search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி"

    • அனைத்து கடைகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த போலீசார் வேண்டுகோள்
    • பழுதாகி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 21-வது வார்டில் போலீசார் சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வனக்குமார் மற்றும் சாகுல் மொய்தீன் ஆகியோர் கூட்டத்தில் பேசும்போது, அனைத்து கடைகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் பாதுகாவலுக்கு கூர்க்காக்களை நிய மிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    பின்னர் பொதுமக்கள் பேசும்போது எங்கள் பகுதியில் இரவு-பகல் நேரங்களில் மப்டி யில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், சாலையோரங்களில் பழுதாகி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை சரிசெய்ய வேண்டும், ஒரு வழிச்சாலையாக உள்ள மெயின் பஜாரை வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை. மேலும் அங்கு இரு சக்கர வாகனங்கள் அதி கவேகத்தில் இயக்குகின்றனர்.

    அதை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    • குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிா்வாகம் செய்து தருவதில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    • இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், பொது மக்களின் கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததை அடுத்து போ ரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி 1-வது வாா்டுக்கு உள்பட்ட குளிச்சோலை பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதிக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

    மேலும், இப்பகுதியில் குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிா்வாகம் செய்து தருவதில்லை என்றும், அதிகாரிகள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களிடம் கூறினால் அலட்சியமான பதில்களையே அவா்கள் கூறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

    இப்பகுதிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பணிக்குச் செல்வோா், முதியவா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

    இந்நிலையில் குளிச்சோலை பகுதியில் சாலையை சீரமைத்துத் தர வேண்டும், பஸ் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    தகவல் அறிந்து வந்த புதுமந்து காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கவுன்சிலர் உடனடியாக இங்கு வர வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பஸ்சை விடுவிக்கமாட்டோம் என கிராம மக்கள் கூறினா்.

    இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், பொது மக்களின் கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததை அடுத்து போ ரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    • கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • செல்போன் சிக்னல் குஞ்சப்பனை பகுதியை காட்டியது.

    அரவேணு,

    கோத்தகிரி தெங்கரை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்.

    இவர் சம்பவத்தன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து பஸ்சில் கோத்தகிரிக்கு வந்தார்.

    அப்போது அவரின் செல்போன் மாயமானது.

    இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அவர்கள் டிராக்கர் டிவைஸ் நவீன கருவி உதவியுடன் கண்காணித்தனர்.

    இதில் அந்த செல்போன் சிக்னல் குஞ்சப்பனை பகுதியை காட்டியது.

    போலீசார் உடனடியாக அங்கு சென்று பாஸ்கரின் செல்போனை மீடடு ஒப்படைத்தனர். 

    • பந்தலூர் பகுதிகளில் ஒரு சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வருகிறது.
    • சிறுத்ைத வேட்டையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது.

    எனவே இங்கு காட்டு யானை, கரடி, காட்டு மாடு, சிறுத்தை, புலி ஆகிய வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் பந்தலூர் இந்திரா நகர், எம்.ஜி.ஆர் நகர், நத்தம், ரிச்மண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வருகிறது.

    அங்கு உள்ள வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்கிறது.

    இதற்கிடையே நத்தம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் இரவு நேரத்தில் ஒரு சிறுத்தைப்புலி புகுந்தது.

    தொடர்ந்து அங்கு உள்ள ஒரு வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடியது. பின்னர் இறைச்சியை வாயில் கவ்வி கொண்டு சென்றது.

