search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crew"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படத்தில் போதைப்பொருளை விற்பனையை தூண்டும் விதமாக காட்சிகள்.
    • பட குழுவினருக்கு படத்தில் போதை பொருள் பயன்படுத்தியது குறித்து நோட்டீஸ்.

    தெலுங்கில் சாய் தரம்தேஜ் நடிப்பில் கஞ்சா சங்கர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

    இந்தப் படத்தின் டிரைலர் காட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. படத்தின் டிரைலரைக் கண்ட தெலுங்கானா போதை பொருள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

    கஞ்சா சங்கர் என்ற சர்ச்சைக்குரிய தலைப்புடன் படத்தில் போதைப்பொருளை விற்பனையை தூண்டும் விதமாக பல்வேறு காட்சிகள் அமைப்பப்பட்டு இருந்தது.

    இதுபோன்ற படங்களில் சென்சார் போர்டு அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொண்டு தேவையற்ற காட்சிகளை நீக்க வேண்டும் என போதை பொருள் அமலாக்கப் பிரிவு இயக்குனர் சந்திப் சாண்டில்யா தெரிவித்தார்.

    மேலும், நடிகர் சாய் தரம் தேஜ், பட தயாரிப்பாளர் நாகவம்ஷி, இயக்குனர் சம்பத் நந்தி மற்றும் பட குழுவினருக்கு படத்தில் போதை பொருள் பயன்படுத்தியது குறித்து நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    • நிகழ்ச்சியில் அன்பு கோர் அண்ணாச்சி நூல் ஆசிரியர் வீரையன், பதிப்பாளர் குருமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது.
    • அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் உட்பட பிரமுகர்களும் பள்ளி ஆசிரியர்களும்,மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் குருகுலம் அறக்கட்டளை நிறுவனர் மறைந்த அப்பாக்குட்டி பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பள்ளியின் பி.டி.ஏ தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் புகழேந்தி, வர்த்தக சங்க மாநிலத்துணை தலைவர் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ் துறை தலைவர் டாக்டர் சேதுபதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் தருமையாதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த சுவாமிகள், முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன், நாகை எம்பி செல்வராஜ், முன்னாள் எம்பி பிவி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கிரிதரன்,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், நாகை மாவட்ட வர்த்தக சங்க தலைவர் வேதநாயகம், இலக்கிய பெருமன்ற நாகை மாவட்ட தலைவர் புயல் குமார், செங்கல்பட்டு தொழில் உரிமையாளர்தியாகராஜன், வக்கீல்கள் பாலச்சந்தி ரன்,நமசிவாயம், ஓய்வு பெற்ற பிடிஓ ராஜரத்தினம், அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் உட்பட பிரமுகர்களும் பள்ளி ஆசிரியர்களும்,மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அன்பு கோர் அண்ணாச்சி நூல் ஆசிரியர் வீரையன், பதிப்பாளர் குருமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது. கோயமுத்தூர் தியாகு குழுவினரின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், வேதாரண்யம் கோயில் ஆதின வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி் நடந்தது.

    குருகுலம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கயிலை மணி வேதரத்னம் வரவேற்றார். அலுவலர் ஸ்ரீதர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை குருகுலம் கல்வியியல் கல்லூரி நிர்வாகி கேடிலியப்பன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    • கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டால் தப்பிப்பது எப்படி? என ஏற்காட்டில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழவினர் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
    • கட்டிடங்களில் சிக்கி கொண்டவர்களை கட்டிட சுவற்றில் உடைப்பு ஏற்படுத்தி உள்ளே சென்று எப்படி மீட்பது என்றும் விளக்கினர்.

    ஏற்காடு:

    தேசிய பேரிடர் மீட்பு படையினர் சேலம் மாவட்டத்தில் சுற்று பயணம் செய்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மழை மற்றும் புயல் நேரங்களில் பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சென்ற அவர்கள் அங்கு உள்ள அரசு பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

    தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது கட்டிடங்கள் சேதமடைந்தாலோ அதில் இருந்து தப்பிப்பது எப்படி ? என செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இது தவிர கட்டிடங்களில் சிக்கி கொண்டவர்களை கட்டிட சுவற்றில் உடைப்பு ஏற்படுத்தி உள்ளே சென்று எப்படி மீட்பது என்றும் விளக்கினர். கட்டிடங்களின் மேல் பகுதியில் இருந்து கம்பி மூலம் பொதுமக்களை காப்பாற்றுவது எப்படி என்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இவர்களுடன் ஏற்காடு வருவாய் பேரிடர் மீட்பு குழுவினர் ஏற்காடு வட்டாச்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன், வெங்கடேசன், வனத்துறையினர், சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார், 108ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அர்ஜூன், மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×