search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police protest"

    • காவல்துறையினர், தங்களது துப்பாக்கி ஆயுதங்களை கீழே வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
    • கடத்தப்பட்ட போலீஸ் ஏ.எஸ்.பி. மொய்ரங்தம் அமித் சிங்கையும், அவரது பாதுகாவலரையும் காவல்துறையினர் மீட்டனர்.

    மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பால் பகுதியில் நேற்று ஆயுதங்களுடன் வந்த 200 பேர் கொண்ட கும்பல், போலீஸ் ஏ.எஸ்.பி. மொய்ரங்தம் அமித் சிங்கின் வீட்டை சூறையாடி, அவரையும் அவரது பாதுகாவலரை கடத்திச் சென்றுள்ளது.

    இதனால் கோபமடைந்த காவல்துறையினர், இதனைக் கண்டித்து, தங்களது துப்பாக்கி ஆயுதங்களை கீழே வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

    அதன் பின்னர் கடத்தப்பட்ட போலீஸ் ஏ.எஸ்.பி. மொய்ரங்தம் அமித் சிங்கையும், அவரது பாதுகாவலரையும் காவல்துறையினர் மீட்டனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் போலீஸ், தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படத்தில் போதைப்பொருளை விற்பனையை தூண்டும் விதமாக காட்சிகள்.
    • பட குழுவினருக்கு படத்தில் போதை பொருள் பயன்படுத்தியது குறித்து நோட்டீஸ்.

    தெலுங்கில் சாய் தரம்தேஜ் நடிப்பில் கஞ்சா சங்கர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

    இந்தப் படத்தின் டிரைலர் காட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. படத்தின் டிரைலரைக் கண்ட தெலுங்கானா போதை பொருள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

    கஞ்சா சங்கர் என்ற சர்ச்சைக்குரிய தலைப்புடன் படத்தில் போதைப்பொருளை விற்பனையை தூண்டும் விதமாக பல்வேறு காட்சிகள் அமைப்பப்பட்டு இருந்தது.

    இதுபோன்ற படங்களில் சென்சார் போர்டு அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொண்டு தேவையற்ற காட்சிகளை நீக்க வேண்டும் என போதை பொருள் அமலாக்கப் பிரிவு இயக்குனர் சந்திப் சாண்டில்யா தெரிவித்தார்.

    மேலும், நடிகர் சாய் தரம் தேஜ், பட தயாரிப்பாளர் நாகவம்ஷி, இயக்குனர் சம்பத் நந்தி மற்றும் பட குழுவினருக்கு படத்தில் போதை பொருள் பயன்படுத்தியது குறித்து நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    ×