    இந்த காட்சிகள் குடியிருப்பில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா மூலம் தெரியவந்தது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 

    • கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
    • கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. ஊர்வலத்தின் போது பதட்டமாக கண்டறி யப்பட்டு உள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் விமரிசையாக நடப்பது வழக்கம் வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இந்து முன்னணி சார்பில் ஊட்டி நகர பகுதிகள், மஞ்சூர், எமரால்டு, இத்தலார், காத்தாடி மட்டம், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

    கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் 30 சிலைகள் என மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதுதரவி பல்வேறு கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. ஊட்டியில் இந்து முன்னணி சார்பில் வருகிற 20-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காமராஜர் சாகர் அணையில் கரைக்க ப்படுகிறது. அனுமன் சேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் வருகிற 21-ந் தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்ப டுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக ஊட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து ள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது. ஊர்வலத்தின் போது பதட்டமாக கண்டறி யப்பட்டு உள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வெளி மாவட்ட போலீசார் வர வழைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊட்டியில் நேற்று நடந்தது. தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய அணிவகுப்பு, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, அப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையத்தை சென்ற டைந்தது.

    அதேபோல காந்தலிலும் அணிவகுப்பு நடத்தப்ப ட்டது. இந்த அணிவகுப்பில் ஆயுதம் ஏந்திய போலீசார் பங்கேற்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்த ராஜன், டி.எஸ்.பி.க்கள் யசோதா, விஜயலட்சுமி மற்றும் காவல்துறை உயர்அ திகாரிகள் கலந்து கொண்டனர்.   

    • தொடர்ந்து குட்டையில் இறங்கிய காட்டு யானை தண்ணீரில் குளித்து மகிழ்ந்தது.
    • இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தங்கள் செல்போனில் இந்த காட்சிகளை வீடியோ எடுத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கேரள எல்லைக்கு அருகில் உள்ள கெத்தை, பரளிக்காடு பகுதியில் தமிழக அரசின் மின்சார வாரிய குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை வந்தது. அந்த யானை அங்குமிங்குமாக சுற்றி திரிந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு சிறிய குட்டையில் தண்ணீர் இருப்பதை பார்த்ததும் யானை அதனை நோக்கி ஓடி சென்றது.

    தொடர்ந்து குட்டையில் இறங்கிய காட்டு யானை தண்ணீரில் குளித்து மகிழ்ந்தது. மேலும் அங்கிருந்த சேற்றை எடுத்து தனது உடல் முழுவதும் பூசி கொண்டது.

    அதன்பிறகு வனப்பகுதிக்குள் யானை சென்றுவிட்டது. வனப்பகுதியில் கொசுக்கள் மற்றும் விஷப் பூச்சிகள் அதிகம் உண்டு. அவற்றின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டி காட்டு யானை சேற்றுக்குளியலில் ஈடுபட்டதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தங்கள் செல்போனில் இந்த காட்சிகளை வீடியோ எடுத்தனர். பின்னர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    • ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது.
    • அடர்ந்த காடுகள், பச்சைப்பசேல் மரங்கள், பனி படர்ந்த மேகக்கூட்டங்களாக காட்சி அளிக்கிறது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடல் மட்டத்தில் இருந்து 2196 மீட்டர் உயரத்தில் பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது. இது உலகச் சிறப்புமிக்க நீலகிரி மலைத் தொடரில் அமைந்து உள்ளது.

    அங்கு உள்ள அடர்ந்த இயற்கைக் காடுகள், பலவிதமான காட்டுயிர்கள், பல வகைத் தாவரங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளின் கண்களுடன் மனதையும் மகிழ வைப்ப வை ஆகும். தூய்மையான காற்று, பனிபடர்ந்த மேகக் கூட்டத்துடன் இயற்கை எழில்கொஞ்சம் பகுதியாக உள்ளது.

    ஆங்கிலேயப் பொறி யாளர் பார்சன் ஹட்சன் என்பவர் கடந்த 1862-ம் ஆண்டு இந்த பகுதியில் அழகான இடத்தை தேர்வு செய்து பாதை வகுத்து வழி ஏற்படுத்தித் தந்தார். எனவே அந்த பகுதி இவரது பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

    குளிர் காலத்தில் மிகுந்த குளிர், மழைக்காலத்தில் மிகுந்த மழை, கோடை க்காலத்தில் குறைந்த வெப்பம் என்று அற்புத சூழலுடன் விளங்குகிறது. அதுவும் தவிர ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது.

    ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து 2 குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போது 3வது குடிநீர் திட்டத்துக்கான பணிகளும் நடந்து வருகி ன்றன. இன்னொருபுறம் புனல் மின்உற்பத்தியும் நடந்து வருகிறது.

    பார்சன்ஸ்வேலி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும். இங்கு தற்போது 33.59 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. பார்சன் வேலி க்கான நீர்பிடிப்புப்பகுதி, 202 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்து உள்ளது.

    இதேபோல பார்சன்ஸ் பள்ளத்தாக்கு பாதுகாக்க ப்பட்ட வனமாக உள்ளது. இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வ லர்களுக்கு முழுமையான இன்பம் தரும் சுற்றுலாத்தலம் ஆகும்.மரங்களின் தடையற்ற வளர்ச்சியும், படர்தாமரை களும், ஊர்ந்து செல்லும் பறவைகளின் சப்தமும், ஒருசில நேரங்க ளில் புலியின் உறுமல்களும் சுற்றுலா பயணிகளின் கற்ப னையை கவர்ந்திழுக்கும். பார்ச ன்ஸ்வேலி பள்ள த்தாக்கு பகுதிகளில் காட்டெரு மை களை அதிகம் பார்க்க முடியும். காட்டுப்பாதை செல்லும் வழியில் இருபக்கமும் செறிந்து நிற்கும் அடர்ந்த காடுகள், பச்சைப்பசேல் மரங்கள், பனி படர்ந்த மேகக்கூட்டங்கள் மற்றும் சிறு, சிறு நீரோடைகளை கடந்து செல்வது மனதிற்கு உற்சாகம் தரும் அனுபவமாக உள்ளது.

    ஊட்டியில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதி. இயற்கையை நேசிப்பவர்களுக்கு உகந்த இடம். பார்க்க பார்க்க பரவசம் தரும் பார்சன்ஸ்வேலி, ஊட்டி யின் தாகம் தீர்க்கும் அணையாக உள்ளது. இயற்கை அன்னையின் ஆட்சியின் கீழ் உள்ள அற்பு தமான இடம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். அங்கு உள்ள பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு மனநிறைவுடன் திரும்பி வருகின்றனர்.

    • 100க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் கலந்து கொண்டனர்.
    • விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    கோத்தகிரி அடுத்த சிறியூர் கிராமத்தில் பழங்குடியின பெண்களுக்கான மகப்பேறு மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதனை ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழுமம், புதுடெல்லி அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தியது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் கலந்து கொண்டனர்.கல்லூரி பேராசிரியர்கள் வடிவேலன், கவுரம்மா, கோமதி சானீஸ், தீபாலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு மாதவிடாய் மற்றும் மகப்பேறு ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன்பிறகு விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தனபால், நிர்வாக செயலாளர் கோமதி சுவாமிநாதன், மருந்தாக்கவியல் வேதியியல் துறை தலைவர் காளிராசன் மற்றும் ஊர் தலைவர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி நிர்வாக செயலாளர் பிரியங்கா நன்றி கூறினார்.

    • தமிழ்நாட்டுக்கு அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று ஜூலை 18ந்தேதி பெயர் சூட்டினார்.
    • பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியி ட்டு உள்ள செய்திக்கு றிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டுக்கு அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று ஜூலை 18ந்தேதி பெயர் சூட்டினார். அன்றுமுதல் தமிழ்நாடு நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பேரணி நாளை நடக்க உள்ளது.

    ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கும் பேரணி, கமர்ஷியல் சாலை வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முடிகிறது.

    இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து சேரிங்கிராஸ் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்து றை சார்பில் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு மற்றும் அரசின் திட்டங்கள் ஆகியவை குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட உள்ளது.

