search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா"

    • டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடந்தது
    • கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உருவாகி உள்ள கொரோனா பி.எப்.7 வைரஸ் பரவல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் போன்ற வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடந்தது. டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் கொரோனா வார்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. நோயாளிகள் வந்தால் சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் இதில் பங்கேற்றனர்.

    • வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்காணிப்பு
    • பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.

    நாகர்கோவில்:

    சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் பி.எப். 7 வகை வைரஸ் மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    இதையடுத்து இந்தியா வில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலை யில் இருக்க வேண்டும் என்றும் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைத்தி ருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொேரானா அறிகுறி யுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் வீட்டுத் தனிமை யில் உள்ளனர். இவர்களை சுகாதாரத் துறை அதிகாரி கள் கண்காணித்து வருகிறார்கள்.

    வெளிநாட்டிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வருப வர்களை கண்காணிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.கன்னியாகுமரி ஆசாரிப்பள் ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இவற்றில் 20 படுக்கை வசதிகள் அதிதீவிர சிகிச்சை வசதிகளை கொண்ட படுக்கைகளாகும். 40 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 40 படுக்கை கள் சாதாரண படுக்கைகள் ஆகும். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டை மருத்துவக் கல்லூரி கண்காணிப் பாளர் அருள் பிரகாஷ் தலைமை யிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் டாக்டர்கள் கூறுகையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான அளவு ஆக்சிஜன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் நிரப்பகம் உள்ளது. 3000 லிட்டர் கொண்ட ஆக்ஸிஜன் நிரப்பகமும் செயல்பாட்டில் உள்ளது. இது தவிர ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் மற்றும் 550 லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் உற்பத்தி மையமும் உள்ளது. இது தவிர 296 சிலிண்டர்களும் உள்ளன.

    ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

    பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். காய்ச்சல் இருமல், சளி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

    • மாவட்ட எல்லை பகுதிகளில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்பொழுது 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    இதனால் குமரி மாவட்ட எல்லை பகுதி களில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளிலும் அதிகாரிகள் கொரோனா சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நேற்று மாவட்டம் முழுவதும் 1158 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 92 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர் ஆண்கள், 56 பேர் பெண்கள் ஆவார்கள்.

    நெல்லையில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரத்தில் 5 பேரும், கிள்ளியூரில் 8 பேரும், நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், தோவாளையில் தலா 7 பேரும் தக்கலையில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேற்கு மாவட்ட பகுதகளில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக மேல்புறம், முஞ்சிறை, குருந்தன்கோடு, திருவட்டார் ஒன்றியங்களில் பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

    மேல்புறம், குருந்தன்கோட்டில் தலா 12 பேரும், முஞ்சிறையில் 15 பேரும், திருவட்டா ரில் 10 பேரும், பாதிக்க ப்பட்டு ள்ளனர். கொரோனா தினசரி பாதிப்பு 100-ஐ நெருங்கி வருகிறது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் 775 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதாவது கடந்த ஆறு மாதத்தில் 20,189 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்பொழுது 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    கொேரானா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    சனிக்கிழமையான நாளை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

    முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகும் 2-வது தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் ஏராளமானோர் உள்ளனர்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொரோனா பரவல் இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரி கள் வேண்டுகோள் விடுத்து ள்ளனர்.

    • புதிதாக 40 பேர் கொரோனாவால் பாதிப்பு
    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தயார்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக திருவட்டார், முஞ்சிறை ஒன்றியங்களில் ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் அந்த பகுதிகளில் கொரோனா சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் 766 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் ஆவார் கள். அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாவில் தலா ஒருவருக்கும், குருந்தன் கோடு ஒன்றியத்தில் 8 பேரும், மேல்புறத்தில் 6 பேரும், முஞ்சிறையில் 9 பேரும், திருவட்டாரில் 2 பேரும், தக்கலையில் 3 பேரும் கொரோனாவானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் மாநகர பகுதியிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருப்பினும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.

    • கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கபசுர குடிநீர்
    • மேயர் தொடங்கிவைத்தார்.

    கரூர்:

    கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் பணி தொடங்கியது.

    மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் நடைபெற்ற இப்பணிகளை மேயர் கவிதாசரவணன் தொடங்கிவைத்தார். ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ெ பாதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கொரோனா தொற்றில் இருந்து நம்மை நாமே பாதுாகாத்துக்கொள்வது எப்படி என விளக்கமளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாமன்ற தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    சேலத்தில் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    சேலம்:

    சேலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

    தினமும் 2 முதல் 3 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று புதியதாக 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    மாநகராட்சி பகுதிகளில் 3 பேர், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் 2 பேர், வீரபாண்டி வட்டாரத்தில் ஒருவர் என 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×