search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்து தேர்வு
    X

    ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்து தேர்வு

    • ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது
    • வரும் 13-ந் தேதி நடக்கிறது

    கரூர்:

    இந்திய ராணுவத்துக்கு அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்து தேர்வு, வரும் 13-ந் தேதி திருச்சியில் நடக்கிறது. இதுகுறித்து திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர் உள்பட 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் என, 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்வதற்கான எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் தொழில்நுட்பம், எழுத்தர், ஸ்டோர் கீப்பர், பொதுப்பணி, டிரேட்ஸ்மென் ஆகிய பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும், 13ல் திருச்சி தேசிய கல்லுாரி வளாகத்தில் எழுத்து தேர்வு நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×