    இது நாளை முதல் வருகிற 23ந்தேதிவரை 5 நாட்கள் நடக்கும். இதனை பொதுமக்கள் கண்டுகளித்து பயன்பெறலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    • ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஜூலை 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ெரயில்வே அறிவி த்துள்ளது.
    • ஆன்லைனில் முன்பதிவு செய்து பதிவு செய்து பயணம் செய்யலாம்.

    ஊட்டி,

    ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஜூலை 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ெரயில்வே அறிவி த்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    உலக புகழ்பெற்ற ஊட்டி மலை ரெயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு ஊட்டி சென்ற டையும். ஊட்டி கோடை சீசனையொட்டி சுற்றுலா ப்பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் கடந்த ஒரு மாதமாக சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் சேவை ஜூன் 30-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில், கோடை சீசன் முடிவடைந்த நிலையிலும், சுற்றுலா ப்பயணிகள் தொடர்ந்து மலை ரெயிலில் பயணி ப்பதால் அவர்களின் வசதி க்காக சிறப்பு மலை ரெயில் சேவை ஜூலை 30-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கி ழமைகளில் இயக்கப்பட உள்ளது.

    இதன்படி, ஜூலை 1-ந் தேதி முதல் சனிக்கிழமை களில் மேட்டுப்பாளை யத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் மலை ரெயில் பகல் 2.45 மணிக்கு ஊட்டி சென்றடையும். இதேபோல் ஜூலை 2-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கி ழமைகளில் ஊட்டியில் இருந்து முற்பகல் 11.25 மணிக்குப் புறப்படும் மலை ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

    தினசரி இயக்கப்படும் ஊட்டி மலை ரெயிலுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதுபோல, இந்த சிறப்பு ரெயிலுக்கும் (வண்டி எண். 06171, 06172) ஆன்லைனில் முன்பதிவு செய்து பதிவு செய்து பயணம் செய்யலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • சுற்றுலா பயணி களும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
    • தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி,

    குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டி நகரின் நுழைவு வாயில் சேரிங்கிராஸ் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒரு மாத காலமாக கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் கழிவுநீர் வழிந்து ஓடுகின்றது. இதன் அருகில் கண் ஆஸ்பத்திரியும் செயல்பட்டு வருகிறது. வயதானவர்களும் சிகிச்சைக்காக வருபவ ர்களும் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்பத்திரி பின்புறம் கழிவு நீர் தேங்கி செடிகளுக்கு உரமாக நிற்கின்றது.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. மேலும் போக்குவரத்து போலீஸ் துறையினர் அதற்கான தடுப்பை வைத்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

    ஆனால் பாதசாரிகள் மீதும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் மீதும் வாகனங்கள் செல்லும் பொழுது கழிவுநீர் தெளித்து வருகிறது. இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. இதன் கார ணமாக பொது மக்க ளும், சுற்றுலா பயணி களும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு ள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் துரிதமாக செயல்பட்டு கழிவுநீர் கால்வாயில் அடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கூடலூா் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களால் மக்கள் பெரிதும் பயன் அடைந்து உள்ளனா்.

    ஊட்டி,

    கூடலூா் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. சட்டப்பேரவை கொறடா வும், முன்னாள் அமைச்ச ருமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பிறகு எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களால் மக்கள் பெரிதும் பயன் அடைந்து உள்ளனா். எனவே வருகிற பாராளுமன்ற தோ்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். அதைத் தொடா்ந்து சட்டப்பேரவைத் தோ்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் தி.மு.க. அரசு மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களையும் தரவில்லை. ஆனால் 2 ஆண்டு சாதனைகள் என்ற பெயரில் தற்போது பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு செயல்படாத நிலையில் உள்ளது. இதை பொதுமக்கள் நன்கு உணா்ந்து உள்ளனா்.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் கப்பச்சி வினோத், கூடலூா் எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன், மாநில வா்த்தக அணித் தலைவா் சஜீவன், முன்னாள் குன்னூா் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, முன்னாள் மாவட்டச் செயலாளா் அா்ச்சுனன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    ×