search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுத்து தேர்வு"

    • ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது
    • வரும் 13-ந் தேதி நடக்கிறது

    கரூர்:

    இந்திய ராணுவத்துக்கு அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்து தேர்வு, வரும் 13-ந் தேதி திருச்சியில் நடக்கிறது. இதுகுறித்து திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர் உள்பட 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் என, 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்வதற்கான எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் தொழில்நுட்பம், எழுத்தர், ஸ்டோர் கீப்பர், பொதுப்பணி, டிரேட்ஸ்மென் ஆகிய பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும், 13ல் திருச்சி தேசிய கல்லுாரி வளாகத்தில் எழுத்து தேர்வு நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நில அளவையர், வரைவாளர் பணிக்கான எழுத்து தேர்வு மதுரையில் இன்று நடந்தது.
    • இதற்காக 47,623 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    மதுரை

    தமிழகத்தில் 789 நில அளவையர், 236 வரைவாளர் உள்பட 1089 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்காக 47,623 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு இன்று மாநிலம் முழுவதும் எழுத்து தேர்வு நடந்தது.

    மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரி, நரிமேடு நாய்ஸ் மெட்ரிகு லேஷன் மேல்நிலைப்பள்ளி, நாராயணபுரம் எஸ்.இ.வி மேல்நிலைப்பள்ளி, விஸ்வநாத புரம் பாலமந்திரம் மேல்நிலைப்பள்ளி, சின்ன சொக்கிகுளம் லேடி டோக் கல்லூரி, கோரிப்பாளையம் மீனாட்சி அரசினர் கல்லூரி, திருப்பாலை யாதவா பெண்கள் மற்றும் ஆண்கள் கல்லூரி, புதூர் சி.எஸ்.ஐ. கல்லூரி, நோபிலி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, அல் அமீன் மேல்நிலைப்பள்ளி, கே.கே. நகர் அருள்மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் இன்று எழுத்து தேர்வு நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொழில்நுட்பம் சாராத 'மல்டி டாஸ்கிங்' பணிகளுக்கான ஸ்டாப் செலக்சன் கமிஷன் 2-ம் நிலை தேர்வு நடந்தது. இதில் 465 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    • வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் எழுதினர்
    • தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு

    வேலூர்:

    ஐகோர்ட்டு ஆணைக்கினங்க மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள முதுநிலை மற்றும் இளநிலை கட்டளை பணியாளர், நகல் எடுப்பவர், நகல் வாசிப்பாளர், நகல் பரிசோதகர் ஆகிய பணியிடங்களுக்கு இன்று எழுத்து தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரம்பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    இன்று காலை தேர்வு எழுத விண்ணப்பி த்திருந்தவர்கள் பலத்த பரிசோதனைக்கு பின்னர் 9-30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெறுவதை யொட்டி தேர்வு மையங்களுக்கு முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • கடலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு ஐ.ஜி ராதிகா நேரில் ஆய்வு செய்தார்.
    • கடலூர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதினர்

    கடலூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 444 பணியிடங்களுக்கான நேரடி சப்-இன்ஸ்பெக்டர் ( தாலுக்கா மற்றும் ஆயுதப்படை ) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று (25- ந்தேதி) தொடங்கியது. இந்த தேர்வு நாளையும் (26 -ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதினர் . முன்னதாக காலையில் தேர்வு எழுதுவதற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். பின்னர் கடும் சோதனைக்கு பிறகு தேர்வு எழுதும் மையத்திற்கு போலீசார் அனுமதித்தனர். இன்று காலை பொது எழுத்துத் தேர்வு காலை 10 மணி தொடங்கியதை யொட்டி போலீஸ் ஐ.ஜி ராதிகா தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தேர்வு மையங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-  கடலூர் மாவட்டத்தில் நேரடி சார்பு ஆய்வாளர் பதவிக்கு தேர்வு எழுதும் 20 பேருக்கு ஒரு போலீசாரும், 5 போலீசாருக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டருக்கு ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் தேர்வு எழுதும் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இத் தேர்வுக்காக 800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இன்று மதியம் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மதியம் 03.30 மணிமுதல் 05.10 மணிவரை நடைபெற உள்ளது . மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் மதியம் 2 மணிக்குள் இருக்க வேண்டும் . 26.06.2022 ஆம் தேதி கடலூர் , மையத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள துறைரீதியான தேர்வில் 213 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் . 

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
    • வெளி மாவட்டத்திற்கு சென்ற போலீசார்

    நாகர்கோவில்:

    தமிழக காவல் துறையில் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது.

    குமரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத 5 ஆயிரத்து 888 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, ஆரல்வாய் மொழி ஜெயமாதா பொறியியல் கல்லூரி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரி ஆகிய 6 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது.

    நாகர்கோவில்  பொன் ஜெஸ்லி கல்லூரியில் பெண்களுக்காக தனித் தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தேர்வு மையத்திற்கு வந்த பெண்களை அவர்களது பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். கல்லூரி வாசலில் அவர்களை விட்டு விட்டு வெளியே காத்திருந்தனர். பெண்கள் கொண்டு வந்திருந்த கைப்பைகளையும் வெளியே வைத்து விட்டு தேர்வு எழுத உள்ளே சென்றனர்.

    மற்ற தேர்வு மையங்களிலும் காலையிலேயே தேர்வு எழுதுபவர்கள் வந்திருந்தனர். தேர்வு எழுத வந்தவர்கள் பலத்த பரிசோதனைக்குப் பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விண்ணப்பதாரர்கள் தேர்வு கூட சீட்டினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருந்தனர்.

    அதை பரிசோதனை செய்தபிறகே தேர்வு எழுதுபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் செல்போன்கள், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து மதியத்திற்கு பிறகு தேர்வு நடைபெறுகிறது. இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் பெரும்பாலானவர் அந்தந்த தேர்வு மையங்களிலேயே காத்திருந்தனர். தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் நடந்த எழுத்து தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பி ரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொண்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்வு எழுதுபவர் களுக்கு செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்.

    குமரி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் பலரும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு குமரி மாவட்டத்திற்குள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. பெரும்பாலான போலீசாருக்கு ராமநாதபுரம் மாவட்டம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த போலீசார் அனைவரும் நேற்று இங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு சென்றனர். அவர்கள் அங்குள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள்.

    • ஈரோடு மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்துத்தேர்வுக்காக 3610 ஆண்கள், 815 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 428பேர் விண்ணப்பித்திருந்தனர்.
    • ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் கல்லூரி, கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் நந்தா என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் எழுத்துத் தேர்வு நடந்தது. வேளாளர் கல்லூரியில் நடந்த எழுத்துத்தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் காவல்து றையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்துத்தேர்வுக்காக 3610 ஆண்கள், 815 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 428பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    இதுபோக காவல்துறையில் பணி புரியும் 447 ஆண் போலீசார், 108 பெண் போலீசார் என 607 பேரும் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று காலை நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் கல்லூரி, கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் நந்தா என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் எழுத்துத் தேர்வு நடந்தது. வேளாளர் கல்லூரியில் நடந்த எழுத்துத்தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் வந்திருந்தார்.

    இன்று காலை 4228 பேருக்கு பொதுத்தேர்வு நடந்தது. இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களில் காலை 8 மணி முதலே தேர்வர்கள் வர தொடங்கினர். தேர்வு மையத்திற்குள் செல்போன் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதை மீறி ஒரு சிலர் செல்போன் கொண்டு வந்திருந்தனர். அதை பாதுகாப்பு பணியில் ஈடுப ட்டிருந்த போலீசார் வாங்கி வைத்துக்கொண்டனர். தேர்வு முடிந்ததும் செல்போன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தேர்வு எழுதுவோர் ஹால் டிக்கெட், ஆதார் கார்டு நகல் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. பலத்த சோதனைக்கு பிறகே தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வேளாளர் கல்லூரியில் பெண்கள் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு நிறைவடைந்தது.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வுக்காக 16 இன்ஸ்பெக்டர்கள், 70 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு ஹாலில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 300 தேர்வர்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் என்ற அடிப்படையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். நாளை காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் இன்று மதியம் பொதுத்தமிழ் தேர்வு தொடங்கியது. இதில் 4,428 பேர், காவல் துறையில் பணியாற்றும் 607 போலீசாரும் பொதுத்தமிழ் தேர்வை எழுதினர். இதைத்தொடர்ந்து நாளை காலை காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

    • தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் இடம் பெறுவார்கள். இதற்கான எழுத்து தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்றது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் புனிதவளனார் பள்ளி, எஸ்.எஸ்.எம். கல்லூரி, பி.எஸ்.என்.ஏ. கல்லூரி, சக்தி கல்லூரி, ஹோலிகிராஸ் உள்ளிட்ட 8 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை திண்டுக்கல் மாவட்டத்தில் 7246 பேர் எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரையும், மாலை 3 மணிக்கு தொடங்கிய தேர்வு 5.10 மணி வரை என இரு பிரிவாக தேர்வு நடைபெற்றது.

