search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL play off"

    • கேள்விகளுக்கு வரும் நாட்களில் முடிவு தெளிவாகி விடும்.
    • உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியை அறிவித்து வருகின்றன.

    இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. லீக் சுற்று போட்டிகளை தொடர்ந்து எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போகின்றன என்ற கேள்விகளுக்கு வரும் நாட்களில் முடிவு தெளிவாகி விடும்.

    இந்த நிலையில், ஐ.பி.எல். பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் யாரும் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. வருகிற ஜூன் மாதம் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதை ஒட்டி ஒவ்வொரு அணியும் உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியை அறிவித்து வருகின்றன.

    இதையொட்டியே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய அறிவிப்பு காரணமாக ஐ.பி.எல். அணிகள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    • சென்னையில் சேப்பாக்கத்தில் வரும் மே 23-ம் தேதி முதல் தகுதிச் சுற்றுப் போட்டியும், மே 24-ம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெறுகிறது.
    • அகமதாபாத்தில் மே 26 அன்று 2-வது தகுதிச் சுற்று போட்டியும், மே 28 அன்று இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.

    16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, பிளேஆப் மற்றும் இறுதிப்போட்டி மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    சென்னையில் சேப்பாக்கத்தில் வரும் மே 23-ம் தேதி முதல் தகுதிச் சுற்றுப் போட்டியும், மே 24-ம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெறுகிறது. அகமதாபாத்தில் மே 26 அன்று 2-வது தகுதிச் சுற்று போட்டியும், மே 28 அன்று இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள பிளே ஆப் சுற்று போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. நண்பகல் 12 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ×