search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists flock"

    • சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை அதிகரி த்துள்ளதால் பொதுமக்கள் அவதி க்குள்ளாகி வருகின்றனர்.
    • விடுமுறை நாளான இன்று கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை அதிகரி த்துள்ளதால் பொதுமக்கள் அவதி க்குள்ளாகி வருகின்றனர்.

    இதனால் மலை ஸ்தலங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். விடுமுறை நாளான இன்று கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் ஏரிச்சாலையை சுற்றி ஏராளமானோர் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். தூண்பாறை பகுதியில் யானைகள் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வாகன ங்களால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்து.

    சீசன் மற்றும் விடுமுறை காலங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிக சுற்றுலா பயணிகள் வந்ததால் சிறு குறு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது.
    • அடர்ந்த காடுகள், பச்சைப்பசேல் மரங்கள், பனி படர்ந்த மேகக்கூட்டங்களாக காட்சி அளிக்கிறது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடல் மட்டத்தில் இருந்து 2196 மீட்டர் உயரத்தில் பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது. இது உலகச் சிறப்புமிக்க நீலகிரி மலைத் தொடரில் அமைந்து உள்ளது.

    அங்கு உள்ள அடர்ந்த இயற்கைக் காடுகள், பலவிதமான காட்டுயிர்கள், பல வகைத் தாவரங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளின் கண்களுடன் மனதையும் மகிழ வைப்ப வை ஆகும். தூய்மையான காற்று, பனிபடர்ந்த மேகக் கூட்டத்துடன் இயற்கை எழில்கொஞ்சம் பகுதியாக உள்ளது.

    ஆங்கிலேயப் பொறி யாளர் பார்சன் ஹட்சன் என்பவர் கடந்த 1862-ம் ஆண்டு இந்த பகுதியில் அழகான இடத்தை தேர்வு செய்து பாதை வகுத்து வழி ஏற்படுத்தித் தந்தார். எனவே அந்த பகுதி இவரது பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

    குளிர் காலத்தில் மிகுந்த குளிர், மழைக்காலத்தில் மிகுந்த மழை, கோடை க்காலத்தில் குறைந்த வெப்பம் என்று அற்புத சூழலுடன் விளங்குகிறது. அதுவும் தவிர ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது.

    ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து 2 குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போது 3வது குடிநீர் திட்டத்துக்கான பணிகளும் நடந்து வருகி ன்றன. இன்னொருபுறம் புனல் மின்உற்பத்தியும் நடந்து வருகிறது.

    பார்சன்ஸ்வேலி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும். இங்கு தற்போது 33.59 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. பார்சன் வேலி க்கான நீர்பிடிப்புப்பகுதி, 202 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்து உள்ளது.

    இதேபோல பார்சன்ஸ் பள்ளத்தாக்கு பாதுகாக்க ப்பட்ட வனமாக உள்ளது. இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வ லர்களுக்கு முழுமையான இன்பம் தரும் சுற்றுலாத்தலம் ஆகும்.மரங்களின் தடையற்ற வளர்ச்சியும், படர்தாமரை களும், ஊர்ந்து செல்லும் பறவைகளின் சப்தமும், ஒருசில நேரங்க ளில் புலியின் உறுமல்களும் சுற்றுலா பயணிகளின் கற்ப னையை கவர்ந்திழுக்கும். பார்ச ன்ஸ்வேலி பள்ள த்தாக்கு பகுதிகளில் காட்டெரு மை களை அதிகம் பார்க்க முடியும். காட்டுப்பாதை செல்லும் வழியில் இருபக்கமும் செறிந்து நிற்கும் அடர்ந்த காடுகள், பச்சைப்பசேல் மரங்கள், பனி படர்ந்த மேகக்கூட்டங்கள் மற்றும் சிறு, சிறு நீரோடைகளை கடந்து செல்வது மனதிற்கு உற்சாகம் தரும் அனுபவமாக உள்ளது.

    ஊட்டியில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதி. இயற்கையை நேசிப்பவர்களுக்கு உகந்த இடம். பார்க்க பார்க்க பரவசம் தரும் பார்சன்ஸ்வேலி, ஊட்டி யின் தாகம் தீர்க்கும் அணையாக உள்ளது. இயற்கை அன்னையின் ஆட்சியின் கீழ் உள்ள அற்பு தமான இடம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். அங்கு உள்ள பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு மனநிறைவுடன் திரும்பி வருகின்றனர்.

    • கொடிவேரி அணைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து இருந்தனர்.
    • விற்பணை செய்யப்படும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராள மான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகள வில் காணப்படும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சனிக்கிழ மை மற்றும் ஞாயிற்றுக்கி ழமை என தொடர் விடுமுறை நாட்கள் வந்த தால் கொடிவேரி தடுப்ப ணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    கொடிவேரி அணைக்கு நேற்று சனிக்கிழமை என்ப தால் ஆயிர க்கணக்கான பொதுமக்கள் வந்து இருந்தனர்.

    இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்தி னருடன் வந்தி ருந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்த காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலை மோதியது.

    தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக இளைஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் இன்று கொடிவேரி எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது. குடும்ப த்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளி பகுதியில் அமர்ந்து சாப்பிட்ட னர்.

    மேலும் அங்கு விற்பணை செய்யப்ப டும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    • வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
    • கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ஈரோடு:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் புனித வெள்ளி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தெடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்கள் வந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களாக கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் குளித்து குதூகளித்து செல்கிறார்கள்.

    இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு பொதுமக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்த காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது.

    தொடர்ந்து வெயிலின் தாக்கத்தில் இருந்த மக்கள் கொட்டும் தண்ணீரை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக இளைஞ ர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். இதனால் இன்று கொடிவேரி எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்ப ட்டது.

    குடும்பத்துடன் கொடி வேரி வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பணை செயய்ப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    • வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இன்று திறக்கப்பட்டது
    • ஊரகப்பகுதிகளிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் கோவை குற்றாலத்திற்கு நீர்வரத்து அதிகரித்தது.

    கோவை,

    கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்து ள்ளது கோவை குற்றாலம். கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த பகுதிக்கு உள்ளூர் வாசிகளும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர்.

    இதனிடையே மாண்டஸ் புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது.

    கோவை மாநகர் மற்றும் ஊரகப்பகுதிகளிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் கோவை குற்றாலத்திற்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கோவை குற்றாலம் கடந்த 14-ந் தேதி மூடப்பட்டது.

    தொடர்ந்து பெய்து வந்த மழையினால் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளை அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.

    இதனால், பலர் சாடிவயல் பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து வந்தனர்.

    இதனிடையே தண்ணீர் வருவது குறைந்ததால் கோவை குற்றாலம் மீண்டும் இன்று திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

    இதனையடுத்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலை 10 மணி முதல் 11 மணி வரையும், 11.30 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை என்ற கால அட்டவணையின் அடிப்படையில் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    • கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
    • மழை ஓய்ந்த நிலையில் கடும் குளிர் வாட்டி வருகிறது. இருந்தபோதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் கடும் குளிர் வாட்டி வருகிறது. இருந்தபோதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து தேனிலவு கொண்டாட வரும் இளம்ஜோடிகள் வருகை அதிகமாக உள்ளது. மோயர் சதுக்கம், பைன்மரக்காடு, குணா குகை, பசுமைப்பள்ளத்தாக்கு, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, படகு குழாம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் குவிந்தனர். ஒரு சில வாரங்களுக்கு பின் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதால் சிறுகுறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அடுத்த மாதம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×