search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழுவினர்"

    • ஆற்றின் கரையோர பகுதிகளில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
    • ரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குழித்துறை, கோதையாறு பகுதிகளில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஆற்றின் கரையோர பகுதிகளில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. தொடர் மழையால் மேற்கு மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் சானல்களில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. குடியிருப்புகளையும் வெள் ளம் சூழ்ந்துள்ளது. மழை பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து பொது மக்களை பாதுகாத்து கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. இதையடுத்து சென்னையில் இருந்து போலீஸ் துறையை சேர்ந்த பேரிடர் மீட்பு குழுவினர் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தனர்.

    நாகர்கோவிலுக்கு வந்த பேரிடர் மீட்பு குழுவினர் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மீட்பு குழுவினரை குமரி மாவட்டத்தில் ஏதாவது பேரிடர் ஏற்பட்டால் முன்னேற்பாடு பணிகளில் அவர்களை ஈடுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    • அறுவை சிகிச்சை அரங்கத்தை உடனே சீரமைக்க உத்தரவு
    • பஸ் நிலையத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கையை எடுக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழு அதன் தலைவரும், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவருமான வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று இரவு கார் மூலம் கன்னியாகுமரி வந்தனர். இந்த குழுவில் அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ. அருள், நாமக்கல் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமலிங்கம், ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர்கள் கருணாநிதி, துணை செயலாளர் ரவி, பிரிவு அலுவலர் பியூலா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவினர் நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினர். இன்று காலையில் இந்த குழுவினர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் இந்த எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் கன்னியாகுமரியில் உள்ள வட்டார தலைமை மருத்துவமனைக்கு சென்று "திடீர்" ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பெண்கள் பிரசவ வார்டு, பெண் உள்நோயாளிகள் பிரிவு, ஆப்ரேஷன் தியேட்டர் உள்பட அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தனர். அங்கு தற்போது பரவி வரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாரும் உள்ளனரா? என்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். உள்நோயாளிகள் வார்டில் உள்ள ஜன்னல்களில் கொசு வலைகளை உடனடியாக பொருத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன் பிறகு இந்த குழுவினர் கன்னியாகுமரியில் பாழடைந்து கிடக்கும் புதிய பஸ் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த குழுவினர் அந்த பஸ்நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர் தேங்காய்பட்டணத்தில் ரூ.253 கோடி செலவில் நடைபெற்று வரும் துறைமுக விரிவாக்க பணிகளை இந்த குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கட்டிட பிரிவு செயற்பொறியாளர் வெள்ளைச்சாமி ராஜா, உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் மாரிதுரை, மருத்துவத்துறை இயக்குனர் பிரகலாதன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அதிகாரிகள் கலந்துகொண்டனர். சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி ஆஸ்பத்திரியில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லை. இங்கு வருகிற நோயாளிகளை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டை பொதுமக்கள் அளிப்பதன் அடிப்படையில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது. அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடத்தின் மோசமான தன்மையின் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் தான் பிரசவ அறுவை சிகிச்சை மற்றும் வேறு அறுவை சிகிச்சைகள் இங்கு நடைபெறவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கத்தை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு வருபவர்களை மட்டும் மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 5 டாக்டர்கள், 10 செவிலியர்கள் உள்ளனர். சில பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறியுள்ளார்கள். அந்த காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.20 லட்சம் செலவில் ஆஸ்பத்திரி சீரமைக்கப்படுகிறது. இந்த பணியை 2 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஜன்னல்களில் கொசுவலைகளை பொருத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மிக முக்கியமான பகுதி கன்னியாகுமரி ஆகும். இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீனவர்கள் அவசர தேவைக்கு வருகின்றபோது மருத்துவர்கள் பணியில் இருந்து பணியாற்ற வேண்டும். வட்டார தலைமை மருத்துவமனை யில் 24 மணி நேரமும் ஒரு மருத்துவர் இருப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். கன்னியாகுமரி பஸ் நிலையம் மிக மோசமான நிலையில் உள்ளதாக புகார் வந்துள்ளது. பஸ் நிலையயத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ரூ.10 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கையை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக வங்கி குழு நிர்வாகி தினேஷ் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் குழுவினர் இன்று வந்தனர்.
    • நிதிகள் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு உலக வங்கி குழு நிர்வாகி தினேஷ் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் குழுவினர் இன்று வந்தனர்.

    அவர்கள் அரசு ஆஸ்பத்தியில் செயல்படுத்தப்படும் எமர்ெஜன்சி திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகள் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள திட்டஙகள் குறித்தும், அந்த திட்டங்கள் தற்போது எந்த நிலையில் உள்ளது, அதற்காக பெறப்பட்டுள்ள நிதிகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விரிவாக கேட்டறிந்தனர்.

