search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல்"

    • இரு அணியிலும் அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கணிக்க முடியாத அணியாக திகழும் ஐதராபாத் அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. இந்த சீசனில் முதலில் பேட்டிங் செய்து 3 முறை 250 ரன்களுக்கு மேல் குவித்து வரலாறு படைத்துள்ள அந்த அணி, 2-வது பேட்டிங்கில் ஒருமுறை கூட 200 ரன்னுக்கு மேலான இலக்கை எட்டிப்பிடிக்கவில்லை. கடைசி 2 ஆட்டங்களில் இலக்கை விரட்டுகையில் பெங்களூரு, சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. எனவே அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (338 ரன்), அபிஷேக் ஷர்மா (303), ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அதிரடியில் பிரமாதப்படுத்துகிறார்கள். அதேநேரத்தில் அவர்களின் ஆட்டம் பொய்த்தால் அந்த அணியின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறுகிறது. ஆல்-ரவுண்டர் எய்டன் மார்க்ரம், அப்துல் சமத் பேட்டில் இருந்து இன்னும் போதிய ரன்கள் வரவில்லை. இவர்களும் பார்முக்கு திரும்பினால், ஐதராபாத்தின் பேட்டிங் மேலும் வலுவடையும். பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர்குமார் நல்ல நிலையில் உள்ளனர்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, ஒரு தோல்வி (குஜராத் அணிக்கு எதிராக) என்று 16 புள்ளி பெற்று முதலிடத்தில் கம்பீரமாக வீறுநடைபோடுகிறது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன் (385 ரன்), ரியான் பராக் (332), ஜோஸ் பட்லர் (319), ஜெய்ஸ்வால் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா ஆகியோர் கலக்குகிறார்கள். அஸ்வினின் பந்துவீச்சு எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை.

    மொத்தத்தில், வெற்றிப்பாதைக்கு திரும்பி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க ஐதராபாத் அணியும், முதல்அணியாக அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க ராஜஸ்தான் அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரு அணியிலும் அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 9-ல் வெற்றியை தனதாக்கி இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மார்க்ரம், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத் அல்லது ஷபாஸ் அகமது, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, அன்மோல்பிரீத் சிங்.

    ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ரோமன் பவெல், ஹெட்மயர், அஸ்வின், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான் அல்லது சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    • பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 46 ரன்களை அடித்தார்.
    • ஷர்துல் தாக்கூர், கிளீசன், ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடிய பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 46 ரன்களை அடித்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரோசோ 23 பந்துகளில் 43 ரன்களை அடித்து அவுட் ஆனார்.

    பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சார்பில் ஷர்துல் தாக்கூர், கிளீசன் மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆனார்.
    • எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலி 15 ரன்களில் ஆட்டமிழக்க எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.

    இன்றைய போட்டியில் 11 பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி 14 ரன்களை குவித்தார். இதில் ஒரு புண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி இரண்டு ரன்களை ஓட முயற்சித்த போது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

    இதன் காரணமாக சென்னை அணி போட்டி முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களை குவித்தார்.
    • பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 10-ஆவது போட்டியில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இன்றைய போட்டியில் டாஸ் தோற்றதன் மூலம் சென்னை அணி பத்து போட்டிகளில் ஒரே போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது. தொடர்ச்சியாக டாஸ்-இல் தோல்வியை தழுவி வருவது தொடர்பாக சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "எனது டாஸ் சாதனையை பார்த்து எங்களின் அணி வீரர்களில் பெரும்பாலானோர், நான் டாஸ் இழப்பேன் என்று தெரிந்து முதலில் பேட்டிங் ஆட தயாராகி விட்டனர்," என்று தெரிவித்தார். 

    • சென்னை அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதுவரை விளையாடிய ஒன்பது போட்டிகளில் சென்னை அணி ஒரே முறை தான் டாஸ் வென்றிருக்கிறது. டாஸ்-இல் வெற்றி பெறுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்து இருந்தார்.

    டாஸ் வெற்றி பெற பயிற்சி எடுத்தும், சென்னை அணி இன்றைய போட்டியிலும் டாஸ்-இல் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக சென்னை அணி டாஸ்-இல் தோல்வியை தழுவி வருகிறது.

    5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

    5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது.

    சென்னையில் நடைபெறும் 6-வது லீக் ஆட்டம் இதுவாகும். இங்கு சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி (லக்னோவுக்கு எதிராக) கண்டுள்ளது.

