங்கிவிட்டது

    இதற்காக பாளை வ.உ.சி. மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள் நடைபெறும் போது வ.உ.சி. மைதானம் திருவிழா போல் காட்சியளிக்கும். அங்கு நெல்லை மாவட்டம் முழுவதிலும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வருவார்கள். வ.உ.சி. மைதானம் முழுவதும் நிரம்பி பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

    ஆனால் சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன கேலரிகளுடன் மைதானம் அமைக்கப்பட்டு அதன் பரப்பளவு சுருங்கிவிட்டது. இதனால் தற்போது குறைந்த அளவு மக்களே அங்கு அமர முடியும். அதேபோல் மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகை நடத்துவதற்கும் மிகவும் சிரமமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    மைதானத்திற்குள் மழைநீர்

    இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் அங்கு குடியரசு தினவிழா நடைபெறுகிறது. அங்கு கடந்த 2 நாட்களாக அணிவகுப்பு ஒத்திகை நடந்து வந்த நிலையில், நேற்று பெய்த திடீர் மழையால் மைதானத்திற்குள் தண்ணீர் தேங்கி சகதியாக காட்சியளித்தது.

    இதனால் இன்று அங்கு நடைபெற இருந்த அணிவகுப்பு ஒத்திகை பாளை ஆயுதப்படை மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு நடைபெற்றது. இதற்கிடையே மைதானத்தில் மழை நீர் தேங்காவண்ணம் மணல் கொண்டு சமன்படுத்தும் பணியானது இன்று ஆர்.டி.ஓ. சந்திரசேகர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

    அங்கு மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் குடியரசு தினவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையே நாளை மறுநாள் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு பள்ளி மாணவ-மாணவிகளின் ஒத்திகை அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.


    பாளை வ.உ.சி. மைதானத்தில் சமன்படுத்தும் பணியை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் பார்வையிட்ட காட்சி.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் சமன்படுத்தும் பணியை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் பார்வையிட்ட காட்சி.


     


    • மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏதுமில்லை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் வகையில் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அதில் கோவிட் -19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளன.

    மேலும் போதியளவு மருத்துவர்கள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்று தடுப்புக்கான சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 கேஎல் மற்றும் 10 கே.எல். கொள்ளளவு திறன் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப ஆக்சிஜனுடன் தயார் நிலையில் உள்ளன.

    மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏதுமில்லை. கோவிட்-19 நோய் தொற்று வரும் நிலை இருந்தாலும் அதை முழுமையாக தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் ஒருங்கி ணைந்து தேவை யான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளன. பொது மக்களை பொறுத்தவரை கோவிட்-19 நோய் தொற்று குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாமல் மருத்துவத்துறை வழங்கும் ஆலோசனைகளை கடைபிடித்து முககவசம் பயன்படுத்தி பாதுகாப்புடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.செந்தில் குமார், சுகாதார ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடந்தது
    • கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உருவாகி உள்ள கொரோனா பி.எப்.7 வைரஸ் பரவல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் போன்ற வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடந்தது. டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் கொரோனா வார்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. நோயாளிகள் வந்தால் சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் இதில் பங்கேற்றனர்.

    • விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை மற்றும் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவா்களுக்கு செயல்விளக்கம் நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள், கேஸ் சிலிண்டர் இருக்கும் இடங்கள், கூரை வீடு, வைக்கோல் படப்புகள் ஆகிய இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது. அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பயிற்சியில் தலைமையாசிரியை ரோஸ்லின் சாந்தி, மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கடலில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை தீயணைப்பு படையினர் மீட்பு படையினர் ஸ்கூபா டைவ் மற்றும் உடனடி மீட்பு அதிவிரைவு வீரர்கள் எப்படி மீட்கின்றனர் என்று நிகழ்த்தி காட்டினர்.
    • ராயபுர சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    ராயபுரம்:

    வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதையொட்டி தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமையில் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஒத்திகை நிகழ்ச்சி காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் கடலில் நடைபெற்றது.