    அப்போது மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்யமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர். 

    • நிகழ்ச்சியில் அன்பு கோர் அண்ணாச்சி நூல் ஆசிரியர் வீரையன், பதிப்பாளர் குருமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது.
    • அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் உட்பட பிரமுகர்களும் பள்ளி ஆசிரியர்களும்,மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் குருகுலம் அறக்கட்டளை நிறுவனர் மறைந்த அப்பாக்குட்டி பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பள்ளியின் பி.டி.ஏ தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் புகழேந்தி, வர்த்தக சங்க மாநிலத்துணை தலைவர் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ் துறை தலைவர் டாக்டர் சேதுபதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் தருமையாதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த சுவாமிகள், முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன், நாகை எம்பி செல்வராஜ், முன்னாள் எம்பி பிவி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கிரிதரன்,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், நாகை மாவட்ட வர்த்தக சங்க தலைவர் வேதநாயகம், இலக்கிய பெருமன்ற நாகை மாவட்ட தலைவர் புயல் குமார், செங்கல்பட்டு தொழில் உரிமையாளர்தியாகராஜன், வக்கீல்கள் பாலச்சந்தி ரன்,நமசிவாயம், ஓய்வு பெற்ற பிடிஓ ராஜரத்தினம், அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் உட்பட பிரமுகர்களும் பள்ளி ஆசிரியர்களும்,மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அன்பு கோர் அண்ணாச்சி நூல் ஆசிரியர் வீரையன், பதிப்பாளர் குருமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது. கோயமுத்தூர் தியாகு குழுவினரின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், வேதாரண்யம் கோயில் ஆதின வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி் நடந்தது.

    குருகுலம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கயிலை மணி வேதரத்னம் வரவேற்றார். அலுவலர் ஸ்ரீதர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை குருகுலம் கல்வியியல் கல்லூரி நிர்வாகி கேடிலியப்பன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    • கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டால் தப்பிப்பது எப்படி? என ஏற்காட்டில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழவினர் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
    • கட்டிடங்களில் சிக்கி கொண்டவர்களை கட்டிட சுவற்றில் உடைப்பு ஏற்படுத்தி உள்ளே சென்று எப்படி மீட்பது என்றும் விளக்கினர்.

    ஏற்காடு:

    தேசிய பேரிடர் மீட்பு படையினர் சேலம் மாவட்டத்தில் சுற்று பயணம் செய்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மழை மற்றும் புயல் நேரங்களில் பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சென்ற அவர்கள் அங்கு உள்ள அரசு பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

    தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது கட்டிடங்கள் சேதமடைந்தாலோ அதில் இருந்து தப்பிப்பது எப்படி ? என செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இது தவிர கட்டிடங்களில் சிக்கி கொண்டவர்களை கட்டிட சுவற்றில் உடைப்பு ஏற்படுத்தி உள்ளே சென்று எப்படி மீட்பது என்றும் விளக்கினர். கட்டிடங்களின் மேல் பகுதியில் இருந்து கம்பி மூலம் பொதுமக்களை காப்பாற்றுவது எப்படி என்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இவர்களுடன் ஏற்காடு வருவாய் பேரிடர் மீட்பு குழுவினர் ஏற்காடு வட்டாச்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன், வெங்கடேசன், வனத்துறையினர், சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார், 108ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அர்ஜூன், மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர உறுதி சான்று குழுவினர் 3-ம் கட்ட ஆய்வு செய்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர உறுதி சான்று குழுவினர்
    3-ம் கட்ட ஆய்வு செய்தனர்.பின்னர் அங்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இது குறித்து தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:-

    நாமக்கல் சுகாதார இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில், மண்டல அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட தேசிய தர உறுதி சான்று குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி முதற்கட்ட ஆய்வு செய்தனர். தொடர்ந்து தேசிய தரச்சான்று மண்டல அலுவலர் டாக்டர் அசோக் தலைமையிலான குழுவினர் 2-ம் கட்ட ஆய்வு செய்ததுடன், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை பணியாளர்களுக்கு பயிற்சியும் வழங்கினர்.

    நேற்று நடைபெற்ற 3-ம் கட்ட ஆய்வில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மேற்பார்வையாளர் டாக்டர் வெங்கடேசன், தர்மபுரி சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேஷ்கண்ணா, அரூர் அரசு ஆஸ்பத்திரி தரக்கட்டுபாடு ஒருங்கிணைப்பாளர் வாசுகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் எத்தனை பேர் உள்ளனர்? சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது? மொத்தம் இருக்கும் படுக்கை வசதி எத்தனை? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

    ×