    இந்நிலையில் டாஸில் வெற்றி பெற பயிற்சி செய்து வருவதாக எஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

    டாஸ் குறித்து பேசிய அவர், "டாஸை உன்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அதை நீ வென்றாக வேண்டும். எனவே, அதற்கு பயிற்சி எடு என டோனி பாய் கூறினார். அப்போதில் இருந்து டாஸ் போடுவதை தொடர்ச்சியாக டக் அவுட்டில் பயிற்சி செய்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதுவரை 9 போட்டிகளில் வழிநடத்தியிருக்கும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அதில் 8 முறை டாஸில் தோற்றுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் மட்டும் தான் அவர் டாஸ் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
    • பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், பேர்ஸ்டோ, அஷூதோஷ் ஷர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

    5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி, அடுத்த 2 ஆட்டங்களில் தோல்வி என்று மாறி, மாறி வெற்றி, தோல்வியை சந்தித்து வரும் சென்னை அணி சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அதட்டியது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 212 ரன்கள் குவித்ததுடன் எதிரணியை 134 ரன்னில் சுருட்டி அசத்தியது. அந்த உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் சென்னை அணி களம் இறங்குகிறது. சென்னையில் நடைபெறும் 6-வது லீக் ஆட்டம் இதுவாகும். இங்கு சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி (லக்னோவுக்கு எதிராக) கண்டுள்ளது.

    சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 447 ரன்), ஷிவம் துபே (350), டேரில் மிட்செல் ஆகியோர் நன்றாக செயல்படுகிறார்கள். தொடர்ந்து சொதப்பி வரும் அனுபவம் வாய்ந்த ரஹானே சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா, துஷர் தேஷ்பாண்டே, தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது. எஞ்சிய 5 ஆட்டங்களும் அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். ஒன்றில் தோற்றாலும் அந்த அணியின் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு பொய்த்து போகும். எனவே அந்த அணி வாழ்வா-சாவா? நெருக்கடிக்கு மத்தியில் அடியெடுத்து வைக்கும்.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், பேர்ஸ்டோ, அஷூதோஷ் ஷர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா மட்டும் தொடர்ந்து தடுமாறுகிறார். பந்து வீச்சில் ரபடா, ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன் மிரட்டக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோர் ஜொலித்தால் பந்து வீச்சு மேலும் வலுப்பெறும். தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இந்த ஆட்டத்துக்கு திரும்புவாரா? என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் லாங்வெல்ட் தெரிவித்தார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று தெரிகிறது.

    கடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை புரட்டியெடுத்தது. அந்த ஆட்டத்தில் 262 ரன் இலக்கை எட்டிப்பிடித்து 20 ஓவர் போட்டியில் புதிய வரலாறு படைத்தது பஞ்சாப்பின் நம்பிக்கையை நிச்சயம் அதிகரித்து இருக்கும். தனது உத்வேகத்தை தொடர பஞ்சாப் அணியும், உள்ளூரில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சென்னை அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 15 ஆட்டத்தில் சென்னையும், 13 ஆட்டத்தில் பஞ்சாப்பும் வெற்றி கண்டுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி, தீபக் சாஹர், துஷர் தேஷ்பாண்டே, முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா.

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங்க் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, ராகுல் சாஹர்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    • மார்கஸ் ஸ்டாயினிஸ் 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
    • கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா முறையே 10 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய நேஹல் வதீரா நிதானமாக ஆடி 46 ரன்களை சேர்த்தார். துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 32 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்தது.

    எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு அர்ஷின் குல்கர்னி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் கே.எல். ராகுல் 22 பந்துகளில் 28 ரன்களை குவித்து ஆட்மிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாயினிஸ் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை குவித்து, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், துஷாரா, கோட்சி, முகமது நபி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இஷான் கிஷன் 32 ரன்களை குவித்தார்.
    • மொசின் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதனால் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா முறையே 10 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய நேஹல் வதீரா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 32 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்தது.

    லக்னோ சார்பில் மொசின் கான் இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • லக்னோ அணி நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
    • மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    லக்னோ அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி, நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி, ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    அந்த வகையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் லக்னோ அணி களமிறங்குகிறது. 

    • கேள்விகளுக்கு வரும் நாட்களில் முடிவு தெளிவாகி விடும்.
    • உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியை அறிவித்து வருகின்றன.

    இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. லீக் சுற்று போட்டிகளை தொடர்ந்து எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போகின்றன என்ற கேள்விகளுக்கு வரும் நாட்களில் முடிவு தெளிவாகி விடும்.

    இந்த நிலையில், ஐ.பி.எல். பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் யாரும் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. வருகிற ஜூன் மாதம் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதை ஒட்டி ஒவ்வொரு அணியும் உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியை அறிவித்து வருகின்றன.

    இதையொட்டியே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய அறிவிப்பு காரணமாக ஐ.பி.எல். அணிகள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    ×