    இதில் மெரினா நீச்சல் வீரர்கள், தீயணைப்பு துறையினரோடு சேர்ந்து வீட்டில் உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பெரிய பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள், பெரிய டயர்கள், கட்டைகள், தெர்மாகோல்கள் போன்ற எளிதில் கிடைக்ககூடிய பொருட்களை வைத்தே பேரிடர் காலங்களில் எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது என்பது குறித்து செய்து காட்டினர்.

    மேலும் கடலில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை தீயணைப்பு படையினர் மீட்பு படையினர் ஸ்கூபா டைவ் மற்றும் உடனடி மீட்பு அதிவிரைவு வீரர்கள் எப்படி மீட்கின்றனர் என்று நிகழ்த்தி காட்டினர். இது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படவைத்தது. இதில் ராயபுர சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள்,மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஐட்ரீம் மூர்த்தி நிருபர்களிடம் கூறும்போது, போஜராஜன் கண்ணன் சுரங்கப்பாதை குறித்து ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதற்கு நான் ஏற்கனவே பதிலடி கொடுத்துள்ளேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராயபுரத்தில் தோல்வியுற்றுள்ளார். தேர்தலில் தோல்வி எதிரொலியாக அவர் மைக்மேனியா நோயோடு சேர்ந்து மனக்குழப்பத்திற்கு ஆளாகி இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காததால் அ.தி.மு.க.வை இரண்டாக உடைத்த ஜெயக்குமார் மீது அக்கட்சி தொண்டர்களே கடுமையான கோபத்தில் உள்ளனர். ராயபுரம் பகுதியை பொறுத்தவரை தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருந்தாலும் அந்த அளவிற்கான பாதிப்பு தற்போது ஏற்பட வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 160 காவலர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.
    • வெற்றிச்செல்வன் என்பவர் சிறந்த மீட்பாளருக்கான பதக்கத்தையும், சான்றிதழையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் 20 நாட்கள் ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 160 காவலர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் நாகை மாவட்டம், நகர போலீஸ் நிலையத்தை சேர்ந்த காவலர் வெற்றிச்செல்வன் என்பவர் சிறந்த மீட்பாளருக்கான பதக்கத்தையும் மற்றும் சான்றிதழையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார். அவரை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் காவலர் வெற்றிச்செல்வனை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    • ரெயில் விபத்து ஒத்திகை நடந்தது.
    • அவர்களுக்கு அருகில் இருந்த ரெயில்வே மருத்துவ குழு முதல் உதவி செய்தது.

    மதுரை

    மதுரை கூடல்நகர் நிலையத்தில் இன்று ரெயில்விபத்து மீட்பு ஒத்திகை நடந்தது. இதற்காக அரக்கோணத்தில் இருந்து துணை ஆணையர் வைத்தியலிங்கம் தலைமையில் 30 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை மதுரைக்கு வந்து உள்ளது.

    மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலி எழுப்பப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள், தளவாட சாமான்கள் மற்றும் அவசர சிகிச்சை மருந்து பொருட்களுடன் மீட்பு ரெயிலில் கூடல் நகருக்கு உடனடியாக புறப்பட்டுச் சென்றனர்.

    அங்கு ஏற்கனவே மீட்பு பணி ஒத்திகைக்காக, பயணிகள் ரெயில்பெட்டி கவிழ்க்கப்பட்டு இருந்தது. அந்தப் பகுதியில் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஒளிரும் ரிப்பன் மூலம் வேலி அமைத்தனர். அதன் பிறகு ரெயில்பெட்டியின் மேல் பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் துளையிடப்பட்டு, காயம் அடைந்ததாக, பயணிகள் வெளியே கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு அருகில் இருந்த ரெயில்வே மருத்துவ குழு முதல் உதவி செய்தது.

    அதன் பிறகு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பிறகு கூடல் நகர் ரெயில்நிலையத்தில் கவிழ்ந்து கிடந்த ரெயில்பெட்டி, கிரேன் மூலம் ரெயில்பாதையில் நிறுத்தப்பட்டது.

    முன்னதாக கூடல் நகர் ரெயில்நிலையத்தில் பயணிகள் தகவல் மையம், பயண சீட்டு பணம் திரும்ப அளிக்கும் அலுவலகம் ஆகியவை தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இது தவிர டிஷ் ஆன்டனாவுடன் நவீன தொலைத்தொடர்பு கருவிகளும் சம்பவ இடத்தில் நிலை நிறுத்தப்பட்டு இருந்தன.