    காவல்துறையில் வேலை செய்பவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு உள்ளது. இவர்களுக்கு நாளை தேர்வு நடைபெற உள்ளது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த 888 போலீசார் எழுத உள்ளனர். இதுதவிர தமிழுக்கான தகுதி தேர்வும் தனியாக நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஏ.டி.ஜி.பி. வனிதா, சூப்பிரண்டு சினேகாபிரியா, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் 8 டி.எஸ்.பி.க்கள் உள்பட 500 போலீசார் தேர்வு மைய கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தேர்வு வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராவால் பதிவு செய்யப்பட்டது. தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு நடைபெற்றது.

    • கடலூர் மாவட்டத்தில் 2 நாள் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடக்கிறது.
    • தேர்வு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 444 பணியிடங்களுக்கான நேரடி சார்பு ஆய்வாளர் ( தாலுக்கா மற்றும் ஆயுதப்படை ) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை (25 -ந்தேதி) மற்றும் 26- ந்தேதி 2 நாட்கள் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் 9278 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் . நாளை 25- ந் தேதி காலை பொது எழுத்துத் தேர்வு காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடைபெற உள்ளது . மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் காலை 08.30 மணிக்குள் இருக்க வேண்டும். 25.06.2022 ஆம் தேதி மதியம் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மதியம் 03.30 மணிமுதல் 05.10 மணிவரை நடைபெற உள்ளது .

    மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் மதியம் 02.00 மணிக்குள் இருக்க வேண்டும் . 26.06.2022 ஆம் தேதி கடலூர் , மையத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள துறைரீதியான தேர்வில் 213 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் காலை 08.30 மணிக்குள் இருக்க வேண்டும் . இந்த நிலையில் தேர்வு எழுதும் மையங்களில் வரிசை எண் எழுதும் பணி, தேர்வு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள், மேஜைகள் வரிசைப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் நாளை சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு 7943 பேர் எழுதுகிறார்கள்.
    • சிறப்பான முறையிலும் நடத்திட வேண்டுமென தமிழக காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்

    விழுப்புரம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நாளையும் நாளை (25-ந் தேதி) காலை 10 மணி முதல் 12 மணி வரை பொது அறிவிற்கான தேர்வும், மதியம் 3 மணி முதல் 5.30 மணிவரை தமிழ் மொழிக்கான தகுதி தேர்வும் நடைபெறவுள்ளது.

    அதனை தொடர்ந்து 26-ந் தேதி துறை ரீதியான காவலர்களுக்கு பொது எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுகளை சிறப்பான முறையிலும் நடத்திட வேண்டுமென தமிழக காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த தேர்வு தமிழகத்தில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வு பணிகளில் குறித்து கடந்த ஒரு வாரமாக சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் நாளை நடைபெறவுள்ள தேர்வு மையங்களை சரக டிஐஜி பாண்டியன், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா தேர்வு மையங்களான ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து போலிஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் 7943பேரும் துறை சார்ந்தவர்கள் 276 பேரும் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வுக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். நாளை தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். நுழைவு சீட்டினை கொண்டு வரவேண்டும் மேலும் பால் பாயிண்ட் பெண், தேர்வு அட்டை எடுத்து வரவேண்டும். கைப்பையோ, துண்டு சீட்டோ, செல்போனோ எலக்ரானிக் சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் கண்டிப்பாக கொண்டு வரக்கூடாது மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • தேனி மாவட்டத்தில் நாளை (25-ந் தேதி) நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்து தேர்வுக்கு நடைபெறுகிறது.
    • தேர்வு பணியில் ஈடுபட உள்ள இன்ஸ்பெக்டர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் நாளை (25-ந் தேதி) நடைபெற உள்ள நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்து தேர்வுக்கு முன்னேற்பாடுகள் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஏ.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எழுத்து தேர்வு பணியில் ஈடுபட உள்ள இன்ஸ்பெக்டர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு நுழைவுச்சீட்டு மற்றும் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் காலை 8.30 மணிக்கு வர வேண்டும். தேர்வு 10 மணிக்கு தொடங்கி நடைபெறும். அதன் பிறகு வரும் தேர்வாளர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட–மாட்டார்கள்.

    தேர்வுக்குரிய ஹால்டிக்கெட், அடையாள அட்டை, நீலம் அல்லது கருப்பு நிற பந்து முைன பேனாவைத் தவிர வேறு பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவை மையத்தின் நுழைவு வாயிலிலேயே அகற்றப்படும்.

    குறிப்பிட்ட நேரத்துக்குள் அவரவருக்கான தேர்வு மையத்தில் ஆஜராகி தேர்வு மைய கட்டிடம் மற்றும் இருக்கைகளை கவனமாக கண்டறிந்து குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×