search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயார் நிலை"

    • மருத்துவமனைகளில் தாழ்வான பகுதிகளை ஆய்வு செய்து அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
    • வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்கு வசதியாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தயாா் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.

    பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தென் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வானிலை மைய முன்னெச்சரிக்கையின்படி பெரு மழை பாதிப்புகளைத் தவிா்க்க அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளும் பேரிடா் மேலாண்மைத் திட்டங்களை தேவையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் தாழ்வான பகுதிகளை ஆய்வு செய்து அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும்.

    மருத்துவமனைகளில் தடையற்ற மின்சேவை இருப்பதை உறுதி செய்தல் அவசியம். குறிப்பாக, தீவிர சிகிச்சை பிரிவுகள், அதி தீவிர சிகிச்சை பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்குகள், குளிா்பதன மருத்துவக் கட்டமைப்புகளில் மின்சார சேவைகள் இடா்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மின் பழுதுகளை சீர மைக்க முடியாத தருணங்களில் அவசர சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளை வேறு மருத்துவ மனைகளுக்கு மாற்றுவதற்கு வசதியாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தயாா் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். அவசர கால மருத்துவ சிகிச்சைகளில் தாமதம் ஏற்படாத வகையில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களை போதிய எண்ணிக்கையில் பணியில் ஈடுபடுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தனியாா் மருத்துவமனை நிா்வாகங்களுக்கு மாவட்ட இணை சுகாதார இயக்குநா்கள் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.

    மழை பாதித்த இடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்கி உள்ளோருக்கு சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவக் குழுக்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    பருவ மழைக் காலத்தில் பரவும் காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை, இன்ப்ளூயன்ஸா தொற்று, மூளைக் காய்ச்சல் பாதிப்பு களைக் கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்தவும், அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் அரசுக்குத் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சேதமடைந்துள்ள நீர் நிலைப்பகுதிகளை சீரமைப்பது குறித்தும் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
    • அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நீர் நிலைகள் அருகில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, சேதமடைந்துள்ள நீர் நிலைப்பகுதிகளை சீரமைப்பது குறித்தும் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப் பணித்துறை, நெடுஞ்சா லைத்துறை, நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சி துறை களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை சீரமைப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய சானல் மற்றும் குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குட்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப் படக்கூடிய இடங்களை ஆய்வு செய்யவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப் படக்கூடிய இடங்களில் இருந்து வெளியேற்றி மக்கள் தங்கும் இடங்களை ஆய்வு மேற்கொள்ளவும், சார் நிலை அலுவலர்களின் அலைபேசி எண்களை சரி பார்த்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை அலுவலர்களு டன் ஆய்வு செய்யவும், நீர்வழி தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றிட ஏற்கனவே நீர் ஆதாரத் துறை அலுவ லர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் கடை பிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் இருப்பில் இருக்கும் நீர் வெளியேற்றும் பம்புகளின் ஆற்றல் 15 குதிரை திறன் அளவுக்கு மேல் இருப்ப தையும் அவற்றின் செயல் பாட்டுத்திறனையும் ஆய்வு செய்திடவும் மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜே.சி.பி., மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றின் போதிய அடிப்படை வசதிகள் உள்ள னவா? என்பதை உறுதி செய்யவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டது.

    அதனடிப்படையில் கிள்ளியூர் வட்டத்திற்குட் பட்ட கலிங்கராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி மற்றும் ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் பேரிடர் காலங்களில் நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பத்திரமாக மீட்டு தங்க வைப்பதற்கான அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.

    மேலும் பணமுகம் வழியாக ஓடும் கால்வாய் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் போது கரையோரப்ப குதிகளில் தண்ணீர் பெருகுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அதனைத்தொடர்ந்து மங்காடு சப்பாத்து பாலத்தின் கீழ் அடைப் பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி சீராக தண்ணீர் செல்ல வழிவகை செய்யுமாறு நெடுஞ் சாலைத்துறை, நீர்வளத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு தாமிரபரணி ஆற்றுத்தண்ணீர் சென்றடையும் பகுதியான வைக்கலூர், பரக்காணி பகுதி கரையோரத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். கிள்ளியூர் தாசில்தார் அனிதாகுமாரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுக்கு அளவிடும் பணி நடந்து வருகிறது.
    • புதிதாக 18 குழிகளில் ஆய்வு செய்ய அளவீடு செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் முடிந்தது. 2-ம் கட்ட அகழாய்வு பணிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை சுத்தம் செய்து அளவீடு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இங்கு ஒரு ஏக்கரில் தோண்டப்பட்ட 16 குழிகளில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு வட்ட சில்லுகள், சங்கு வளையல்கள், சூதுபவளம், தக்களி, பானை, பொம்மைகள், அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன், டெரகோட்டாவால் ஆன குழந்தைகள் விளையாட்டு குவளை, மனித பொம்மை ஆகியவை கிடைத்தது.

    மேலும் திமில் உடைய காளையின் சிற்பம், பெண் சிற்பம், குழந்தைகள் விளையாடும் பொம்மை, வணிக முத்திரை, செப்பு நாணயம், விலங்குகளின் எலும்புகள், கொம்பு, கோடாரி கருவிகள், தங்க அணிகலன் என 3 ஆயிரத்து 254 அரிய பொருட்கள் கிடைத்தன. இரண்டாம் கட்ட அகழாய்வு பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. தேர்வு செய்யப்பட்ட 3 ஏக்கர் இடத்தை தொல்லியல் துறையினர், வருவாய் துறையினருடன் அளவீடு செய்தனர். புதிதாக 18 குழிகளில் ஆய்வு செய்ய அளவீடு செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், 2-ம் கட்ட அகழாய்வு பணிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சுத்தம் செய்து, அளவீடு செய்யும் பணி முடிந்துள்ளது. தொல்லியல் துறை அமைச்சர், ஆணையர் உத்தரவுக்கு பின் இந்த மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கும் என்றார்.


    • டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் கூறி உள்ளார்.
    • வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார்.

    உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனையில் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய உபகரணங்கள் பொது மக்களின் சேவைக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை வழங்க டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மருத்துவமனையில் பாம்பு கடி மற்றும் அவசர கால சிகிச்சைக்கான மருந்துகளின் இருப்பு குறித்தும், விபத்து மற்றும் அவசர கால பிரிவையும் பார்வையிட்டார். வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் பதிவேடு, கர்ப்பிணி பெண்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடந்தது
    • கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உருவாகி உள்ள கொரோனா பி.எப்.7 வைரஸ் பரவல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் போன்ற வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடந்தது. டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் கொரோனா வார்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. நோயாளிகள் வந்தால் சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் இதில் பங்கேற்றனர்.

    ×