    கூடல் நகர் ரெயில்மீட்பு பணிகள் ஒத்திகையில் முதுநிலை பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முதுநிலை தொலைத்தொடர்பு அதிகாரி ராம்பிரசாத், முதுநிலை எந்திரவியல் பொறியாளர் சதீஷ்சரவணன், முதல் நிலை ரெயில்இயக்க அதிகாரி மது, உதவி வர்த்தக மேலாளர் பிரமோத்குமார், உதவி ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமிஷனர் வைத்தியலிங்கம் கூறுகையில், இந்த ஒத்திகை மூலம், ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியோர் விரைவான மீட்பு பணிக்கான தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு உள்ளோம் என்றார்.

    • கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டால் தப்பிப்பது எப்படி? என ஏற்காட்டில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழவினர் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
    • கட்டிடங்களில் சிக்கி கொண்டவர்களை கட்டிட சுவற்றில் உடைப்பு ஏற்படுத்தி உள்ளே சென்று எப்படி மீட்பது என்றும் விளக்கினர்.

    ஏற்காடு:

    தேசிய பேரிடர் மீட்பு படையினர் சேலம் மாவட்டத்தில் சுற்று பயணம் செய்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மழை மற்றும் புயல் நேரங்களில் பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சென்ற அவர்கள் அங்கு உள்ள அரசு பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

    தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது கட்டிடங்கள் சேதமடைந்தாலோ அதில் இருந்து தப்பிப்பது எப்படி ? என செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இது தவிர கட்டிடங்களில் சிக்கி கொண்டவர்களை கட்டிட சுவற்றில் உடைப்பு ஏற்படுத்தி உள்ளே சென்று எப்படி மீட்பது என்றும் விளக்கினர். கட்டிடங்களின் மேல் பகுதியில் இருந்து கம்பி மூலம் பொதுமக்களை காப்பாற்றுவது எப்படி என்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இவர்களுடன் ஏற்காடு வருவாய் பேரிடர் மீட்பு குழுவினர் ஏற்காடு வட்டாச்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன், வெங்கடேசன், வனத்துறையினர், சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார், 108ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அர்ஜூன், மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தீவிரவாதிகள் போல படகில் வந்த 4 பேரை மடக்கி போலீசார் விசாரணை
    • கண்காணித்து பிடித்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீனை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டு

    கன்னியாகுமரி:

    கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், உள்ளூர் சட்டம்- ஒழுங்கு போலீசாரும் இணைந்து"சாகர்கவாச்" என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர்.

    2 நாட்கள் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று மாலை வரை நடக்கிறது. 2-வது நாள் காலையில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 3 அதி நவீன ரோந்து படகு மூலம் கடலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்ஸ்பெக்டர் நவீன் நேற்று மாலை 6 மணிக்கு கூடங்குளம் கடல் பகுதியில் போலீசாருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரு படகில் 4 பேர் சந்தேகப்படும் படியாக வந்து கொண்டிருந்தனர். மாறுவேடத்தில் இருந்த அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் யார்? என்பது தெரியவந்தது.

    அதில் 2 பேர் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் என்பதும், ஒருவர் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் சுங்க இலாகவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    கடல் வழியாக படகில் ஊடுருவியவர்களை கண்காணித்து பிடித்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீனை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்

    • ராமநாதபுரம் கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசார் ஒத்திகை நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெறும்.
    • தொண்டியில் உள்ள மரைன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் சாா்பில் கடலோர மாவட்டங்களில் சாகா் கவாச் என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்கியது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினா். இதில், 100-க்கும் மேற்பட்டோா் பலியாகினார்கள். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும், மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவம் மீண்டும் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

    இன்று (செவ்வாய்க்கி ழமை) காலை 6 மணிக்கு தொடங்கி, நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிவரை 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இதில், கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசார், குற்றப்பிரிவு போலீசார், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் காவல்துறையைச் சோ்ந்த பல்வேறு பிரிவினா் இணைந்து ஒத்திகையை நடத்துகின்றனா்.

    பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு, ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடலோர பகுதி முழுவதையும் போலீசார் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா். இதையடுத்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சாலை களில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொள்கி ன்றனா். கடலோரத்தில் வாழும் மீனவர்களுக்கு சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினம் முதல் சோழியக்குடி, மோர்ப் பண்ணை கடல் பகுதிகள் உள்ளன. இந்த வழியாக தேவி பட்டினம் வரை தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் ஆபரேசன் சாகர் கவாச் என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கடலோர காவல்படை போலீ சாருக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ஒத்திகை நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெறும்.

    இதில் போலீசாரின் சிலரை தீவிரவாதி போல் வேடமிட்டு கடல் மார்க்கமாக தப்பிப்பதாகவும், அதனை பிடிப்பதற்காக கடலோர காவல்படை போலீசார் கண்டுபிடிப்பதும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    அதன்படி வேதாரண்யம் அருகே கடலோர காவல்படை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சி கடலோர பகுதிகள் முழுவதும் வாகன தணிக்கை உட்பட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தொண்டியில் உள்ள மரைன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    • கடலூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
    • முக்கிய சுற்றுலாத் தலங்கள் கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    நவம்பர் 26, 2008 மும்பையில் கடல் வழியாக ஊடுருவி வந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பெரிய அளவில் தாக்குதலை நடத்தினார்கள். அதன் பிறகு இந்தியாவின் கடல் எல்லைகளை தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் வேடமிட்டு கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த வீரர்கள் கடல் வழியாக வந்து நகர்ப்புற பகுதிக்குள் ஊடுருவி வருவார்கள். அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து, மடக்கிப்பிடிக்க வேண்டும். இதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் சிறப்பு அம்சம்.

    இன்று காலை 6 மணிக்கு தொடங்கி, 2 நாட்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடக்கும். கடலூரில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 8 இன்ஸ்பெக்டர்கள், 15 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 500 காவலர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும் கடல் வழியாக தங்களது ரோந்து படகின் மூலம் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

    • 42 கடற்கரை கிராமங்களிலும் தீவிர கண்காணிப்பு
    • 3 அதி நவீன ரோந்து படகுமூலம் கடலுக்குள் சென்று தீவிர கண்காணிப்பு

    கன்னியாகுமரி :

    கடல் வழியாக தீவிரவாதி கள் ஊடுருவலை தடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீசாரும் இணைந்து சாகர்கவாச் என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை இன்றும் நாளையும் நடத்துகிறார்கள்.

    அதன்படி கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை இன்று காலை 8 மணிக்கு தொடங்கினார்கள். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாளை மாலை வரை தொடர்ந்து நடக்கிறது. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 3 அதி நவீன ரோந்து படகுமூலம் கடலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்ஸ்பெக்டர் நவீன் தலைமை யிலான ஒரு குழுவினர் இந்தியப் பெருங்கடல் அமைந்து உள்ள கன்னியாகுமரி கடல் பகுதியிலும் சப்-இன்ஸ்பெக்டர் நம்பியார் தலைமையில் ஒரு குழுவினர் வங்க கடல் அமைந்துஉள்ள கன்னியாகுமரி-உவரி இடையே உள்ள கடல் பகுதியிலும் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண் டன் தலைமையில் மற்றொரு குழுவினர் அரபிக்கடல் அமைந்து உள்ள கன்னியாகுமரி முதல் தேங்காய்ப்பட்டனம் வரை உள்ள கடல் பகுதியிலும் அதிநவீன ரோந்து படகில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இது தவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை யிலான 72 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரைப் பகுதிகளில் வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் உள்ள 42 கடற்கரை கிராமங்களிலும் கடலோர பாதுகாப்பு போலீசாரும் உள்ளூர் போலீசாரும் இணைந்து இரவு பகலாக 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் மோட்டார் சைக்கிளிலும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வரு கிறார்கள். சின்னமுட்டம், பஞ்சலிங்கபுரம், மகாதான புரம், தேங்காய்பட்டணம், கூடங்குளம் உள்பட 10 இடங்களில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாறு வேடங்களிலும் கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரி பகுதியில் உள்ள லாட்ஜூகளில் போலீ சார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ×